Followers

Thursday, March 21, 2013

ரிஷபம் : ஐந்தில் செவ்வாய் + சனி



வணக்கம் நண்பர்களே!
                     ரிஷப ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு ஐந்தில் செவ்வாய் சனி சேர்ந்து நின்றால் முன் ஜென்மத்தில் எப்படிபட்ட பாவத்தை செய்திருப்பார்கள் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

ரிஷப ராசிக்கு ஐந்தாவது வீடாக வருவது கன்னி அதன் அதிபதி புதன். செவ்வாய் கிரகத்திற்க்கு பகை வீடு சனி கிரகத்திற்க்கு நட்பு வீடு. 

உங்களால் பாதிக்கப்பட்ட நபர்?

இவரின் குழந்தைகள்,சகோதர்கள், மாமன்கள் மற்றும் வேலையாட்கள். 

எந்த இடத்தில் அவரை தாக்கியிருப்பீர்கள்?

கன்னி ராசியில் உத்திரம் நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உடல் தலையின் பாகங்களில் மற்றும் கால்களில் தாக்கியிருக்க கூடும்.

கன்னி ராசியில் ஹஸ்த நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

முகத்தில் தாக்கிருக்ககூடும் மற்றும் வயிற்றில் தாக்கியிருக்ககூடும்.

கன்னி ராசியில் சித்திரை நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

கையை தாக்கி அதிக ரத்தம் வெளிவந்ததால் அவர் இறந்திருக்ககூடும். மற்றும் கால்களிலும் தாக்கியிருக்ககூடும்.

அடையாளம்?

கன்னி ராசியில் உத்திரம் நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருப்பார். தாய்மொழி மற்றும் சமஸ்கிரத மொழி தெரிந்திருக்கும்.மிதமான உயரமாக இருப்பார்.இவரின் வீடு கிழக்கு பக்கமாக அமர்நதிருக்கும்.

கன்னி ராசியில் ஹஸ்த நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் வெண்மை நிறத்தில் இருப்பார். குள்ளமானவராக இருந்திருப்பார். தாய்மொழி மட்டும் தெரிந்திருக்கும். இவரின் வீடு வடமேற்கில் இருந்திருக்கும்.

கன்னி ராசியில் சித்திரை நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருப்பார்.தாய்மொழி தெலுங்கு பேசுவார். உயரமானவாராக இருந்திருப்பார். இவரின் வீடு தெற்கு பக்கம் இருந்திருக்கும்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

கன்னி ராசியில் உத்திரம் நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து கிழக்கு அல்லது வடகிழக்கில் இருப்பார்.

கன்னி ராசியில் ஹஸ்த நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து வடமேற்கு அல்லது வடகிழக்கில் இருப்பார்

கன்னி ராசியில் சித்திரை நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து தெற்க்கு திசையில் மற்றும் வடகிழக்கு திசையில் இருப்பார்.

மேலும் விளக்கம்

சனி கிரகம் செவ்வாய் கிரகமும் ஒரு ஜாதகத்தில் இணையும்போதோ அல்லது ஒன்றை ஒன்று பார்த்துக்கொள்ளும்போது அதிக பிரச்சினையை அந்த ஜாதகருக்கு கொடுக்கும். சனி பஞ்சபூதத்தில் காற்று கிரகம் செவ்வாய் நெருப்பு கிரகம் இரண்டும் பூர்வ புண்ணியத்தில் இணையும்போது அதிகமான சிக்கலை ஏற்படுத்தும்.

இதனைப் படித்துவிட்டு நீங்கள் நமக்கு தான் இப்படி ஆகிவிட்டது அதனால் நமக்கு பிரச்சினை தான் என்று அப்படியே உட்கார்ந்துவிடாமல் இதிலிருந்து நாம் மீள்வது எப்படி என்பதை மட்டும் பார்க்கவும்.

பரிகாரம்

இரண்டு கிரகத்தையும் சாந்தப்படுத்தி பிறகு சம்பந்தப்பட்டவரை நீங்கள் தேடி வாருங்கள் கண்டிப்பாக இறைவன் உங்களுக்கு அருள் புரிவான். கர்மவினையிருந்து நீங்கள் தப்பித்துக்கொள்ளலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: