Followers

Monday, April 1, 2013

மீனம் :ஐந்தில் செவ்வாய்+சனி



வணக்கம் நண்பர்களே!
                     மீன ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு ஐந்தில் செவ்வாய் சனி சேர்ந்து நின்றால் முன் ஜென்மத்தில் எப்படிபட்ட பாவத்தை செய்திருப்பார்கள் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

மீன ராசிக்கு ஐந்தாவது ராசியாக வருவது கடகம் அதன் அதிபதி சந்திரன்.

இவரால் பாதிக்கப்பட்ட நபர் யார்?

சகோதரர் தாய் மற்றும் வேலைக்காரர்கள்.

அடையாளம்?

கடக ராசி புனர்பூச 4 ம் பாதத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் பொன்நிறம்போல் தோற்றம் அளிக்கும். இவர் மலையாள மொழி தெரிந்திருக்கும். இவரின் வீடு வடகிழக்கு பக்கமாக இருந்திருக்கும்.

கடக ராசி பூசம் நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் கருப்பு நிறமாக இருப்பார். இவர் அந்நியமொழி பேசியிருப்பார். இவரின் வீடு மேற்கு பக்கமாக இருக்கும்.

கடக ராசி ஆயில்ய நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் மாநிறமாக இருந்திருப்பார். தாய்மொழியை மீது அதிக ஈடுபாடு இருக்கும். இவரின் வீடு வடக்கு பக்கமாக இருந்திருக்கும்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

கடக ராசி புனர்பூச 4 ம் பாதத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

நீரில் தள்ளிவிட்டு மூச்சு திணறி செத்திருப்பார்.

கடக ராசி பூசம் நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

கால்கள் மற்றும் தொடைகள் தாக்கி கொன்றுருக்ககூடும்.

கடக ராசி ஆயில்ய நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

கழுத்தில் அடிப்பட்டு செத்திருப்பார்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

கடக ராசி புனர்பூச 4 ம் பாதத்தில் செவ்வாய் மற்றம் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடகிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும்.

கடக ராசி பூசம் நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு மேற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும்.

கடக ராசி ஆயில்ய நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும்.

மேலும் விளக்கம்

சனி கிரகம் செவ்வாய் கிரகமும் ஒரு ஜாதகத்தில் இணையும்போதோ அல்லது ஒன்றை ஒன்று பார்த்துக்கொள்ளும்போது அதிக பிரச்சினையை அந்த ஜாதகருக்கு கொடுக்கும். சனி பஞ்சபூதத்தில் காற்று கிரகம் செவ்வாய் நெருப்பு கிரகம் இரண்டும் பூர்வ புண்ணியத்தில் இணையும்போது அதிகமான சிக்கலை ஏற்படுத்தும்.

சந்திரனின் வீட்டில் கெடுதல் கிரகங்கள் அமரும்போது மனதில் பிரச்சினை அதிகமாக பிரச்சினை கொடுத்துக்கொண்டிருக்கும். கிரிவலம் செல்லவும். 

பரிகாரம்

பெளர்ணமி அன்று கிரிவலம் செல்லும்போது நவக்கிரங்களின் மந்திரத்தை சொல்லிக்கொண்டு செல்லுங்கள்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: