Followers

Thursday, March 28, 2013

நீங்கள் பிரபலமாக வேண்டுமா? பரிகாரம்



வணக்கம் நண்பர்களே !
                     ஒரு மனிதன் பிரபலமாக அனைவருக்கும் தெரிவதற்க்கு குரு கிரகம் அவர்களின் சுயஜாதகத்தில் நல்ல முறையில் அமரவேண்டும். குரு கிரகம் நல்ல முறையில் அமரும்போது மட்டுமே அனைவராலும் அவர் நல்லவர் என்று போற்றப்படுவார். பிரபலமாகுவார். ஒரு சிலர் நிறைய பணம் வைத்திருப்பார்கள் ஆனால் அவரை வெளியில் எவருக்கும் தெரியாது எப்படியாவது வெளியில் தெரியவேண்டும் என்று போராடிப்பார்ப்பார்கள் அவர்களால் ஒன்றும் செய்யமுடியாது.

உங்களின் ஜாதகத்தில் குரு கிரகம் நல்லமுறையி்ல் அமர்ந்து அவரின் தசா நடக்கும்போது நீங்கள் பிரபலமாகிவிடுவீர்கள். அப்படி உங்களின் ஜாதகத்தில் குரு நல்லபடியாக அமரவில்லை என்றால் எப்படி பிரபலமாகுவது. குரு தான் காரகம் வகிக்கிறார் என்னும்போது அவரை பிடிக்கவேண்டியது உங்களின் பொருப்பு. அவரை எப்படி பிடிப்பது?

குரு கிரகத்திற்க்கு தெட்சிணாமூர்த்தி காரகம் வகிக்கிறார் அவரை வியாழக்கிழமை தோறும் சென்று தீபம் ஏற்றி வணங்கவேண்டும். ஏழுவாரம் நெய்தீபம் ஏற்றிவரவேண்டும். அப்படி நெய்தீபம் ஏற்றிவிட்டு குறைந்தது 20 நிமிடமாவது அவரின் முன் அமைதியாக அமர்ந்து நான் பிரபலமாகிவிட வேண்டும் என்று பிராத்தனை செய்யுஙகள். 

கடைசியாக ஏழாவது வாரம் தெட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம் செய்யுங்கள். அப்பொழுது உங்களின் பிராத்தனையை அவர் ஏற்றுக்கொண்டு நீங்கள் இருக்கும் துறையில் உங்களின் ஊரில் பிரபலமாக்கிவிடுவார். உங்களின் கோரிக்கை உங்களின் துறை சார்ந்தாக இருக்கும்போது நீங்கள் இருக்கும் துறையில் நீங்கள் பிரபலமாகிவிடுவீர்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: