Followers

Tuesday, April 30, 2013

ஆன்மீக அனுபவங்கள் 87


வணக்கம் நண்பர்களே!
                    பல நண்பர்கள் ஆன்மீக தேடுதலோடு தான் நமது பதிவுக்கும் வருகிறார்கள் அவர்களுக்கும் நாம் விடை கொடுக்க வேண்டும் என்பதால் பல ஆன்மீக பதிவுகளை எழுதுகிறேன்.

நாம் ஆன்மீக தேடுதலோடு கோவில் சென்றால் மட்டும் நாம் ஆன்மீகவாழ்க்கை உயர்த்திக்கொள்ள முடியாது. நல்ல ஆன்மீகவாதிகளின் தொடர்பும் உங்களுக்கு வேண்டும் அப்பொழுது மட்டுமே ஆன்மீகவாழ்க்கை சாத்தியப்படும். நல்ல ஆத்மாவுடன் நாம் தொடர்பை வைத்துக்கொள்ளும்போது நமது ஆத்மாவும் சுத்தப்படும். நமது கர்மவினைகள் குறையும். கர்மவினைகள் குறைய குறைய ஆன்மீகவாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்க்கு செல்லாம்.

இன்றைய உலகத்திலும் பல புண்ணியஆத்மாக்கள் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் தங்களை வெளிக்காட்டிக்கொள்வது கிடையாது. அவர்கள் சாதாரணமானவர்களா இருக்கிறார்கள். அவர்களை நாம் தான் தேடி கண்டுபிடிக்கவேண்டும்.

பல சிவனடியார்கள் பைத்தியம் போல் சுற்றிவார்கள். அவர்கள் யாரிடமும் பேசுவது கிடையாது. ஒரு சில நேரங்களில் பேசுவார்கள். அவர்கள் உங்களி்டம் பேசிவிட்டால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலி.  அதிர்ஷ்டசாலி என்றால் உடனே பணம் வரப்போகிறது என்று நினைக்க வேண்டாம். ஆத்மாவின் பலம் உள்ளவர் உங்களை ஆசிர்வதிப்பார். அவர்கள் ஆசி கிடைத்தாலே போதும்.

ஒரு நிகழ்வை மட்டும் உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன். நான் எனது குரு அறிமுகம் ஆவதற்க்கு முன்பு அடிக்கடி திருவண்ணாமலை செல்வது வழக்கம்.  கிரிவலம் செல்வது மட்டும் இல்லாமல் அடிக்கடி சாமி தரிசனம் செய்வதற்க்கு செல்வேன். திருவண்ணாமலை சாமி தரிசனம் முடித்துவிட்டு மேல்மலையனூர் சென்று அம்மனை பார்த்துவிட்டு சென்னை திரும்புவேன்.

அக்னி நட்சத்திரம் ஆரம்பம் ஆன தேதியில் இருந்து முடிவதற்க்குள் நான் அண்ணாமலையாரை எப்படியும் தரிசனம் செய்துவிடுவது எனது வழக்கம். ஏன் என்றால் அக்னி உச்சத்தில் இருக்கும்போது அக்னி ஸ்தலமான அண்ணாமலையாரை வணங்குவது எனக்கு பிடித்தமான ஒன்று. அக்னி நட்சத்திரத்தில் வணங்கவேண்டும் என்பது நானாகவே ஏற்படுத்திக்கொண்ட ஒரு பழக்கம் வேறு புத்தகத்தில் இதனைப்பற்றி சொல்லவில்லை.

அக்னி நட்சத்திரத்தில் ஒரு நாள் அண்ணாமலையாரை வணங்கிவிட்டு வெளியில் வரும்பொழுது கோவிலுக்குள் குளம் இருக்கிறது அல்லவா. அந்த குளத்தின் நடுவில் ஒரு உருவம் எனது கண்களு்ககு நன்றாக தெரிகிறது. என்னுடன் எனது நண்பர் ஒருவர் வந்தார் அவனிடம் டேய் உனக்கு ஒரு உருவம் தெரிகிறாதா என்று கேட்டேன். அவன் எனக்கு தெரியவில்லை என்று சொல்லுகிறான். அந்த உருவம் உடனே மறைந்துவிட்டது. 

நானும் நம்ம கண்கள் தான் சரியில்லையோ என்று நினைத்துக்கொண்டு அதிலிருந்து நேராக ரமணர் வணங்கிய ஒரு பாதாளலிங்க கோவில் ஒன்று இருக்கிறது அல்லவா. அந்த கோவிலுக்குள் சென்று அவரை வணங்கிவிட்டு வெளியில் வரும்பொழுது நான் எனது நண்பனிடம் சொல்லுகிறேன் இந்த கோவிலுக்கு வந்தால் தான் எனக்கு ஏதாவது நடைபெறுகிறது என்று சொல்லுகிறேன். உடனே அந்த கோவிலில் பல்லி சத்தம் இடுகிறது. நான் ஒன்றும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மேல்மலையனூர் சென்றுவிட்டு சென்னை வந்துவிட்டேன். 

சென்னையில் அன்று இரவு தூங்கும்பொழுது அண்ணாமலையார் கோவிலில் நடந்தது என் கண் முன்பே அந்த உருவம் வந்தது. அந்த உருவம் என் தலையில் கை வைத்தது. முதன் முதலில் அற்புதமான ஒரு புதிய உணர்வை அப்பொழுது தான் நான் பெற்றேன். அதன் பிறகு குரு அறிமுகம் எல்லாம் நடைபெற்றது.

இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் நாம் கோவிலுக்கு சென்றாலும் சந்திக்கும் நபர்களும் நமக்கு பலவிதத்தில் ஆன்மீகவாழ்க்கைக்கு உதவுவார்கள். அவர்களை நீங்கள் பயன்படுத்தும்பொழுது உங்களின் ஆன்மீகவாழ்க்கைக்கு மிகப்பெரிய தொடக்கம் நடைபெறும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

கும்பம்: ஐந்தில் கேது




வணக்கம் நண்பர்களே!
                     கும்ப ராசிக்கு ஐந்தில் கேதுகுரு நின்றால் முன் ஜென்மத்தில் இவர் என்ன பாவம் செய்திருப்பார் இவரால் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பதை பார்க்கலாம்.

இவரால் பாதிக்கப்பட்ட நபர் யார்?

மாமன்களாக இருக்ககூடும்.

அடையாளம்?

மிதுன ராசி மிருகசிரிஷம் 3, 4 ம் பாதங்களில் கேது பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருந்திருப்பார். தெலுங்கு மொழி பேசியிருப்பார். இவரின் வீடு தெற்க்கு பக்கமாக இருந்திருக்கும்.

மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் கருப்பு நிறமாக இருந்திருப்பார்.அந்நிய மொழி பேசியிருப்பார். இவரின் வீடு தென்மேற்கு திசையில் இருந்திருக்கும்.

மிதுன ராசி புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்களில் கேது பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் பொன்நிறம்போல் தோற்றம் அளிக்கும். மலையாள மொழி தெரிந்திருக்கும். இவரின் வீடு வடகிழக்கு திசையில் இருந்திருக்கும்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

மிதுன ராசி மிருகசிரிஷம் 3, 4 ம் பாதங்களில் கேது பகவான் அமர்ந்தால்

கை மற்றும் தோல் பகுதியில் தாக்கி இறந்திருக்கலாம்.

மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்

கால்கள் மற்றும் பாதங்களில் தாக்கி உயிர்போயிருக்ககூடும்.

மிதுன ராசி புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்களில் கேது பகவான் அமர்ந்தால்

இதயத்தில் தாக்கி கொன்றுருக்ககூடும். 

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

மிதுன ராசி மிருகசிரிஷம் 3, 4 ம் பாதங்களில் கேது பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு தெற்கு திசையில் இருக்கும். 

மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு தென்மேற்கு திசையில் இருக்கும். 

மிதுன ராசி புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்களில் கேது பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடகிழக்கு மற்றும் தென்மேற்கு திசையில் இருக்கும். 

பரிகாரம்

புதன்கிழமை தோறும் பெருமாள் மற்றும் கேதுவை வணங்கி வாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

மகரம்: ஐந்தில் கேது



வணக்கம் நண்பர்களே!

                     மகர ராசிக்கு ஐந்தில் கேது நின்றால் முன் ஜென்மத்தில் இவர் என்ன செய்திருப்பார். இவரால் பாதிக்கப்பட்ட நபர் எப்படி இருந்திருப்பார் என்பதை இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

இவரால் பாதிக்கப்பட்ட நபர் யார்?

பெண்களாக இருக்ககூடும்.

அடையாளம்?

ரிஷப ராசியில் கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்களில் கேது பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருந்திருப்பார். சமஸ்கிரத மொழி பேசியிருப்பார். இவரின் வீடு கிழக்கு பக்கமாக இருந்திருக்கும்.

ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் வெள்ளை கலரில் இருந்திருக்கலாம். தாய்மொழி பேசியிருப்பார். இவரின் வீடு வடமேற்கு திசையில் இருந்திருக்கும்.

ரிஷப ராசியில் மிருகசீர்ஷம் 1, 2 ம் பாதங்களில் கேது பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருந்திருப்பார். தெலுங்கு மொழி பேசியிருப்பார். இவரின் வீடு தெற்கு திசையில் இருந்திருக்கும்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

ரிஷப ராசியில் கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்களில் கேது பகவான் அமர்ந்தால்

தலையில் தாக்கி கொல்லபட்டுருப்பார்.

ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்

முகத்தில் அல்லது வயிற்றில் தாக்கி அதன் மூலம் நோய் ஏற்பட்டு இறந்திருப்பார்.

ரிஷப ராசியில் மிருகசீர்ஷம் 1, 2 ம் பாதங்களில் கேது பகவான் அமர்ந்தால்

கை மற்றும் தோல் பகுதியில் தாக்கி இறந்திருக்கலாம்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

ரிஷப ராசியில் கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்களில் கேது பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடமேற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

ரிஷப ராசியில் மிருகசீர்ஷம் 1, 2 ம் பாதங்களில் கேது பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு தெற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும்.

பரிகாரம்

வெள்ளிக்கிழமையில் விநாயகர் மற்றும் அம்மனை வணங்கி வாருங்கள்.  எமகண்ட நேரமாக இருந்தால் உகந்தது.
நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Monday, April 29, 2013

வியாபார ஆலோசனை :விளக்கம்



வணக்கம் நண்பர்களே!
                     நேற்று வெளியிட்ட தொழில் செய்யும் நண்பர்களுக்கு என்ற பதிவை படித்துவிட்டு பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு பேசிவருகிறார்கள். பல நண்பர்கள் ஒரு சில கருத்துக்களை கேட்டார்கள் அவர்கள் வழியாக புதிய நண்பர்களுக்கும் எளிதில் விளக்கம் தருவதற்க்காக இந்த பதிவு.

நீங்கள் கூட்டுத்தொழில் புரிபவர்களாக இருந்தால் தொடர்புக்கொள்ள வேண்டாம். கூட்டுத்தொழில் செய்பவர்கள் உங்களின் பங்குதாரர்கள் அனைவரும் சேர்ந்து வந்து என்னை நேரில் சந்தித்து பேசினால் உங்களுக்கு உதவமுடியும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் ஒரு நபர் மட்டும் வந்து பேசினால் உங்களுக்கு என்னால் உதவிச்செய்ய முடியாது. பல கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கும் நான் உதவி செய்துக்கொண்டு வருகிறேன். அவர்கள் அனைவரும் சேர்ந்து என்னை வந்து சந்தித்து பேசினதால் அவர்களுக்கு உதவ முடிகிறது. 

பங்குவர்த்தகத்தில் உள்ள நபர்கள் பல பேர் தொடர்புக்கொண்டு பேசினார்கள். உங்களுக்கு என்னால் உதவ முடியாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். பங்குவர்த்தகம் பல சிக்கல்களை கொண்டது. அதில் வென்று வருவது என்றால் வணிகம் நடைபெறும் இடத்தில் நான் இருந்ததால் தான் முடியும். என்னால் உறுதி தரமுடியாத சூழ்நிலை இதில் இருப்பதால் நான் ஈடுபடுவதில்லை. 

என்னால் 100 சதவீதம் வெற்றியை தரமுடியும் என்ற நம்பிக்கை இருக்கும் வணிகத்தில் மட்டும் இறங்குகிறேன். பங்குவர்த்தகத்தில் நம்பிக்கை வைக்கமுடியாத சூழ்நிலை இருக்கிறது. அதனால் இதில் ஒற்றுக்கொள்வதில்லை. 

வராத பணவரவுகளை திருப்பிவருவதற்க்கு ஏற்பாடு செய்து தாருங்கள் என்று பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு பேசினார்கள். இந்த வேலையில் கண்டிப்பாக இறங்ககூடாது என்று எனது குரு கட்டளை போட்டு இருக்கிறார். அவர் என்னிடம் சொல்லும்போது இவன் பணம் கொடுத்திருப்பான் பணத்தை வாங்கியவன் உண்மையில் கஷ்டத்தில் இருக்கலாம் அவனை ஏன் தொந்தரவு செய்யவேண்டும். இதனை நீ செய்யகூடாது என்று சொல்லியுள்ளார். அதனால் இந்த வேலையை நான் செய்யமாட்டேன்.

நண்பர்களே என்ன இவர் வியாபாரத்தில் இறங்கிவிட்டார் என்று நினைக்கலாம். நான் சந்நியாசி தீட்சை பெறவில்லை என்பதை சொல்லிக்கொள்கிறேன். நான் சோதிடன் தான் உங்களை போல் அனைத்து பழக்கவழக்கம் என்னிடம் இருக்கிறது. எனக்கு பணம் தேவை அதற்கு என்னுடைய சக்தியை பயன்படுத்துகிறேன். ஆரம்பத்தில் இருந்து உங்களிடம் சொல்லி வரும் விஷயம் பணத்தேவைக்கு ஆன்மீகத்தை பயன்படுத்துங்கள். தவறு ஒன்றும் இல்லை.

குரு கொடுத்த சக்தியை தற்பொழுது 1 சதவீதம் பயன்படுத்தியுள்ளேன். முழுவதும் பயன்படுத்தினால் உலகத்தில் நம்பர் 1 பணக்காரன் நானாக தான் இருப்பேன். பெருமையாக சொல்லவில்லை நான் சக்தியின் வீரியத்தை  நம்புகிறேன். அம்மனின் அருளை முழுமையாக பயன்படுத்தும் பொழுது உங்களுக்கு தெரியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Sunday, April 28, 2013

தனுசு: ஐந்தி்ல் கேது



வணக்கம் நண்பர்களே !
                    தனுசு ராசிக்கு ஐந்தில் கேது நின்றால் முன் ஜென்மத்தில் இவர் என்ன பாவம் செய்திருப்பார். இவரால் பாதிக்கப்பட்ட நபர் எப்படி இருந்திருப்பார் என்பதை இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

இவரால் பாதிக்கப்பட்ட நபர் யார்?

சகோதரர்களுக்கு பிரச்சினை கொடுத்திருப்பார். 

அடையாளம்?

மேஷ ராசி அசுவினி நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறம். பிற மொழிகளை நன்கு பேசியிருப்பார். இவரின் வீடு வடமேற்கு திசையில் இருந்திருக்கும்.

மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் வெண்மை நிறம்போல் இருந்திருப்பார். மலையாள மொழி பேசியிருப்பார். இவரின் வீடு தென்கிழக்கு திசையில் இருந்திருக்கும்.

மேஷ ராசி கார்த்திகை 1 ம் பாதத்தில் கேது பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருந்திருப்பார். இவர் சமஸ்கிரத மொழி பேசியிருப்பார். இவரின் வீடு கிழக்கு திசையில் இருந்திருக்கும்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

மேஷ ராசி அசுவினி நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்

கைகளை துண்டித்து அதனால் ரத்தகாயம் ஏற்படுத்தி கொன்றுருக்ககூடும்.

மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்

மர்ம ஸ்தானங்களில் தாக்கி உயிரை எடுத்து இருப்பார்கள்.

மேஷ ராசி கார்த்திகை 1 ம் பாதத்தில் கேது பகவான் அமர்ந்தால்

தலையில் தாக்கி அதன் மூலம் இரத்தம் வெளிவந்து கொல்லப்பட்டுருக்கலாம்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

மேஷ ராசி அசுவினி நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடமேற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு தென்கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

மேஷ ராசி கார்த்திகை 1 ம் பாதத்தில் கேது பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு கிழக்கு திசையில் இருக்கும். 

பரிகாரம்

செவ்வாய்கிழமை முருகன் மற்றும் விநாயகரை வணங்கிவாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

தொழில் செய்யும் நண்பர்களுக்கு



வணக்கம் நண்பர்களே!
                     வியாபார செய்யும் நண்பர்களுக்கு என்று ஒரு பதிவில் சில தகவல்களை சொல்லியிருந்தேன் அது சம்பந்தமாக பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு பேசியிருந்தார்கள். 

இந்த முறையில் நீங்கள் வியாபாரம் செய்யும்பொழுது உங்களின் வியாபாரம் எந்தவிதத்திலும் நஷ்டத்தை சந்திக்காது.இந்த முறையை பயன்படுத்தி தான் பல வடநாட்டு சேட்டுகள் வியாபாரம் செய்கிறார்கள். இது ஏதோ பிரச்சினையை தருகின்ற விசயமாக இருக்குமோ என்று நீங்கள் நினைக்கவேண்டாம். என்னிடம் பல வடநாட்டு சேட்டுகள் இந்த முறையை பயன்படுத்துக்கிறார்கள். 

இதனை ஏன் நான் இத்தளத்தில் வெளியிடுகிறேன் என்றால் தினமும் வரும் நீ்ங்களும் பயன்பெறவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் வெளியிடுகிறேன். இப்பொழுது எனது நேரிடையான வாடிக்கையாளர்களே பல தொழில் அதிபர்களை எனக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்கள். 

நான் உங்களின் மேல் வைத்திருக்கும் நல்மதிப்பில் தான் பணம் வாங்காமல் இதனை செய்கிறேன். நீங்கள் வெற்றி பெறும்பொழுது எனக்கு பணம் தாருங்கள் என்று சொன்னால் எப்படி நான் நம்பிக்கை வைக்கிறேன் என்று பாருங்கள்.

நீங்கள் வியாபாரம் செய்யலாம். உங்களின் உழைப்பு 99 சதவீதம் தரலாம். வெற்றி பெறுவது என்பது மீதி இருக்கும் 1 சதவீதம் ஆண்டவன் தீர்மானிப்பான். 1 சதவீதத்தில் நீங்கள் கவிழ்ந்துவிடுவீர்கள். உங்களின் தொழில் நஷ்டத்தை தந்துவிடும். இதனை நீங்கள் பயன்படுத்தினால் 1 சதவீதம் ஆண்டவனின் வெற்றி உங்களுக்கு கிடைக்கும்.

காலத்தை வீணடிக்காமல் உடனே என்னை தொடர்புக்கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான அனைத்து ஆலோசனையும் என்னிடம் இருந்து நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

விருச்சிகம்: ஐந்தில் கேது



வணக்கம் நண்பர்களே!
                     விருச்சிக ராசிக்கு ஐந்தில் கேது நின்றால் முன் ஜென்மத்தில் இவர் எப்படிப்பட்ட பாவத்தை செய்திருப்பார் என்பதை பார்க்கலாம். யாருக்கு இவர் பாவம் செய்திருப்பார் என்பதையும் பார்க்கலாம்.

விருச்சிக ராசிக்கு ஐந்தாவது வீடாக வருவது மீன ராசி அதன் அதிபதி குரு.

அடையாளம்?

மீன ராசி பூரட்டாதி 4 ம் பாதத்தில் கேது பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் பொன்நிறமாக மின்னுவார். தாய்மொழி மட்டும் பேசியிருப்பார். இவரின் வீடு வடகிழக்கு திசையில் இருந்திருக்கும்.

மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் கருப்பு நிறமாக இருப்பார். அந்நிய மொழி பேசியிருப்பார். இவரின் வீடு மேற்கு திசையில் இருந்திருக்கும்.

மீன ராசி ரேவதி நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால் 

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் மாநிறமாக இருப்பார். தாய்மொழி பேசியிருப்பார். இவரின் வீடு வடக்கு திசையில் இருந்திருக்கும்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

மீன ராசி பூரட்டாதி 4 ம் பாதத்தில் கேது பகவான் அமர்ந்தால்

இதயத்தில் காயத்தை ஏற்படுத்தி அதன் மூலம் கொன்றுருக்ககூடும்.

மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்

கால்களில் காயத்தை ஏற்படுத்திக்கொன்றுருக்ககூடும்.

மீன ராசி ரேவதி நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால் 

கழுத்து பகுதியில் காயப்படுத்தி கொன்றுருக்ககூடும்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

மீன ராசி பூரட்டாதி 4 ம் பாதத்தில் கேது பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடகிழக்கு திசையில் இருக்கும். 

மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு மேற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

மீன ராசி ரேவதி நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால் 

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடக்கு மற்றும் தெற்கு திசையில் இருக்கும். 

பரிகாரம்

வியாக்கிழமை தோறும் குரு மற்றும் கேதுவை வணங்கிவாருங்கள். வியாழக்கிழமை தோறும் அரசமர விநாயகருக்கு அருகம்புல் மாலை போட்டு வணங்கிவாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

தோள் கொடுக்கும் தோழி



வணக்கம் நண்பர்களே!
                    இராமாயணம் மகாபாரதம் போன்றவை நமக்கு வாழ்க்கை நெறியை கற்றுக்கொடுப்பவை. இது நடந்ததோ இல்லை நடக்கவில்லையோ ஆனால் இதில் உள்ள விசயங்கள் தான் இதுவரை நடந்தவை நடந்துக்கொண்டுருப்பது நடக்கபோவதும். இராமாயணத்தில் உள்ள ஒரு கருத்தை எடுத்து உங்களுக்கு சொல்லவேண்டிய நேரம் எனக்கு சில நாட்களாக அமைந்தது.

இராமர் பிரச்சினையில் காட்டுக்குச்செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்பொழுது சீதை என்ன செய்திருக்கலாம். நீங்கள் மட்டும் காட்டுச்சென்று வனவாசத்தை முடித்துக்கொண்டு வாருங்கள். நான் அரண்மனையிலேயே தங்கியிருக்கிறேன் என்று சொல்லிருக்கலாம். இந்த பெண் மட்டும் அரண்மனையில் தங்கியிருந்தாள் இராமாயணமே கிடையாது. 

சீதை சொல்லுகிறாள் நான் இராமனுக்கு மனைவியாகிவிட்டேன். மனைவின் கடமை கணவனின் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கேற்க வேண்டும் அதனால் நானும் என் கணவன் கூட காட்டிற்க்கே செல்கிறேன் என்று சொல்லுகிறாள். உண்மையில் ஊருக்கு ஊருக்கு ராமனுக்கு கோவில் கட்டி இருக்கிறார்கள் சீதைக்கு தான் கோவில் கட்டியிருக்கவேண்டும். கட்டியிருக்கிற ராமர்கோவில் எல்லாம் இராமர்கோவில் என்று சொல்லாமல் சீதை கோவில் என்று தான் சொல்லவேண்டும். எப்படிப்பட்ட பெண்ணாக இருந்தால் மனைவின் கடமை என்று சொல்லுகிறாள். 

இப்ப நம்ம கருத்துக்கு வருவோம். என்னிடம் சோதிடம் பார்க்கும் பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு என் மனைவி என்னை விட்டு விட்டு அவளின் அம்மா வீட்டிற்க்கு சென்றுவிட்டால் என்று சொன்னார்கள். என்ன காரணம் என்று கேட்டேன். மூன்று மாதங்கள் சம்பளம் கம்பெனியில் தரவில்லை அதனால் கோபபட்டு சென்றுவிட்டால் என்று சொன்னார்கள். 

மூன்று மாதங்கள் கம்பெனியில் சம்பளம் தரவில்லை என்பதால் இவர் வீட்டிற்க்கு பணம் கொடுக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. பிரைவேட் கம்பெனியில் இது வாடிக்கையாக நடைபெறுகிற ஒரு நிகழ்வு தான் பிறகு சேர்த்து கொடுத்துவிடுவார்கள். இதற்காக உங்கள் மனைவி கோபபட்டுக்கொண்டு அவளின் அம்மா வீட்டிற்க்கு சென்றாள். உண்மையில் உங்களின் மனைவியை திருமணத்தின் போது பலான தெருவி்ல் பிடித்தீர்களோ என்று எனக்கு சந்தேகம் வருகிறது. 

சுக துக்கம் இரண்டிலும் கணவனுடன் கூடவே இருக்கவேண்டும் இதுவே மனைவின் இலக்கணம்.ஒருவனுக்கு நல்ல காலமும் வரும், கெட்ட காலமும் வரும். ஒரு மனைவி நல்ல சம்பாதிக்கும்போது அவனுடன் இருந்தது போல ஒரு மனைவி கணவனுடன் கெட்ட காலங்களிலும் கூடவே இருக்கவேண்டும்.

ஒரு நாட்டின் தலைவனாக வரபோகிறவனின் மனைவி கணவனுடன் காட்டுச்செல்லுகிறேன் என்று சொல்லுகிறாள். ஏதோ ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்திருக்கும் நபரின் மகள் மூன்று மாதங்கள் கணவன் சம்பளம் தரவில்லை என்பதால் கணவனை விட்டுவிட்டு செல்லுவது தவறான ஒன்றாகதான் இருக்கும். 

கணவன் தரப்பிலும் தவறு இருக்கதான் செய்கிறது. இவர்கள் திருமணம் முடித்தவுடன் நான் அப்படி சம்பாதிக்கிறேன் இப்படி சம்பாதிக்கிறேன் என்று சொல்லுவது மிகப்பெரிய தவறு. பணம் இருப்பதை கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்காட்டிக்கொள்ளுங்கள். வறுமையில் மனைவியை சோதனை செய்யலாம் என்று முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள. 

மனைவி என்பவள் கணவனின் கெட்ட காலங்களில் அவனைத் தனியே தவிக்கவிடாது, தோள் கொடுக்கும் தோழியாக ஒரு மனைவி வாழவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

ஆன்மீக அனுபவங்கள் 86



வணக்கம் நண்பர்களே!
                    நீண்ட இடைவெளிக்கு பின்பு குருவை சந்தித்ததால் உங்களை சந்திக்கமுடியவில்லை. குருவுடன் இருந்ததால் பதிவு எழுதும் எண்ணம் ஏற்படவில்லை. இருந்தாலும் நேற்று ஒரு பதிவை தந்தேன். தொடர்ந்து பார்க்கலாம்.

நான் காயத்ரி மந்திரத்தை எடுத்துக்கொண்டு செய்து வாருங்கள் என்று சொன்னேன். ஒரு சில நண்பர்கள் மட்டும் செய்துக்கொண்டு வருகிறார்கள். பல நண்பர்கள் செய்கிறேன் என்று சொன்னார்கள் ஆனால் செய்யவில்லை. நல்லவற்றை அதிக நாட்களுக்கு நிறுத்தி வைப்பவர்கள் வாழ்க்கையில் எதையும் அடைய முடியாது. 

எந்த விஷயமும் நலலது என்று தோன்றியவுடனேயே துவங்கி விடுவது நல்லது. நாளை செய்யலாம் என்ற எண்ணம் மட்டும் இருக்ககூடாது. நாளை செய்கிறேன் என்று சொல்லுபவர்கள் செய்யவதற்க்கு விருப்பம் இல்லை என்று தான் கொள்ளவேண்டும். நாளை செய்கிறேன் என்று சொல்லுவது ஒத்தி போடுவதற்க்கு ஒரு வழி இன்றி வேறு ஒன்றும் இல்லை. 

நாளைக்கு என்று தள்ளி வைப்பது ஆபத்தானது. நாளைக்கு தள்ளிப் போடுபவர்கள் எப்பொழுதுமே தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பார்கள். ஒரு காலும் செய்யபோவதில்லை. வாழ்நாளில் எந்த ஒரு விஷயமும் சரியானதாகத் தோன்றினால் அந்த நிமிடமே அதை துவங்கிவிடவேண்டும். நல்லவற்றை உடனேயே செய்ய வேண்டும். தீயவற்றை தள்ளிப்போடவேண்டும். நீங்கள் செய்கின்ற இந்த செயல் உங்களை வாழ்க்கையில் உயர்த்திக்கொண்டு போய்விடும் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.

நீங்கள் செய்கின்ற காயத்ரி மந்திரம் உயிரோட்டம் உள்ள ஒரு செயல். அக்னியை போன்றது அந்த செயல். அதனை நீங்கள் தூண்டிவிட்டால் நீங்கள் புதிய பிறவியாகிட்டது போல் தோன்றும். நீங்கள் இருக்கும் பிறவியிலேயே அடுத்த பிறவி எடுத்ததை போன்ற உணர்வு ஏற்படும். உங்களின் சக்தியை அனைத்தையும் திரட்டி இந்த செயலில் ஈடுபடுங்கள்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Saturday, April 27, 2013

துலாம்: ஐந்தில் கேது


வணக்கம் நண்பர்களே !                  
                     துலாம் ராசிக்கு ஐந்தில் கேது நின்றால் முன் ஜென்மத்தில் இவர் என்ன பாவம் செய்திருப்பார் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

துலாம் ராசிக்கு ஐந்தாவது வீடாக வருவது கும்பம் அதன் அதிபதி சனி

அடையாளம்?

கும்ப ராசி அவிட்டம் 3, 4 ம் பாதங்களில் கேது பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருந்திருப்பார். தெலுங்கு மொழி பேசியிருப்பார். இவரின் வீடு தெற்கு திசையில் இருந்திருக்கும்

கும்ப ராசி சதய நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் கருப்பு நிறமாக இருப்பார். அந்நிய மொழி பேசியிருப்பார்.இவரின் வீடு தென்மேற்கு திசையில் இருந்திருக்கும்

கும்ப ராசி பூரட்டாதி 1 2 3 ம் பாதங்களில் கேது பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் பொன்நிறமாக மின்னுவார். தாய்மொழி மட்டும் பேசியிருப்பார். இவரின் வீடு வடகிழக்கு திசையில் இருந்திருக்கும்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

கும்ப ராசி அவிட்டம் 3, 4 ம் பாதங்களில் கேது பகவான் அமர்ந்தால்

கையில் வெட்டுக்காயம் ஏற்படுத்தி அதன் மூலம் கொன்றுருக்ககூடும்.

கும்ப ராசி சதய நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்

கால்களில் வெட்டப்பட்டு இறந்திருக்ககூடும்.

கும்ப ராசி பூரட்டாதி 1, 2 ,3 ம் பாதங்களில் கேது பகவான் அமர்ந்தால்

இதயத்தில் வெட்டுபட்டு கொன்றுக்ககூடும்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

கும்ப ராசி அவிட்டம் 3, 4 ம் பாதங்களில் கேது பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு தெற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும்.

கும்ப ராசி சதய நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும்.

கும்ப ராசி பூரட்டாதி 1, 2 ,3 ம் பாதங்களில் கேது பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடகிழக்கு மற்றும் தெற்கு திசையில் இருக்கும்.

பரிகாரம்

சனிக்கிழமை தோறும் கேது மற்றும் சனி பகவானை வணங்கி வாருங்கள். நீங்கள் தேடும் அந்த நபர் உங்களை சந்திப்பார்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Thursday, April 25, 2013

அம்மனின் லீலை



வணக்கம் நண்பர்களே!

                    இன்று சித்ராபெளர்ணமி அல்லவா. எப்பொழுதுமே காலையிலேயே பதிவை எழுதிவிடுவேன் ஆனால் நமது அம்மன் அதற்கு வழி செய்யவில்லை. ஏன் என்றால் எந்த விசேஷ நாளாக இருந்தாலும் அம்மனை மகிழ்விக்க ஒரு சில வேலைகளை செய்ய வேண்டும். அதோடு விஷேச நாட்களில் அம்மனும் பிஸியாக இருக்கிறது. நாம் ஏன் தொந்தரவு செய்ய வேண்டும் என்று விட்டுவிடுவேன்.

அம்மனைப்பற்றி சொல்ல ஒரு செய்தி இருக்கிறது அது என்ன என்றால் நான் காலையில் தங்கியிருக்கும் அறையில் எப்பொழுதும் பூஜை செய்வேன். நான் அந்த இடத்தில் பூஜை செய்வதால் அம்மனின் சக்தி அந்த இடத்தில் நிலைக்கொண்டு இருக்கிறது. எனது அறையில் நானும் எனது நண்பரும் தங்கி இருக்கிறோம். எங்களுடைய அறைக்கு வேறு யாரையும் அனுமதிப்பது கிடையாது. எனது நண்பர்களின் நண்பர்களும் யாரும் வருவது கிடையாது. எனது நண்பர்களும் வருவது கிடையாது. 

எனது நண்பர் நான் பூஜை செய்யும் இடத்தில் தினமும் வேலைக்கு போகும் போது அவர் வணங்கிவிட்டு செல்வார். நமது அம்மன் அவருக்கு அனைத்தையும் செய்கிறது. அவர் அந்த இடத்தில் நின்று கேட்கும் அனைத்தையும் செய்து தருகிறது. அவருக்கு எல்லையற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார். இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் ஒரு இடத்தில் ஒரு சக்தியை நிறுத்தும் பொழுது அந்த சக்தியை வணங்குபவர்களுக்கு அனைத்தையும் செய்கிறது.

இப்பொழுது நான் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கு உதவிக்கொண்டு வருகிறேன். அவர்கள் என்னிடம் கேட்கும் கேள்வி எப்படி நீங்கள் இதனை செய்கிறீர்கள் என்று தான் கேட்கிறார்கள். ஏன் என்றால் அவர்களை நான் பார்த்தது கிடையாது. நான் இருப்பது சென்னை அடையாரில் இருக்கிறேன். நான் இங்கு அமர்ந்துக்கொண்டு எங்கோ இருப்பவர்களுக்கு வேலை நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. அனைத்தும் அம்மனி்ன் வேலை தான். 

நாம் ஒரு இடத்தில் அமர்ந்துக்கொண்டு வெளி உலகத்தில் என்ன நடைபெறுகிறது. ஒரு செயலை எப்படி செய்யவேண்டும் என்று என் குருநாதர் கற்றுக்கொடுத்தார். உண்மையில் அவர் கற்றுக்கொடுக்கவில்லை. ஒரு வரி சொல்லுவார் அதனை அப்படியே செயல்படுத்தி காட்டிவிடுவேன். அவர் வார்த்தையாக சொன்னார் அதனை நான் செயலாக மாற்றிக்கொண்டு இருக்கிறேன் அவ்வளவு தான் வேறு ஒன்றும் இல்லை.

அனைத்து செயலும் வெற்றிகரமாக நடத்திக்கொடுப்பது அம்மன் தான். அனைத்தும் அம்மனின் லீலை இன்றி வேறு ஒன்றும் இல்லை.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Wednesday, April 24, 2013

கன்னி: ஐந்தில் கேது


வணக்கம் நண்பர்களே !
                     கன்னி ராசிக்கு ஐந்தில் கேது நின்றால் முன் ஜென்மத்தில் இவர் என்ன செய்திருப்பார். இவரால் பாதிக்கப்பட்ட நபர் எப்படி இருந்திருப்பார் என்பதை இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

அடையாளம்?

மகர ராசி உத்திராடம் 2 3 4 ம் பாதங்களில் கேது பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருப்பார். இவர் சமஸ்கிருத மொழி தெரிந்திருக்கும். இவரின் வீடு கிழக்கு பக்கமாக அமர்ந்திருக்கும்.

மகர ராசி திருவோண நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்

ஆட்களோடு நிறம் நல்ல வெள்ளை நிறமாக இருப்பார். இவர் தாய்மொழி எதுவோ அதனை மட்டும் பேசியிருப்பார். இவரின் வீடு வடமேற்கு திசையில் அமர்ந்திருக்கும்.

மகர ராசி அவிட்டம் 1 2 பாதங்களில் கேது பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருந்திருப்பார். இவர் தாய்மொழி மற்றும் தெலுங்கு மொழி பேசியிருப்பார்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

கேது படுத்த படுக்கையாகிவிடுவார். இவரால் பாதிக்கப்பட்டால் கோமாநிலைக்கு கொண்டு செல்லுவார். 

மகர ராசி உத்திராடம் 2 3 4 ம் பாதங்களில் கேது பகவான் அமர்ந்தால்

தலையில் தாக்கி கொன்றுருக்ககூடும்.

மகர ராசி திருவோண நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்

முகம் வயிறு போன்ற இடங்களில் தாக்கி அதனால் நோய்ப்பட்டு இறந்திருக்ககூடும்.

மகர ராசி அவிட்டம் 1, 2 பாதங்களில் கேது பகவான் அமர்ந்தால்

கையில் வெட்டுக்காயம் ஏற்படுத்தி அதன் மூலம் கொன்றுருக்ககூடும்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

மகர ராசி உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்களில் கேது பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு கிழக்கு மற்றும் தெற்கு திசையில் இருக்கும். உங்கள் ஜாதங்களின் பிற கிரகங்களின் நிலை அறிந்து அந்த நபரின் சரியான திசையை அறிந்துக்கொள்ளுங்கள்.

மகர ராசி திருவோண நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடமேற்கு மற்றும் தெற்கு திசையில் இருக்கும். உங்கள் ஜாதங்களின் பிற கிரகங்களின் நிலை அறிந்து அந்த நபரின் சரியான திசையை அறிந்துக்கொள்ளுங்கள்.

மகர ராசி அவிட்டம் 1, 2 பாதங்களில் கேது பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு தெற்கு திசையில் இருக்கும். உங்கள் ஜாதங்களின் பிற கிரகங்களின் நிலை அறிந்து அந்த நபரின் சரியான திசையை அறிந்துக்கொள்ளுங்கள்.

பரிகாரம்

புதன்கிழமை தோறும் விநாயகரை வணங்கிவாருங்கள். கால் முறிந்த சந்நியாசிக்கு உதவுங்கள் சம்பந்தப்பட்ட நபரை நீங்கள் அடையாளம் காணமுடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

ஆன்மீக அனுபவங்கள் 85



வணக்கம் நண்பர்களே!
                    பல நண்பர்கள் ஆன்மீகவாழ்க்கையில் நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். என்னிடம் பேசும்போது அனைவரும் கேட்கிறார்கள் நாங்களும் ஆன்மீக சேவை செய்ய வேண்டும். நாங்கள் கற்ற விசயத்தை அனைவருக்கும் கற்று தரவேண்டும் என்றும் சொன்னார்கள்.

தான் கற்றதை அடுத்தவர்களுக்கு கற்று தரவேண்டும் என்று நினைப்பது நல்ல எண்ணத்தை காட்டுகிறது. இன்றைய காலகட்டத்தில் அடுத்தவர்களுக்கு வழிகாட்டுதலை செய்வது என்பது மிகப்பெரிய செயல். இன்றைய காலகட்டத்தில் அடுத்தவனை கெடுப்பது தான் பல பேருக்கு முதல் வேலையாக இருக்கிறார்கள். நமது மதத்தில் உள்ள கருத்துகளை அடுத்தவர்களுக்கு சொல்லுவதற்க்கு ஆட்கள் இல்லை தான். நூறு பேர்க்கு ஒரு நபர் தேவை தான் ஆனால் லட்சம் பேருக்கு ஒருவர் கூட இல்லை என்பது தான் உண்மை.

நாம் கற்றுக்கொடுப்பது எப்பொழுதும் தவறுதலாக இருக்ககூடாது ஏன் அப்படி சொல்லுகிறேன் என்றால் தவறுதல் இருந்தால் நம் மத்த்தை இழிவுப்படுத்தல் போல் ஆகிவிடும். நாம் சொல்லுவதை நம் மதத்தில் உள்ளவர்கள் கவனிக்கிறார்களோ இல்லையோ பிற மதத்தில் உள்ளவர்கள் நன்றாக கவனிப்பார்கள். ஒரு போதும் தவறுதலாக இருக்ககூடாது. அனைத்தையும் முதலில் நீங்கள் சுயபயிற்சி செய்து அது நடைபெறுகிறதா எனறு பார்த்த பிறகு தான் அதனை அடுத்தவர்களுக்கு நீங்கள் கற்று தரவேண்டும்.

ஒரு குருவாக மாறுவது என்பது மிகப்பெரிய கடினமான வேலை அது. அனைத்தையும் உணர்ந்த பிறகு தான் அது நடைபெறும். நான் முதலில் ஆன்மீகத்திற்க்கு வரும் போது அப்பொழுது நினைத்தேன். இதனை நம் அடுத்தவர்களுக்கு கற்று கொடுத்து நாம் குருவாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். படிப்படியாக நான் அந்த ஆசையை விட்டுவிட்டேன்.

ஏன் அந்த ஆசை விட்டுவிட்டேன் என்றால் அதில் அவ்வளவு சிக்கல் உள்ளது. நமக்கு வரும் சிஷ்யன் எதனை கேட்டாலும் அவனுக்கு நாம் செய்து தரவேண்டும். சிஷ்யன் சிக்கலில் இருந்தால் அவனை காப்பாற்ற வேண்டும். சிஷ்யன் தன்னிடம் வந்து இப்படி பிரச்சினை இருக்கிறது உடனே இந்த பிரச்சினையை தீர்த்து வையுங்கள் என்றால் அதனை தீர்த்துவைக்க வேண்டும். அப்படி இல்லாமல் நீ கடவுளை வணங்கு உனக்கு நடக்கும் என்றால் அதற்கு நீ எதற்கு?  நான் கடவுளையே குருவாக ஏற்றுக்கொள்வேனே என்று சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள்.

குருவாக இருப்பது மிகப்பெரிய கடினம். அதனால் நீங்கள் நான் குருவாக உங்களுக்கு இருக்கமுடியாது என்று சொல்லிவிடுங்கள். எனக்கு தெரிந்ததை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன் என்று சொல்லுங்கள்.நான் இப்படி தான் காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறேன். பதிவு ஆரம்பிக்கும்போதே வணக்கம் நண்பர்களே என்று போடுவது கூட இந்த எண்ணத்தில் தான். நண்பர் என்று சொல்லிவிட்டால் ஒன்றும் பிரச்சினை வரப்போவதில்லை. நண்பன் தான்டா அவனுக்கு தெரிந்ததை சொல்லுகிறான் என்று விட்டுவிடுவார்கள்.

ஒருவனுக்கு குரு அமைவது என்பது மிகப்பெரிய ஒரு வரம். அவன் எத்தனையோ ஜென்மங்கள் பெற்ற வரத்தின் காரணமாக குரு அமைவார்கள். அந்த சிஷ்யன் அந்த குருவின்  உபதேசங்களை கேட்டு அதனை மனதில் வாங்கி சிந்தித்து அந்த உபதேசங்களுக்கு ஏற்ப தன் வாழ்க்கை முறையை வகுத்து அதன் வழியாக சென்று தன் உள்ளத்தாலும், உடலாலும், வாக்காலும் செய்யப்படும் செய்கைகள் அனைத்தும் ஆன்மாவை உணர்வதற்கே என்ற வைராக்கியம் கொண்ட சாதகனுக்கே ஆன்மாவை உணரும் பாக்கியம் கிட்டும். 

ஆத்மாவை நீங்கள் உணரந்த பிறகே உங்களால் குரு ஆவதற்க்கு தகுதி இருக்கும். அதன் பிறகே அடுத்தவர்களுக்கு நீங்கள் போதனை செய்யமுடியும். ஆன்மீகத்தில் ஒருவர் நல்ல நிலையில் அடைவதற்க்கு 12 ஆண்டுகள் ஆகும் என்று சோதிடத்தில் கூட சொல்லியுள்ளார். குரு கிரகம் ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு வருடமாக கடந்து 12 வருடங்கள் கடக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார்கள். அப்பொழுது மட்டுமே அவனால் ஆன்மீகத்தை உணரமுடியும் என்று சொல்லியுள்ளார்கள்.

பல பேர் என்னிடம் வந்து நான் ஆன்மீகவாதி என்று சொல்லுவார்கள். நான் மிக உயர்ந்த நிலையில் இருந்திருக்கிறேன் என்றும் சொல்லுவார்கள். நான் அப்படியா என்று கேட்பதைவிட சரி அடுத்தது என்ன ஏது என்று கூட கேட்கமாட்டேன். காவி ருத்ராட்சம் அணிந்துவிட்டு புற அழகை அலங்கரித்துக்கொண்டு ஆன்மீகவாதிகள் போல் இருப்பவர்கள் தான் ஆன்மீகவாதிகள் கிடையாது.

நான் என் குருநாதரிடம் கற்ற முதல் விசயம் இது தான். ஒரு நபர் என்னை சந்திக்க வந்தால் வருபவர் யார் என்று உணர்த்தி காட்டிவிடும். நல்ல ஆத்மாக்களை பார்த்தாலே வசிகரீக்கும் ஆற்றல் இருக்கும். அப்படிபட்டவர்கள் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள் உண்மையில் அவர்கள் தான் ஆன்மீகவாதிகள். அவர்களின் பார்வை நம்மீது பட்டுவிட்டால் ஐந்து நிமிடத்தில் நமது ஆத்மா அவர்களின் பக்கம் திரும்பிவிடும். அவர்களின் பார்வை நம்மீது பட்டபிறகு தான் ஆன்மீகத்தில் நீங்கள் முன்னேறமுடியும்.

நான் தமிழ்நாட்டில் இப்படிபட்டவர்களை நான் பார்த்தது ஐந்து பேர் இருக்கலாம்.அதற்கு மேல் நான் பார்த்தது கிடையாது. உங்களின் ஆத்மாவை பரிசுத்தமாக்கிய பிறகு அடுத்தவர்களுக்கு நீங்கள் கற்றுக்கொடுத்தீர்கள் என்றால் அதுவே சரியான ஆன்மீகமாக இருக்கும். நீங்கள் கற்றுக்கொடுக்ககூட தேவையில்லை நீங்கள் பார்த்தால் போதும். அந்த ஆத்மா ஆன்மீக உலகத்திற்க்கு சென்றுவிடும். என்ன செய்வீர்களா?

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Tuesday, April 23, 2013

சிம்மம்: ஐந்தில் கேது



வணக்கம் நண்பர்களே !

                      சிம்ம ராசிக்கு ஐந்தில் கேது நின்றால் முன் ஜென்மத்தில் இவர் என்ன செய்திருப்பார். இவரால் பாதிக்கப்பட்ட நபர் எப்படி இருந்திருப்பார் என்பதை பார்க்கலாம்.

இவரால் பாதிக்கப்பட்ட நபர் யார்?

கோவிலில் உள்ள வேலையாட்களுக்கு கெடுதல் செய்திருப்பார். விநாயகர் சாஸ்தா கோவிலாக இருக்ககூடும்.

அடையாளம்?

தனுசு ராசி மூலம் நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆள்களோடு நிறம் சிகப்பு நிறமாக இருந்திருப்பார். அந்நிய மொழி பேசி இருப்பார். இவரின் வீடு வடமேற்கு திசையில் இருந்திருப்பார்.

தனுசு ராசி பூராடம் நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் நல்ல கலராக இருப்பார். இவர் மலையாள மொழி பேசிருப்பார். இவரின் வீடு தென்கிழக்கு திசையில் இருந்திருக்கும்.

தனுசு ராசி உத்திராடம் 1 ம் பாதத்தில் கேது பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பாக இருப்பார். அவர் தாய்மொழி மற்றும் சமஸ்கிருத மொழி பேசி இருப்பார். இவரின் வீடு கிழக்கு பக்கமாக இருந்திருக்கும்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

அனைத்து காயங்களும் நீண்ட நாட்களாக படுக்கையில் கிடந்து அதன் பிறகு அவருக்கு மரணம் ஏற்பட்டு இருக்கும்.

தனுசு ராசி மூலம் நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்

கை தோள்களில் தாக்கப்பட்டு இறந்திருக்ககூடும்.

தனுசு ராசி பூராடம் நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்

மர்மஸதானத்தில் தாக்கப்பட்டு இறந்திருக்ககூடும்.

தனுசு ராசி உத்திராடம் 1 ம் பாதத்தில் கேது பகவான் அமர்ந்தால்

தலையில் தாக்கப்பட்டு இறந்திருக்ககூடும்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

தனுசு ராசி மூலம் நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடமேற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

தனுசு ராசி பூராடம் நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு தென்கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

தனுசு ராசி உத்திராடம் 1 ம் பாதத்தில் கேது பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

பரிகாரம்

விநாயகர் மற்றும் ஐயப்பனை வணங்கி வாருங்கள். சம்பந்தப்பட்ட நபரை நீங்கள் அடையாளம் காணமுடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Monday, April 22, 2013

பூர்வ புண்ணியம் 51



வணக்கம் நண்பர்களே!
                      நீண்ட நாட்கள் ஆகிவிட்டது பூர்வபுண்ணியத்தொடரை எழுதி அதனால் இன்று கொஞ்சம் பார்க்கலாம். விவேகானந்தர் எழுதிய புத்தகத்தில் ஒரு கருத்தை பார்த்தேன். இதனை படித்து பல வருடங்கள் சென்றுவிட்டது. ஞாபகம் வந்தது அதனால் அதனை வைத்து எழுதலாம் என்று முடிவு செய்தேன். 

தற்பொழுது புத்தகங்களை படிப்பதை விட்டுவிட்டேன். பல நண்பர்கள் என்னிடம் கேட்கிறார்கள் புத்தகங்களை தொடர்ந்து படியுங்கள் அப்பொழுது தான் எங்களுக்கு நிறைய தகவல் கிடைக்கும் என்கிறார்கள். உண்மையில் படித்த விசயத்தை சொல்லுவதற்க்கே எனது வாழ்நாட்கள் போதா ஒன்று. புதிதாக படித்து ஒன்றும் தெரிந்துக்கொள்ள போவதில்லை. அந்த விசயத்தை இப்பொழுது பார்க்கலாம்.

முட்டாள் ஒருவன் உலகிலுள்ள எல்லாப் புத்தகங்களையும் வாங்கலாம்.  அவனது நூல் நிலையத்தில் அவை இருக்கும்.  ஆனால், எதனைப் படிக்க அவனுக்கு தகுதியுண்டோ அதையே தான் அவன் படிப்பான்.  அவனுக்குத் தகுதியை உண்டாக்குவது அவனது ‘கர்மா’.

நமது தகுதி என்ன, நம்மால் எதனை ஜீரணிக்க முடியும் என்பதை நமது கர்மா முடிவு செய்கிறது.  நாம் இன்றிருக்கும் நிலைக்கு நாமே பொறுப்பு.  நாம் எப்படி ஆக வேண்டுமென்று விரும்புறோமோ அவ்வாறு நம்மை ஆக்கிக் கொள்ளுவதற்கு நம்மிடம் ஆற்றல் உள்ளது.  இன்று நாமிருக்கும் நிலை நமது பழங்காலச் செயல்களின் விளைவாக ஏற்பட்டது என்றால், அதைத் தொடர்ந்து மற்றொரு கருத்தும் வருகிறது.  அதாவது நாம் வருங்காலத்தில் எப்படி மாற வேண்டுமென்றிருக்கிறோமோ, அந்த நிலையை இக்காலத்திய நமது நடவடிக்கைகளால் உண்டாக்க முடியும்.  ஆகவே எப்படிச் செயல்பட வேண்டும் என்று நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.

எனது ஆயுளில் நான் எத்தனையோ தவறுகளைச் செய்திருக்கிறேன்.  ஆனால் கவனியுங்கள்.  இந்தத் தவறுகள் ஒவ்வொன்றையும் நான் செய்திராவிட்டால் நான் இன்றுள்ள நிலையில் இருக்க முடியாது என்பது திண்ணமாக எனக்குத் தெரியும்.

விவேகானந்தர் சொல்லியது இது. மேற்க்கொண்டும் சொல்லுகிறார். அவர் நான் செய்த தவறுக்கும் பிராயாச்சித்தம் தேடினேன் என்றும் சொன்னார். செய்த தவறுகளால் தான் நான் உருவானேன். அந்த தவறுக்கு பரிகாரம் தேடினேன் என்கிறார். தவறை செய்துவிட்டு அப்படியே விட்டுவிட்டு வரவில்லை அந்த தவறுக்கு அவர் பரிகாரம் செய்தார்.

இப்படிபட்ட துறவியே கர்மாவின் பாவத்தை தொலைத்து வருகிறேன் என்று சொல்லுகிறார். நாம் செய்த தவறுக்கு என்ன பரிகாரத்தை நாம் தேடினோம் என்றால் பூர்வபுண்ணியம் உங்களுக்கு புரியும்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

கோடை விடுமுறை: குழந்தைகளின் ஆன்மீக பயிற்சி



வணக்கம் நண்பர்களே!
                     இப்பொழுது கோடை விடுமுறை துவங்கிவிட்டதால் உங்களின் குழந்தைகளுக்கு ஆன்மீகத்தில் உள்ள ஒரு சில நல்ல விசயங்களை கற்றுக்கொடுங்கள். 

கோடை விடுமுறையில் கம்பியூட்டர் வகுப்பு மற்றும் பிறமொழி கற்றுக்கொள்ளும் வகுப்பிற்க்கு அனுப்புவதை விட ஆன்மீகவகுப்பு மேலானது. கம்பியூட்டர் எல்லாம் எப்பொழுது வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். இப்பொழுது உள்ள குழந்தைகள் அவர்களாகவே கற்றுக்கொண்டுவிடுவார்கள் ஆனால் ஆன்மீகம் என்பது அவர்களாகவே கற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்பதால் நீங்களே கற்றுக்கொடுத்துவிடுவது நல்லது.

நமது மதத்தில் உள்ள நல்ல கருத்துகளை அவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள். அனைத்து மதத்திலும் கோடை விடுமுறையில் அவர்களின் மதங்களின் குரு தனியாக வகுப்பே எடுப்பார்கள். நமது மதத்தில் தான் ஆளே இதற்கு எல்லாம் கிடையாதே. நீங்களே குருவாக இருந்து அனைத்தையும் எளிதில் புரியும்படி சொல்லிக்கொடுங்கள். எளிதில் புரியும்படி என்றால் சின்ன சின்ன கதைகள் மூலம் அவர்களுக்கு புரியவைக்க வேண்டும். 

பழமையான கோவிலுக்கு அழைத்து சென்று வணங்கிவிட்டு அந்த கோவில் உள்ள சக்தி கட்டக்கலை அனைத்தையும் விரிவாக சொல்லுங்கள். என்ன குழந்தைகள் கேட்கும் கேள்விக்கு சில நேரங்களில் நம்மால் பதில் அளிக்க முடியாது. பதில் அளிக்க முடியாத நேரத்தில் நீங்கள் பொய் சொல்லிவிடாதீர்கள். பதிலை தெரிந்துக்கொண்டு உனக்கு பதில் தருகிறேன் என்று சொல்லுங்கள்.

உங்கள் குழந்தைகளை மட்டும் அழைத்துக்கொண்டு கோவிலுக்கு செல்லாதீர்கள் உங்களின் வீட்டிற்க்கு அருகில் இருக்கும் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு செல்லுங்கள். எல்லா குழந்தைகளையும் சேர்த்துக்கொண்டு வகுப்பு போல் நடத்தலாம்.அந்த வகுப்பில் உள்ளவர்களுக்கு பரிசு பொருட்களையும் கொடுங்கள் அப்பொழுது அவர்களுக்கு உற்சாகமாக இருப்பார்கள்.

சிறிய வயதில் அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் இந்த கருத்து அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மிக உயர்ந்த சொத்து. இந்த சொத்து எதிர்காலத்தில் அவர்கள் எப்பேர்பட்ட கஷ்டத்திலும் மீட்டுக்கொடுக்கும் மிகப்பெரிய கருவிபோல் இருக்கும்.

பத்து வயதுக்குள் ஆன்மீகத்தை உங்களின் குழந்தைகளுக்கு நீங்கள் ஊட்டிவிடவேண்டும். அப்பொழுது மட்டுமே அவர்களுக்கு எந்த வயதிலும் இந்த அனுபவம் மாறாது. அவர்களாகவே அனைத்தையும் புரிந்துக்கொள்வார்கள்.

என்ன நண்பர்களே செய்வீர்களா?

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

வேண்டுகோள்



வணக்கம் நண்பர்களே!
                     ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்க்கு தெய்வத்தின் ஆசி வேண்டும் அப்பொழுது மட்டுமே அந்த மனிதன் முன்னேற முடியும். அந்த தெய்வங்களின் ஆசியை பெறுவதற்க்கு பல ஆத்மாக்களுக்கு நாம் சேவை செய்திருக்கவேண்டும் அப்பொழுது மட்டுமே தெய்வத்தின் ஆசியை நாம் பெறமுடியும். 

நான் தெய்வத்தின் ஆசியை முதலில் பெற்றேன் அதற்க்கு காரணம் எனது குரு தந்த சக்தி. அந்த சக்தியை நான் கூடுதலாக்க உங்களுக்கு சேவை செய்கிறேன் அப்பொழுது எனக்கு அதிகமான சக்தி கிடைக்கிறது. உங்களுக்கு சேவை செய்கிறேன் என்று சொல்லுவது உங்களின் ஆத்மாவின் தேடுதலுக்கு ஒரு விடை தருகிறேன் அது தான் நான் செய்யும் சேவை. இந்த சேவை என்னை மேலும் மேலும் உயர்த்திக்கொண்டு செல்லுகிறது.

பல்வேறு பட்ட ஆன்மீக பயிற்சிகள் இன்று தெரு தெருவாக இருக்கும்போது என்னிடம் வந்து ஆன்மீக பயிற்சி எடுக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள் இதுவே என் வாழ்க்கையில் எதனையோ அடைந்துவிட்டேன் என்று நினைக்க தோன்றுகிறது. நமது தளத்திற்க்கு புது புது நண்பர்கள் வந்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் என்னிடம் சொல்லுவது இன்று தான் உங்களின் தளத்தை பார்வையிட்டேன் என்று சொல்லுகிறார்கள். இது நாள் வரை பார்த்ததில்லை இன்று தான் பார்க்கிறோம் என்று சொன்னார்கள்.

இப்பொழுது வரும நபர்கள் நமது தளத்திற்க்கு போதாத ஒன்று. ஏன் என்றால் பல தளங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது நமது தளத்தின் வரவு மிக குறைவாக இருக்கிறது. அதனால் நண்பர்களே உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் நமது தளத்தைப்பற்றி சொல்லுங்கள். 

இன்று வலையுகத்தில் ஆன்மீகபதிவுகள் குறைவாக வருகின்றன. நாத்திகத்தின் வலைதளத்தை பார்த்தால் ஒரு வருடத்திற்க்கு ஆயிரம் பதிவுகளுக்கு மேல் எழுதி தள்ளுகிறார்கள். ஆன்மீக பதிவுகள் குறைவான எண்ணிக்கையில் வருகின்றன. அவ்வாறு இருக்ககூடாது என்ற காரணத்தால் ஒரு நாளைக்கு பல பதிவுகள் கொடுக்கவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளேன். நான் அவ்வாறு கொடுக்கவேண்டும் என்று நினைக்கும்போது நமது தளத்திற்க்கு வரும் நபர்களின் எண்ணிக்கையும் கூடுதலாக இருக்க வேண்டும் அது உங்களின் கையில் உள்ளது.

நமது மதத்தை பொருத்தவரை கொள்கையை பரப்புவதில்லை. அது தானாகவே பரவும். நாம் கற்று நமது சந்ததினருக்கும் இதனை கற்று தரவேண்டும். நீங்கள் ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடையவேண்டும் என்றால் அடுத்தவருக்கு சேவை செய்யும் போது மட்டுமே அனைத்தும் வசப்படும்.நமது தளத்தைப்பற்றி அடுத்தவர்களுக்கு சொல்லி நீங்களும் ஆன்மீகவாழ்க்கையில் முன்னேற்றம் அடையுங்கள்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Saturday, April 20, 2013

காயத்ரி மந்திரம் செய்பவர்களுக்கு


வணக்கம் நண்பர்களே !
                     பல நண்பர்கள் இப்பொழுது காயத்ரி மந்திரத்தை பயிற்சியாக எடுத்துக்கொண்டு செய்கிறார்கள். அவர்களின் முயற்சி வெற்றி பெற இறைவனை நான் தினமும் பிராத்திக்கிறேன். இதனைப் பயிற்சி பெறுபவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி அனுபவங்களாக அவர்களின் பயிற்சிக்கு ஏற்றவாறு பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.

பல ஆன்மீகநண்பர்கள் என்னிடம் கேட்டார்கள். ஏன் காயத்ரி மந்திரம்  சொல்லிக்கொடுக்கிறாய் வேறு ஏதாவது செய்யலாமே என்றார்கள். என்னைப்பொருத்தவரை ஒரு மனிதன் ஆன்மீக உலகத்திற்க்கு நுழைய வேண்டுமானால் சிறிய சிறிய பயிற்சி வழியாக அவனை உயர்த்தவேண்டுமே தவிர ஒரே அடியாக அவனை தூக்கி நிறுத்தினால் மேலே இருந்து கீழே விழுந்துவிடுவான். அதனை நான் மனதில் நினைத்துக்கொண்டு இதனை செய்யுங்கள் என்று சொன்னேன்.

நீங்கள் ஒவ்வொரு நாளும் இந்த பயிற்சி செய்யும்போது புது புது அனுபவங்கள் வரலாம். சில பேருக்கு வராமல் கூட இருக்கலாம். வரும் அனுபவங்களை நன்றாக கவனித்து வாருங்கள். சிறிய அனுபவங்கள் கிடைத்தாலும் போதும். அதனை பொக்கிஷங்கள் போல் காத்த வாருங்கள் தொடர்ந்து செய்து வாருங்கள். இன்றும் நடைபெறவில்லை என்றாலும் பரவாயில்லை. எதுவும் 108 நாட்கள் சென்றால் தான் பலன் கொடுக்க ஆரம்பிக்கும்.

தன் உள்ளிருந்து வரும் ஆன்மசக்தியால் மட்டுமே ஒருவன் தன் நிலையை உணரமுடியும் அந்த நிலையை அவன் வெளியில் சொன்னாலும் அதனைப்பற்றி சொல்ல இயலாது அதனால் உங்களுக்கு வரும் அனைத்தையும் கவனித்துக்கொண்டு இருந்தால் போதும் அதுவே மிக பெரிய செயல்.

உங்களின் உள்ளே நடைபெறும் செயலை அனைத்தும் கவனித்து என்னிடம் உங்களால் முடிந்தால் சொல்லலாம் அப்படி சொல்ல தெரியவில்லை என்றாலும் ஒன்றும் பிரச்சினை இல்லை. நான் உங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருப்பது தான் எனது வேலை. குருவாக இருப்பது எனது வேலை இல்லை. ஒருவன் குருவாக இருக்கவேண்டும் என்றால் அவனுக்கு பல தகுதிகள் இருக்கவேண்டும். உங்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினைக்கும் தீர்வினை கொடுக்கவேண்டும். 

அப்படி பிரச்சினையை தீர்ப்பவர்களே குருவாக இருக்கமுடியும். உங்களுக்கு குருவாக யாரை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ளுங்கள். நான் உங்களுக்கு ஒரு வழிகாட்டி மட்டுமே.எந்த செயலையும் நம்பிக்கையுடன் செய்தால் மட்டுமே அது உங்களுக்கு வெற்றியை தரும். இந்த செயலும் வெற்றியை நமக்கு தரபோகிறது என்ற நம்பிக்கையுடன் செயல்படுங்கள். உங்களின் தெய்வம் உங்களை தேடி வரும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

விளக்கம்



வணக்கம் நண்பர்களே!
                    வியாபாரம் செய்யும் நண்பர்களாக என்று ஒரு பதிவை படித்துவிட்டு பல தொழில் அதிபர்கள் என்னிடம் பேசினார்கள். அப்பொழுது தான் எனக்கு தெரிந்து நம்ம பதிவை இவர்களும் படிக்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் குறைந்த நேரத்தில் அவர்கள் இந்த பதிவை படிப்பது மிகப்பெரிய செயல். 

அயல்நாட்டிலிருந்து பேசிய நண்பர்கள் என்னிடம் சொன்னார்கள். நாங்கள் எங்களின் தொழிலிலுக்கு இந்தியாவில் உள்ள ஆன்மீகநபர்களை வைத்திருந்தோம் அப்படி வைத்திருந்தும் எங்களின் தொழில் நஷ்டத்தை தழுவியது என்று சொன்னார்கள். அவர்கள் சொல்லுவது உண்மையான கருத்தாக இருக்கிறது. ஆன்மீகவழியில் ஆலோசனை கொடுதது ஒரு தொழில் நஷ்டமடைய வாய்ப்பில்லை. ஆலோசனை வழங்கியவர்கள் தவறு செய்திருக்ககூடும். 

உங்களுக்கு நான் ஆலோசனை வழங்கும்போது கண்டிப்பாக எந்தவித கட்டணத்தையும் நான் வாங்குவதில்லை உங்களின் தொழில் சிறந்து அதன் மூலம் வருவாய் வரும்போது நீங்கள் பணத்தை தரலாம். உங்களுக்கு எந்தவித இழப்பும் கிடையாது. நீங்கள் சம்பாதித்த பிறகு வரும் வருமானத்தில் இருந்து தான் நீங்கள் கொடுக்கபோகிறீர்கள். அதனால் எந்தவித இழப்பும் கிடையாது.உங்களின் கம்பெனியின் நடவடிக்கையில் எந்தவித குறிக்கீடும் என்னால் வராது. 

உங்களை உயர்த்தி உங்களை வாழவைக்கிறேன். நானும் வாழ்கிறேன். இதில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது. உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை என்னிடம் தொடர்புக்கொண்டு கேட்டுக்கொள்ளலாம்.

பல கம்பெனிகள் என்னிடம் இப்பொழுது இந்த உடன்பாட்டில் வெற்றியுடன் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. உங்களின் கம்பெனியும் இணைத்துக்கொள்ளுங்கள். நீங்களும் வியாபார வானில் நட்சத்திரம் போல் ஜொலிக்கமுடியும்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Friday, April 19, 2013

கடகம்: ஐந்தில் கேது



வணக்கம் நண்பர்களே !
                     கடக ராசிக்கு ஐந்தில் கேது பகவான் நின்றால் முன் ஜென்மத்தில் என்ன மாதிரி பாவங்களை இவர் செய்திருப்பார் என்பதை இப்பதிவில் பார்க்கலாம். கேது பகவான் அமரும் வீட்டின் பலனை தருவார்.

கடக ராசிக்கு ஐந்தாவது வீடாக வருவது விருச்சிகம் அதன் அதிபதி சுக்கிரன்.

செவ்வாய்யின் வீடு என்பதால் இரத்த காய ஏற்படுத்திக்ககூடும்.

அடையாளம்?

விருச்சிக ராசியில் விசாகம் 4 ம் பாதத்தில் கேது அமர்ந்தால்

இவர் கெடுக்கப்பட்ட ஆட்களோடு நிறம் நல்ல பொன்நிறமாக இருப்பார். நடுத்தர உயரமாக இருப்பார். தாய்மொழி மற்றும் மலையாளம் பேச தெரிந்திருக்கும். இவரின் வீடு வடகிழக்கு திசையில் இருந்திருக்கும்.

விருச்சிக ராசியில் அனுஷம் நட்சத்திரத்தில் கேது அமர்ந்தால்

இவர் கெடுக்கப்பட்ட ஆட்களோடு நிறம் கருப்பாக இருப்பார்.குள்ளமானவராக இருப்பார். அந்நிய மொழி பேசுவார். இவரின் வீடு மேற்கு திசையில் இருந்திருக்கும்.

விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரத்தில் கேது அமர்ந்தால்

இவர் கெடுக்கப்பட்ட ஆட்களோடு நிறம் மாநிறமாக இருப்பார்.உயரமானவராக இருந்திருப்பார். இவரின் வீடு தென்மேற்கு திசையில் இருந்திருக்கும்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

விருச்சிக ராசியில் விசாகம் 4 ம் பாதத்தில் கேது அமர்ந்தால்

இதயத்தில் வெட்டுப்பட்டு இறந்திருக்ககூடும்.

விருச்சிக ராசியில் அனுஷம் நட்சத்திரத்தில் கேது அமர்ந்தால்

கால்களில் வெட்டப்பட்டு கொன்றுருக்ககூடும்.

விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரத்தில் கேது அமர்ந்தால்

கழுத்து பகுதியில் வெட்டப்பட்டு கோமா நிலையில் பல நாட்கள் கிடந்து உயிர் போயிருக்கும்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

விருச்சிக ராசியில் விசாகம் 4 ம் பாதத்தில் கேது அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடகிழக்கு திசையில் இருக்கும். 

விருச்சிக ராசியில் அனுஷம் நட்சத்திரத்தில் கேது அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு மேற்கு திசையில் இருக்கும். 

விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரத்தில் கேது அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் தென்மேற்கு திசையில் இருக்கும். 

பரிகாரம் 

செவ்வாய் கிழமையில் விநாயகர் மற்றும் முருகனை வணங்கிவாருங்கள். சம்பந்தப்பட்ட ஆத்மாவை நீங்கள் அடையாளம் காணமுடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Thursday, April 18, 2013

சிவமே: பகுதி 7



வணக்கம் நண்பர்களே!
                     கடந்த சிவமே பதிவில் தாந்திரா முறையைப் பற்றி சொல்லிருந்தேன்.  சாமியார்கள் இல்லறவாசிகளை பார்த்து நீங்கள் எந்தமுறையை பின்பற்றினாலும் அது கர்மாவின் வினையில் சிக்கிக்கொள்வீர்கள் என்று சொல்லுகிறார்கள். காமத்தால் எப்படி காமத்தை வெல்லமுடியும் என்று கேட்கிறார்கள். முள்ளை முள்ளால் எடுப்பது சாத்தியம் இல்லை என்று கேட்கிறார்கள்.

அவர்கள் சொல்லுவதும் ஒரு வகையில் சிந்தித்து பார்த்தால் அப்படி தான் தோன்றுகிறது. ஒரு வாரிசை பெற்றுவிட்டாலே அது கர்மாவின் வினையில் தான் கொண்டுவிடும். நீங்கள் செய்யும் செயலில் இருந்தே கடவுளை அடையமுடியும் என்று மதத்தில் சொல்லிவைத்துள்ளார்கள். அதனால் காமம் என்ற செயலில் இருந்து கடவுளை அடையமுடியும் என்று சொல்லியுள்ளார்கள். 

தாந்திரா யோகம் மீது பல விவாதங்களை வைக்கிறார்கள். ஒருவன் எந்தநிலையில் இருந்தாலும் அவனை தன் சுய அனுபவத்தின் வழியாக உயர்நிலைக்கு செல்லவைக்க முடியும் என்பதை காட்டுவதே நமது மதத்தில் உள்ள தனிசிறப்பு. ஒருவனாக இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை தாந்திராவிற்க்கு இரண்டு பேர் தேவை. 

இன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவியின் உறவு என்பது எவ்வளவு ஒற்றுமை இருக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. இவர்களின் ஒற்றுமையை தாண்டி இருவரின் ஆத்மாவும் ஒரே நிலையில் இருக்க வேண்டும் அப்பொழுது மட்டுமே தாந்திரா சாத்தியப்படும். கணவன் ஒரு மாதிரி என்றால் மனைவி ஒரு மாதிரியான பழக்கவழக்கத்தை கொண்டுள்ளார்கள்.

இல்லறவாழ்க்கையை தீர்மானிப்பது பணம் என்றாகிவிட்ட இன்றைய சூழ்நிலையில் இருவரின் ஆத்மாவும் ஒரே ஆத்மாவாக எப்படி மாறி கடவுளை அடையமுடியும் என்பது மில்லியன் கேள்வியாகவே இருக்கிறது. இதனை நான் கேட்கவில்லை பல பிரம்மசாரிகள் கேட்கிறார்கள். அவர்களுக்கு பதில் என்னால் சொல்லமுடியாத ஒன்றாக தான் இருக்கிறது.

ஏன் என்னால் சொல்லமுடியவில்லை என்றால் இன்றைய காலகட்டத்தில் திருமண வாழ்க்கையை தீர்மானிப்பது எதுவாக இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். இதனைப்பற்றி நான் சொல்லவில்லை. இல்லறவாழ்க்கையில் இருவரும் ஈடுபட்டு குழந்தையை பெற்றால் கூட இருவரும் ஆத்மா ரீதியாக தனித்தனியாக தான் இருக்கிறார்கள். இந்த காலத்தில் மனது ரீதியாககூட ஒற்றுமை இல்லை. பின்பு எப்படி இல்லறவாழ்க்கையில் இருந்துக்கொண்டு இறைவனை அடையமுடியும். இதனை நான் கேட்கவில்லை பிரம்மசாரிகள் இல்லறவாழ்க்கையில் இருப்பவர்களை பார்த்து கேட்கும் கேள்வி.

ஒருவர் நினைத்தால் அவர்கள் தேடும் நிலையை அடைந்துவிடமுடியும். இருவரையும் இழுத்துக்கொண்டு செல்வது முடியாத காரியமாகதான் இருக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.