Followers

Friday, April 12, 2013

ஆன்மீக அனுபவங்கள் 82



வணக்கம் நண்பர்களே !
                     இன்று பல நண்பர்கள் காயத்ரி மந்திரங்கள் பயிற்சியை ஆரம்பித்து இருக்கிறார்கள் அவர்களுக்கு இறைவனின் அருள் கிடைக்க இறைவனிடம் பிராத்தனையை செய்து உள்ளேன். தொடர்ந்து பல நண்பர்கள் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் வளர்பிறை முடியும்வரை ஏதாவது ஒரு நாளை தேர்ந்தெடுத்து நீங்கள் ஆரம்பிக்கலாம். 

நான் குருவிடம் மந்திரதீட்சை பெறும்போது இது தான் நம்மை காப்பாற்றும். இது தான் நமது உலகம் என்று அந்த மந்திரத்தை பெற்றேன். நீங்களும் இது தான் உங்களை காப்பாற்றும் என்று எண்ணி இந்த மந்திரத்தை உரு ஏற்றி வர அது உங்களை காப்பாற்றும். ஒரு சதவீதம் கூட அவநம்பிக்கை வைக்கவேண்டாம். முழுவதும் நம்பிக்கையை வைக்கும்போது மட்டுமே வேலை செய்ய ஆரம்பிக்கும். 

108 நாள் வரை அடிக்கடி கோவிலுக்கு சென்று வாருங்கள். கோவிலுக்கு செல்லும்போது மூலவரை நன்றாக பாருங்கள். தினமும் கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தாலும் சென்று வரலாம். மலை மீது இருக்கும் கோவிலுக்கு சென்று வாருங்கள். தினமும் கோவிலுக்கு செல்லமுடியவில்லை என்றாலும் வாரத்திற்க்கு ஒரு முறையாது நீங்கள் சென்று வரவேண்டும்.

இனிமேல் மந்திரத்தை எடுக்கும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுக்கோள். நீங்கள் எடுக்கும்போது அம்மனை எடுங்கள் சொல்லி இருந்தேன். நேற்று ஒரு நண்பர் பேசினார் நான் வராகி அம்மனை எடுக்கலாமா என்று கேட்டுருந்தார். அப்பொழுது தான் எனக்கு தோன்றியது இதனைப்பற்றி சொல்லாமல் விட்டுவிட்டேன். நீங்கள் எடுககும் அம்மன் சாந்தமான அம்மனாக இருந்தால் மிகவும் நல்லது. 

காளி போன்ற தெய்வங்களை எடுக்க வேண்டாம். சிவன் பெருமாள் காளி போன்ற தெய்வங்களை எடுக்கும்போது உங்களால் சமாளிக்கமுடியாது. உங்களின் ஆத்மாவிற்க்கு அதிகமான பலம் இருக்கும் போது மட்டுமே இது எல்லாம் சாத்தியப்படும். நாம் எல்லாம் சிவன் சிவன் என்று சொல்லிக்கொண்டு திரிகிறோம். உண்மையில் அவரை நேரில் தரிசிக்கும்போது இனிமேல் இந்த பக்கம் தலைவைத்து படுக்ககூடாது என்றே தோன்றும். 

இதனைப்பற்றி தெரியாமல் தான் அனைவரும் சிவனை எடு என்று சொல்லுவார்கள். உண்மையில் அவரை தரிசிக்கும் ஆற்றல் உள்ள ஆத்மாக்கள் மட்டுமே தரிசிக்கமுடியும். வராகி காளி போன்ற தெய்வங்களும் அதே அளவு சக்தி உடையவை. நீங்கள் யாராது சொல்லுகிறார்கள் என்று போய் வம்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள். 


இறைவனுக்கு பூஜையில் வைக்கும் நைவேத்தியம் முக்கியபங்கு பெரும். பெரிய அளவு சக்தி உடைய தெய்வங்களை எடுக்கும்போது உங்களால் அதற்கு சரியான நைவேத்தியம் படைக்கவில்லை என்றால் அதுவே உங்களுக்கு பிரச்சினையை கொடுத்துவிடும். ஒவ்வொரு தெய்வத்திற்க்கும் அந்த தெய்வத்திற்க்கு ஏற்ற நைவேத்தியம் படைத்தால் மட்டுமே அந்த தெய்வத்தின் மந்திர உரு ஏற்ற முடியும்.

காலபைரவர் பூஜை இப்பொழுது நல்ல விசேஷமாக இருக்கிறது. ஒவ்வொரு அஷ்டமியும் காலபைரவரை விடமாட்டார்கள் நமது மக்கள். இது வரை பல வித நைவேத்தியத்தை படைத்து இருப்பீர்கள். நீங்கள் பூஜை செய்ததால் ஒன்றும் நடக்கவில்லை என்றால் நான் ஒன்று சொல்லுகிறேன் இது மாதிரி ஒரு தடவை செய்து பாருங்கள். நீங்கள் நினைப்பது நடக்கும். உங்கள் வீட்டில் பூஜை செய்யும்போது சாராயத்தை வாங்கி பூஜையில் வையுங்கள். இப்பொழுது சாராயம் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன். குவார்ட்டர் பாட்டில் வாங்கி வைத்து வேண்டுதலை வைத்துப்பாருங்கள் கண்டிப்பாக நடக்கும். மது என்றால் அவருக்கு பிரியமான ஒன்று.

தொடர்ந்து அடுத்த பதிவிலும் இதனைப்பற்றி பார்க்கலாம்

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


No comments: