Followers

Thursday, April 18, 2013

ஆன்மீக அனுபவங்கள் 84


வணக்கம் நண்பர்களே!
                    தெய்வசக்தியைப்பற்றி பார்த்து வந்தோம் அதன் தொடர்ச்சியாக இந்த பதிவிலும் ஒரு சில தகவல்களை தருவோம்.

தெய்வங்களுக்கு நீங்கள் கொடுக்கும் நைவேத்தியம்போலவே நீங்கள் கொடுக்கும் மூலிகையும் சிறப்பு வாய்ந்த ஒன்று தான். சிவனுக்கு வில்வம். பெருமாளுக்கு துளசி இப்படி பல தெய்வங்களுக்கும் மூலிகை இருக்கிறது அதனை நீங்கள் வைத்து வணங்கும்போது உங்களுக்கு கூடுதல் நன்மை அடையமுடியும். கேரளாவில் மந்திரம் மற்றும் மாந்தீரிகம் எல்லாம் சிறப்பாக வெளியில் பேசப்படுவதற்க்கு காரணம் அவர்கள் மூலிகைகளை அதிகமாக பயன்படுத்துவதால் அதிக சக்தியுடன் செயல்படுகிறது. அதனுடன் மலையின் மீது எந்த செயல் செய்தாலும் அதிக சக்தியுடன் செயல்படும்.

நீங்களும் ஒவ்வொரு தெய்வத்திற்க்கும் ஒரு மூலிகை இருக்கும் அந்த மூலிகையை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அனைத்தையும் சரியாக செய்யும்போது மட்டுமே உங்களால் எளிதில் இறைவனை அடையமுடியும். பூஜை செய்தாலும் சரியான முறைப்படி செய்கின்ற பூஜைக்கு சக்தி அதிகம்.

மை என்று சொல்லுகிறோம் அல்லவா ஏன் இது அவ்வளவு பிரபலமாக இருக்கிறது என்றால் அனைத்து மூலிகையும் சேர்த்து செய்து அதன் மீது தெய்வத்தை உருஏற்றுகிறார்கள். மூலிகைகளில் எளிதில் தெய்வங்கள் வாசம் செய்கிறது. செயல்பாடும் அதிகமாக இருக்கின்றது. அதனால் தான் மையி்ன் வேலை அதிகசெயல்பாட்டை காட்டுகிறது.

ஒரு சில பொருட்களை வைத்தால் தான் ஒரு சில தெய்வங்களை உரு ஏற்றமுடியும். பிள்ளையார் என்றால் அருகம்புல் கண்டிப்பாக வைக்கவேண்டும். ஆஞ்சநேயர் என்றால் வெற்றிலை. முருகனுக்கு தேனும் தினையும் கலந்து வைக்க வேண்டும். இப்படி நைவேத்தியம் மற்றும் மூலிகையும் வைக்கும்போது மந்திர உரு எளிதில் உருஏறும்.

ஒவ்வொரு தெய்வத்திற்க்கும் ஒரு மூலிகை மற்றும் நைவேத்தியம் இருக்கிறது அதனை நீங்கள் பயன்படுத்தி அந்த தெய்வத்தின் அருளை பெறுங்கள்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 



No comments: