Followers

Friday, April 5, 2013

குழந்தை பாக்கியம் பகுதி 1



வணக்கம் நண்பர்களே!
                     நாம் பார்த்துக்கொண்டு இருப்பதும் பூர்வபுண்ணியம் பகுதி அதில் மிகப்பெரிய கருத்து என்ன என்றால் குழந்தை பாக்கியம். இதுவரை அதனைப்பற்றி நாம் பார்க்கவில்லை இனி இதனைப்பற்றி பார்க்கலாம்.

                     ஒவ்வொரு மனிதனும் தனக்கு ஒரு வாரிசு தேவை. அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி வாரிசு வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். திருமணம் முடிந்து 1 வருடத்தில் குழந்தை பாக்கியம் இருந்தால் அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. திருமணம் முடிந்த இரண்டு வருடங்கள் அல்லது மூன்று வருடங்கள் முடிந்துவிட்ட நிலையில் அந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை என்றால் அவ்வளவு தான் சுற்றி இருப்பவர்கள் அவர்களை கேள்விகேட்டே கொன்றுவிடுவார்கள்.

பூர்வபுண்ணியம் எனும் ஐந்தாம் வீடு தான் குழந்தைபாக்கியத்திற்க்கு காரகம் வகிக்கிறது. நாம் முன்ஜென்மத்தில் நல்லது செய்து இருந்தால் இந்த ஜென்மத்தில் நமக்கு குழந்தை பாக்கியம் இருக்கும் முன்ஜென்மத்தில் அதிக பாவம் செய்து இருந்தால் குழந்தை பாக்கியம் நமக்கு கிடைக்காது. எவ்வளவு முக்கியமான ஒரு விசயத்தை தூக்கி பூர்வபுண்ணியத்தில் வைத்திருக்கிறார்கள் பாருங்கள். இன்று பரவலாக பார்த்தால் அதிகமான தம்பதிகள் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கிறார்கள். இதற்கு காரணம் என்ன என்பதைப் பற்றி இனிவரும் பதிவுகளில் ஒவ்வொன்றாக பார்க்கலாம். 

குழந்தை பாக்கியத்திற்க்கு முதல் காரகன் குரு கிரகம். ஒரு ஜாதகத்தில் குரு கிரகம் நல்லமுறையில் அமைந்துவிட்டாலே போதும் வருகின்ற அனைத்து பிரச்சினையும் சமாளித்துவிடலாம். மங்கலமான நிகழ்ச்சிகள் அடிக்கடி வீட்டில் நடைபெறும். குரு கிரகம் கெட்டுவிட்டால் வீட்டில் நிம்மதி போய்விடும் என்று சொல்லவேண்டியது தான். எவ்வளவு சம்பாதித்தாலும் வீட்டில் குழந்தை என்று ஒன்று இல்லை என்றால் சம்பாதிப்பது எதற்கு? அனைத்தும் வீண் தானே.

குழந்தை பாக்கியத்திற்க்கு காரகம் வகிக்கிறவர் ஒரு ஜாதகத்தில் கெடுகிறான் என்றால் அந்த வீட்டில் முன்னோர்கள் பிராமணர்களுக்கு கோவில்களுக்கு வேதங்களை படிப்பவர்களுக்கு மதவாதிகளுக்கு கெடுதலை செய்து இருப்பார்கள். அப்படி கெடுதல் செய்யும்போது சம்பந்தப்பட்ட வாரிசுகளுக்கு பாவத்தை சேர்க்கிறார்கள். நான் பலபேர்களிடம் சொல்லுவது உங்களின் பிள்ளைகளுக்கு சொத்து சேர்க்கவிட்டாலும் பரவாயில்லை பாவத்தை சேர்த்துவிடாதீர்கள் என்று தான் சொல்லுவேன்.


குருவை சாந்தப்படுத்தும் வழிகள் என்ன என்று பார்க்கலாம்.

1 ஏழு வாரம் தொடர்ச்சியாக விரதம் இருந்து குருவை வணங்கிவாருங்கள். கடைசி ஏழாவது வாரம் நவக்கிரங்களில் உள்ள குருவிற்க்கு அபிஷேகம் செய்யுங்கள்.

2 ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு உதவி செய்யுங்கள்.

3 உணவில் கொண்டைக்கடலையை விரும்பி எடுத்துக்கொள்ளுங்கள்.

4 மஞ்சள் ஆடையை விரும்பி அணியுங்கள்.

5.சொந்த மதத்தைப்பற்றி படியுங்கள்.

6. கோவிலுக்கு சென்றால் பிராமணர்களுக்கு பணம் தானம் செய்யுங்கள்.

7. தயிர்சாதத்தை அன்னதானமாக வழங்கலாம்.

8. வியாழக்கிழமை தோறும் வடக்கு பார்த்து தியானம் செய்யுங்கள்.

9. ஆலங்குடி சென்று வாருங்கள்.

10.ஹோமங்கள் நடைபெறும் இடங்களில் கலந்துக்கொள்ளுங்கள்.

11. நெய்யை உணவில் எடுத்துக்கொள்ளுங்கள்.

12. கோவில்களில் நடைபெறும் உழவாரபணிகளில் கலந்துக்கொள்ளுங்கள்.

13 மத சம்மந்தமாக நடைபெறும் சொற்ப்பொழிவுகளில் கலந்துக்கொள்ளுங்கள்.

14. ஷீரடி சாய்பாபாவை வியாழக்கிழமை தோறும் வழிப்பட்டு வாருங்கள்.

15. மன்னார்குடி ஸ்ரீ இராஜாகோபால சுவாமி கோவிலுக்கு சென்று அங்கு குழந்தை கிருஷ்ணரை கையில் கொடுப்பார்கள் அதனை வாங்கி கையில் வைத்துக்கொண்டு இராஜாகோபாலனை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

இதனை நீங்கள் பின்பற்றி பார்க்கலாம்.

அடுத்த பதிவில் பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: