Followers

Sunday, April 7, 2013

சோதிடம்: குழந்தை பாக்கியம் பகுதி 2



வணக்கம் நண்பர்களே !
                    குழந்தை பாக்கியத்தில் ஒரு ஜாதகத்தை பார்க்கலாம். இது ஒரு பெண்ணின் ஜாதகம். இளம் வயதில் திருமணம் நடைபெற்றது. திருமண நடைபெற்று பல வருடங்கள் குழந்தை பாக்கியம் இல்லை. பல மருத்துவர்களிடம் காண்பித்தும் குழந்தைப் பாக்கியம் இல்லை. இவரின் ஜாதகத்தைப் பார்க்கலாம்.

லக்கினம் தனுசு அதன் அதிபதி குரு ஏழில் பகையாக அமர்ந்துள்ளார். ஐந்தாம் வீட்டு அதிபதி செவ்வாய் நீசமாகி அமர்ந்துள்ளார். ஐந்தாம் வீட்டு அதிபதி நீசமாகிவிட்டார். நீசமாகி அமர்ந்திருக்கும் வீடு எட்டாம் வீடு. எப்படிபட்ட சிக்கல். சரி ஐந்தாம் அதிபதியின் நிலை மோசமாகிவிட்டது அடுத்தது குரு நன்றாக இருந்தால் குழந்தை பாக்கியத்தை தந்துவிடும் என்று பார்த்தால் குரு பகை பெற்று அமர்ந்துவிட்டார். இரண்டு வழியும் அடைபட்டுவிட்டது. குழந்தை பாக்கியம் இல்லாமல் செய்துவி்ட்டது. இப்படி ஒரு சில பேருக்கு இரண்டு விதத்திலும் அடிப்பட்டு போய்விடும். 

ஒரு சில பேருக்கு நாற்பது வயதில் கூட குழந்தை பாக்கியம் இருக்கும். அது என்ன கணக்கு என்றால் கர்ம கணக்கில் வரும். இவருக்கு திதி செய்வதற்க்கு என்று ஒரு வாரிசை கடவுள் கொடுப்பார் அதனை செய்பவர்கள் சனியும் செவ்வாயும். இந்த ஜாதகத்தில் இருவரின் நிலையும் பரிதாபமாக இருக்கிறது. இந்த காலத்தில் நாற்பது வயது வரை ஒரு பெண்ணிற்க்கு குழந்தை இல்லை என்றால் எப்படி கட்டினவன் சும்மா இருப்பான். வேறு பெண்ணை திருமணம் செய்துக்கொள்வான். 

ஏழில் அமர்ந்த லக்கினாதிபதியே இவரின் திருமண வாழ்க்கைக்கு பிரச்சினையை கொடுத்துவிட்டார். இந்த பெண்ணை விட்டுவிட்டு அவர் வேறு திருமணம் செய்துக்கொண்டார். ஏழாம் வீட்டு அதிபதி விரையாமாகவும் இருக்கிறது. 

இவர் என்னிடம் சோதிடம் பார்க்க வந்தது கடந்த மாதம் எல்லாம் முடிந்த பிறகு என்னை வந்து பார்த்தால் நான் என்ன செய்ய முடியும். என்னிடம் முன்பே சோதிடம் பார்க்க வந்திருந்தால் என்ன பரிகாரம் செய்ய சொல்லிருப்பேன் தெரியுமா.

திருச்செந்தூர் சென்று முருகனை வணங்கி வாருங்கள் என்று சொல்லிருப்பேன். ஏன் அவ்வாறு சொல்லிருப்பேன் என்றால் செவ்வாய்க்கும் குருவுக்கு சேர்த்து ஒரே பரிகாரமாக முடிந்திருக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

2 comments:

KJ said...

Sir, good lesson. Lagnathypathy guru sits in 7th place and seeing lagnam. This is good sign. Why still she is not having child and prob in marriage life. Wherever guru sits, he is suba graham, as he ll do the good only know. Pl clarify sir.

rajeshsubbu said...

வணக்கம் KJ மிதுனத்தில் அமரும் குரு வில்லங்கம் அதிகமாக கொடுப்பார். அதனால் இந்த பெண்ணிற்க்கு நடந்திருக்கும். லக்கினாதிபதி என்பவர் எல்லாம் நேரங்களிலும் நல்லது செய்வது இல்லை. அவரும் கெடுதல் செய்வார்.