Followers

Monday, April 1, 2013

பூர்வ புண்ணியம் 49



வணக்கம் நண்பர்களே!
                    செவ்வாய் மற்றும் சனியும் சேர்ந்து பூர்வபுண்ணியத்தில் அமர்ந்தால் முன்ஜென்மத்தில் என்ன பாவத்தை செய்திருப்பார் என்பதை நாம் இதுவரை ஒவ்வொரு லக்கினமாக பார்த்து வந்தோம். 

பூர்வபுண்ணியத்தில் இருகிரகங்களும் அமரும்போது அதிகமான தீயபலன்கள் நடைபெறும் என்பதை நாம் பார்த்தோம். இப்படி தீயபலன்கள் இப்பொழுதும் நடைபெறும். முன்ஜென்மத்தில் இருந்த மாதிரி இந்த ஜென்மத்தில் இருக்காமல் நமது பழக்கவழகத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். ஜாதகத்தில் இப்படி தான் இருக்கு அதனால் நான் இப்படி தான் இருப்பேன் என்று சொல்லிக்கொண்டு தீயபழகத்தில் ஈடுபடாமல் இந்த ஜென்மத்தை நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

முன்ஜென்மத்தில் இவ்வளவு கொடுமை செய்தாலும் ஜாதகத்தில் ஒரு சில அமைப்புகள் உங்களை மனிதப்பிறப்பு எடுக்க வைத்திருக்கிறது என்பதை மனதில் கொண்டு இந்த ஜென்மத்திலாவது நல்லதை செய்ய வேண்டும் என்று எண்ண வேண்டும். மனிதப்பிறப்பு எவ்வளவு அற்புதம் நிறைந்தது என்பதை பல பதிவுகளில் சொல்லியுள்ளேன். மனிதப்பிறப்பு அடுத்தவரை விட உங்களுக்கு சிறந்தது என்பதை முதலில் நீங்கள் உணருங்கள்.

இவ்வளவு பாவம் செய்துக்கொண்டு மனிதப்பிறப்பை கொடுத்த ஆண்டவனுக்கு நன்றியை சொல்லிக்கொண்டு இந்த மனிதப்பிறப்பை நன்றாக பயன்படுத்திக்கொண்டு இந்த ஜென்மத்தில் கரைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டு செயல்படுங்கள். உங்களை மனிதப்பிறப்பை எடுக்க வைத்தபோதை கடவுள் உங்கள் மேல் கருணை காட்டுக்கிறார் என்று எண்ணிக்கொண்டு செயல்படுங்கள்.

செவ்வாய் சனி ஐந்தில் இருப்பவர்கள் பல பேர் என்னிடம் பேசும்போது நீங்கள் சொல்லுவது போல் தான் நாங்கள் இந்த ஜென்மத்திலும் செய்துக்கொண்டு இருந்தோம் இப்பொழுது இதனை படித்தபிறகு திருந்திவிட்டோம் என்று சொன்னார்கள். பலபேருக்கு இந்த கிரக அமைப்பு இருக்கிறது அவர்களும் திருந்தவேண்டும் என்பதை இந்த பூர்வபுண்ணிய தொடரின் நோக்கம்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: