Followers

Thursday, April 18, 2013

மிதுனம்: ஐந்தில் கேது



வணக்கம் நண்பர்களே !
                     மிதுன ராசிக்கு ஐந்தில் கேது பகவான் நின்றால் முன் ஜென்மத்தில் என்ன மாதிரி பாவங்களை இவர் செய்திருப்பார் என்பதை இப்பதிவில் பார்க்கலாம். கேது பகவான் அமரும் வீட்டின் பலனை தருவார்.

மிதுன ராசிக்கு ஐந்தாவது வீடாக வருவது துலாம் அதன் அதிபதி சுக்கிரன்.

சுக்கிரனின் வீடு என்பதால் பெண்களின் வழியில் தொந்தரவு கொடுத்திருக்ககூடும். காமம் சார்ந்த பிரச்சினையாகவும் இருக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

அடையாளம்?

துலாம் ராசியில் சித்திரை 3,4 பாதத்தில் கேது அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருப்பார்.உயரமானவாராக இருந்திருப்பார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழி தெரிந்திருக்கும். இவரின் வீடு தெற்கு திசையில் அமைந்திருக்கும்.

துலாம் ராசியில் சுவாதி நட்சத்திரத்தில் கேது அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் கருப்பு நிறமாக இருப்பார். உயரமானவராக இருக்ககூடும். அந்நிய மொழி பேச தெரிந்திருக்ககூடும். இவரின் வீடு தென்மேற்கு திசையில் இருந்திருக்கும். 

துலாம் ராசியில் விசாகம் 1, 2, 3 பாதத்தில் கேது அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் நல்ல பொன்நிறமாக இருப்பார். கன்னடம், மலையாளம் மொழிகள் தெரிந்திருக்கும். நடுத்தர உயரம் இருந்திருக்கும். இவரின் வீடு வடகிழக்கில் இருந்திருக்கும்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

துலாம் ராசியில் சித்திரை 3, 4 பாதத்தில் கேது அமர்ந்தால்

கை தோள் மற்றும் மர்ம ஸ்தானத்தில் தாக்கி கொன்றுருக்ககூடும்

துலாம் ராசியில் சுவாதி நட்சத்திரத்தில் கேது அமர்ந்தால்

தொடை பாதம் கணுக்கால் மற்றும் மர்மஸ்தானத்தில் தாக்கி கொன்றுருக்ககூடும்.

துலாம் ராசியில் விசாகம் 1, 2, 3 பாதத்தில் கேது அமர்ந்தால்

இதயம் மற்றும் மர்மஸ்தானத்தில் தாக்கி கொன்றுருக்ககூடும்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

துலாம் ராசியில் சித்திரை 3, 4 பாதத்தில் கேது அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து தெற்க்கில் மற்றும் வடகிழக்கு இருப்பார். 

துலாம் ராசியில் சுவாதி நட்சத்திரத்தில் கேது அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து தென்மேற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருப்பார்.

துலாம் ராசியில் விசாகம் 1, 2, 3 பாதத்தில் கேது அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து வடகிழக்கு திசையில் இருப்பார். 

பரிகாரம்

விநாயகரை சதுர்த்தி திதியில் வணங்கி வாருங்கள். வெள்ளிக்கிழமை அன்று அம்மனையும் சேர்த்து வணங்கி வாருங்கள் சம்பந்தப்பட்ட ஆத்மா உங்களை தேடிவரும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: