Followers

Saturday, April 27, 2013

துலாம்: ஐந்தில் கேது


வணக்கம் நண்பர்களே !                  
                     துலாம் ராசிக்கு ஐந்தில் கேது நின்றால் முன் ஜென்மத்தில் இவர் என்ன பாவம் செய்திருப்பார் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

துலாம் ராசிக்கு ஐந்தாவது வீடாக வருவது கும்பம் அதன் அதிபதி சனி

அடையாளம்?

கும்ப ராசி அவிட்டம் 3, 4 ம் பாதங்களில் கேது பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருந்திருப்பார். தெலுங்கு மொழி பேசியிருப்பார். இவரின் வீடு தெற்கு திசையில் இருந்திருக்கும்

கும்ப ராசி சதய நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் கருப்பு நிறமாக இருப்பார். அந்நிய மொழி பேசியிருப்பார்.இவரின் வீடு தென்மேற்கு திசையில் இருந்திருக்கும்

கும்ப ராசி பூரட்டாதி 1 2 3 ம் பாதங்களில் கேது பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் பொன்நிறமாக மின்னுவார். தாய்மொழி மட்டும் பேசியிருப்பார். இவரின் வீடு வடகிழக்கு திசையில் இருந்திருக்கும்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

கும்ப ராசி அவிட்டம் 3, 4 ம் பாதங்களில் கேது பகவான் அமர்ந்தால்

கையில் வெட்டுக்காயம் ஏற்படுத்தி அதன் மூலம் கொன்றுருக்ககூடும்.

கும்ப ராசி சதய நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்

கால்களில் வெட்டப்பட்டு இறந்திருக்ககூடும்.

கும்ப ராசி பூரட்டாதி 1, 2 ,3 ம் பாதங்களில் கேது பகவான் அமர்ந்தால்

இதயத்தில் வெட்டுபட்டு கொன்றுக்ககூடும்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

கும்ப ராசி அவிட்டம் 3, 4 ம் பாதங்களில் கேது பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு தெற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும்.

கும்ப ராசி சதய நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும்.

கும்ப ராசி பூரட்டாதி 1, 2 ,3 ம் பாதங்களில் கேது பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடகிழக்கு மற்றும் தெற்கு திசையில் இருக்கும்.

பரிகாரம்

சனிக்கிழமை தோறும் கேது மற்றும் சனி பகவானை வணங்கி வாருங்கள். நீங்கள் தேடும் அந்த நபர் உங்களை சந்திப்பார்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: