Followers

Wednesday, April 17, 2013

வியாபாரம் செய்யும் நண்பர்களுக்காக!



வணக்கம் நண்பர்களே!
                    நீங்கள் வியாபாரம் செய்துக்கொண்டு இருந்தீர்கள் என்றால் உங்களின் வியாபார முன்னேற்றத்திற்க்கு கண்டிப்பாக ஆன்மீகவழியில் யாராது ஒரு நபர் உங்களுக்கு உதவி செய்யவேண்டும். ஆன்மீக வழியில் உங்களுக்கு உதவி செய்யும் போது மட்டுமே உங்களின் வியாபாரம் செழிக்கமுடியும்.

உங்களின் வியாபாரம் எந்தவிதத்திலும் நஷ்டமடைய கூடாது. நஷ்டத்தை தழுவிக்கின்ற பல கம்பெனிகள் ஆன்மீக ஆலோசனை இல்லாத காரணத்தால் மட்டுமே நஷ்டமடையும் என்பதில் பல கம்பெனிகளை நான் என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். நான் பல பதிவுகளில் வியாபாரம் செய்யும் நண்பர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் சொல்லியுள்ளேன். வியாபாரம் செய்யும் நண்பர்கள் கண்டிப்பாக ஆன்மீக ஆலோசகரை வைத்துக்கொள்ளுங்கள் என்றும் சொல்லியுள்ளேன்.

புதியதாக தொழில் தொடங்கினாலும் உங்களின் ஜாதகத்தை நல்ல அலசி பார்த்துவிட்டு தொழில் தொடங்க வேண்டும் என்று சொல்லியுள்ளேன். ஜாதகத்தை நன்றாக பார்த்துவிட்டால் நீங்கள் ஆரம்பிக்கும் தொழில் உங்களுக்கு சரிதானா என்று தெரியவரும். உங்களுக்கு சரிபட்டு வராதா தொழிலை நீங்கள் செய்தால் நீங்கள் எவ்வளவு தான் கஷ்டப்பட்டாலும் உங்களால் எந்தவித முன்னேற்றத்தையும் உங்களின் தொழிலில் அடையமுடியாது.

ஒரே நபர் பல தொழிலை ஒரே நேரத்தில் நடத்திக்கொண்டும் இருக்கிறார்கள். இது எப்படி சாத்தியப்படுகிறது என்றும் நீங்கள் நினைக்கலாம். பல தொழில் செய்பவர்களுக்கு பின்னாடி சிறந்த ஆன்மீகவாதி இருப்பார்கள் அவர்களின் ஆலோசனைப்படி தான் அவர்களின் தொழில் நடைபெறுகிறது.

ஒரு இடத்தில் ஒரு முக்கியமான டெண்டர் விடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த டெண்டரை ஏதோ ஒரு கம்பெனி மட்டும் எடுத்துவிடும். அந்த கம்பெனி நல்ல இயங்கிக்கொண்டிருக்கிறது என்ற காரணத்தால் மட்டும் அந்த டெண்டரை அவர்கள் எடுக்கவில்லை அதற்கு பின்னால் ஆன்மீகத்தில் இருப்பவனின் லீலையும் இருக்கும்.

நீங்கள் தொழில் செய்கின்றவர்களாக இருந்தால் இப்படி ஒரு ஆன்மீகவாதியை வைத்துக்கொள்வது நல்லது. பதிவுக்கு வரும் நண்பர்களாகிய உங்களுக்கு ஆலோசனை தேவைப்பட்டால் என்னை தொடர்புக்கொள்ளலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: