Followers

Saturday, April 6, 2013

ஆன்மீக அனுபவங்கள் 81



வணக்கம் நண்பர்களே!
                     நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் பிராத்தனை செய்துக்கொண்டு இருக்கிறோம். அந்த பிராத்தனையை முறைப்படுத்திச் செய்தால் நமக்கு பலன் அதனைப்பற்றி சொல்ல தான் இந்த பதிவு

நாம் சொல்லும் மந்திரங்கள் முக்கியமான ஒன்று. மந்திரங்களை உருவாக்கிய முனிவர்கள் சாதாரணமான மனிதன் சூட்சுமமான உலகத்திற்க்கு அவன் பிராத்தனை செல்லவேண்டும் என்று எண்ணி தான் மந்திரங்களை வடிமைத்துள்ளார்கள். ஒரு சாதாரணமான மனிதன் அந்த மந்திரத்தை உச்சரிக்கும்போது அவன் சூட்சமான உலகத்தில் தொடர்புக்கொள்கிறான். நமது முன்னோர்கள் கஷ்டப்பட்டு இதனை உருவாக்கியுள்ளார்கள். நீங்கள் எடுக்கும் மந்திரம் பழைய மந்திரங்களை எடுங்கள். இன்று பலபேர் அவர்கள் இஷ்டத்திற்க்கு மந்திரங்களை உருவாக்குகிறார்கள். இந்த மந்திரங்களை நீங்கள் சொல்லுவதால் கஷ்டம் தான் வருமே தவிர உங்களுக்கு அதனால் பயன் ஒன்றும் இல்லை. 

புதியதாக உருவாக்கும் மந்திரங்கள் சூட்சுமமான உலகத்திற்க்கு செல்லாமல் வில்லங்கமான உலகத்திற்க்கு சென்றுவிடும் தரத்தில் உள்ளன. இந்த மந்திரங்கள் சொல்லும்போது ஏதோ நடக்கிறது போல் பிரச்சாரம் செய்வார்கள். இது எல்லாம் உண்மை இல்லை. நீங்கள் சும்மா ஒரு நடிகை பேரைக்கூட சொன்னாலும் உங்களின் மனது ஒரு மாயா தோற்றத்தை உருவாக்கி காட்டும். அதனால் நடந்தது என்றால் நீங்கள் தான் இந்த உலகத்தில் வடிகட்டிய முட்டாளாக இருப்பீர்கள்.

நீங்கள் எடுக்கும் மந்திரங்கள் நம் முன்னோர்கள் சொல்லிவிட்ட சென்ற மந்திரங்களை எடுத்துக்கொண்டு நீங்கள் அதனை சொல்லிவாருங்கள். நான் நமது நண்பர்களுக்கு சொல்லும் மந்திரங்கள் அம்மன் மற்றும் முருகன்,விநாயகர் சில எல்லைக்காக்கும் தெய்வங்களாகதான் எடுக்க சொல்லுவேன். சிவன் மற்றும் பெருமாளை தவிர்க்க சொல்லும் காரணம் நீங்கள் முதன் முதலில் ஆன்மீக உலகத்திற்க்கு பிரவேசிக்க போகிறீர்கள். எடுத்தவுடனே நீங்கள் அதிகசக்தி உள்ளதை தொடக்கூடாது என்பதால் இதனை தவிர்க்க சொல்லுகிறேன். சிவன் பெருமாளிடம் கொஞ்சம் தவறாக நடந்தாலும் உங்களுக்கு பைத்தியம் தான் ஏற்படும். உங்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டால் அது மிகப்பெரிய பிரச்சினை அதனை குணப்படுத்தமுடியாது.

ஆன்மிக உலகத்திற்க்கு செல்லாமல் பைத்திய உலகத்திற்க்கு செல்ல வேண்டிய நிலையை ஏன் நாமே ஏற்படுத்திக்கொள்வானே. சரியாக சிந்தித்து செயல்படவேண்டும். அம்மனாக இருந்தால் உங்களுக்கு அம்மாவாக இருந்து உங்களை பாதுக்காக்கும். 

எந்த அம்மாவும் தன் மகன் தவறு செய்தாலும் தண்டிக்கமாட்டாள் அன்பாக திருத்துவாள் அதனால் நான் பெரும்பாலும் அம்மனின் மந்திரத்தை சொல்லுங்கள் என்று நமது நண்பர்களுக்கு சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

உங்களுக்கு பிடித்த அம்மனை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள். நாம் முதல் வகுப்பில் இருந்து பள்ளிகல்வியை தொடங்குவோம். எளிமையாக படிப்படியாக செல்லலாம். வளர்பிறை வரப்போகிறது அனைவரும் உங்களுக்கு பிடித்த அம்மனை இப்பொழுதே தேர்வுச் செய்துக்கொள்ளுங்கள். வளர்பிறை ஆரம்பி்த்தவுடன் செய்துக்கொள்ளலாம். நீங்கள் தேர்வு செய்துவிட்டு என்னிடம் சொல்லுங்கள் உங்களுக்கு எப்படி செய்வது என்று நான் சொல்லித்தருகிறேன். 

உடனே தேர்வுச்செய்துக்கொண்டு என்னை தொடர்புக்கொள்ளலாம். நமது தளத்திற்க்கு வரும் பல நண்பர்கள் பயிற்சி செய்துக்கொண்டு இருக்கிறார்கள். நீங்களும் செய்யுங்கள். எளிமையான ஒரு செயல் இது. ஒரு நாளைக்கு 5 நிமிடம் ஒதுக்கிச்செய்துக்கொண்டால் போதும்.  உங்களின் வாழ்க்கையில் நிச்சயம் மாற்றம் வரும். அதற்கு நான் உத்திரவாதம் தருகிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.