Followers

Tuesday, May 21, 2013

தசா : பகுதி 2



வணக்கம் நண்பர்களே!
                     தசாபலனைப்பற்றி இப்பதிவில் கொஞ்சம் நாம் பார்க்கலாம். பனிரெண்டு வீடுகளிலும் தசா நடைபெறும்பொழுது எவ்வாறான பலனை தரும் என்பதை பார்க்கபோகிறோம் அனைத்தும் பொதுபலன் மட்டுமே. ஒவ்வொரு ராசிக்கும் பலன் மாறுப்படும். 

ஒருவருக்கு லக்கினாதிபதி தசா நடைபெற்றால் அவருக்கு நல்ல பலத்தையும் அதிகமான தனத்தையும். உடல் நலத்தையும் தரும். 

ஒருவருக்கு இரண்டாவது உடையவனுடைய தசா நடைபெற்றால் மரணத்தை தரும் அல்லது மரணத்திற்க்கு ஒப்பான பலனை தரும். மரணம் ஏற்படுவது போல் கண்டம் ஏற்படும். ஒரு சிலருக்கு தனவரவையும் தரும். அதிக தனவரவை தரும்பொழுது எச்சரிக்கையுடன் இருப்பதும் நல்லது. 

ஒருவருக்கு மூன்றாவது வீட்டிற்க்கு உடையவனுடைய தசா நடைபெறும்பொழுது அதிகமான கஷ்டத்தை தரும். பக்கத்து வீட்டில் உள்ளவர்களோடு பிரச்சினையை கொடுக்கும். அடிக்கடி பயணம் சென்று வருவது நடைபெறும்.

ஒருவரின் ஜாதகத்தில் நான்காவது வீட்டிற்க்கு உடையவனுடைய தசா நடைபெற்றால் சுகவாழ்க்கையை தரும். புதிய வீடு கட்டுவதற்க்கு வழி பிறக்கும். வண்டி வாகனங்களை தரும். தாய் வழியில் உதவிகள் வரும்.

ஒருவரின் ஜாதகத்தில் ஐந்தாவது வீட்டிற்க்கு உடையவனுடைய தசா நடைபெற்றால் நல்ல அறிவை தரும். பூர்வபுண்ணியத்தோடு தொடர்புடையவர்களை அடையாளம் தெரியவரும். பணம் வரும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி வாகை சூடலாம்.

ஒருவரின் ஜாதகத்தில் ஆறுக்குடையனுடைய தசா நடைபெற்றால் கடன் ஏற்படும். வியாதி தொல்லை தரும். விரோதிகள் ஏற்படுவார்கள்.

ஒருவரின் ஜாதகத்தில் ஏழுக்குடையவனுடைய தசா நடைபெற்றால் திருமண யோகத்தை தரும் அதே நேரத்தில் சோகமான வாழ்க்கையும் தரும். மனதில் கஷ்டத்தை தந்துவிடும்.

ஒருவரின் ஜாகதத்தில் எட்டுக்குடையவனுடைய தசா நடைபெற்றால் மரணம் ஏற்படும் அல்லது மரணத்திற்க்கு ஒப்பான கண்டம் ஏற்படும். அவமானம் வந்து சேரும். முன்னோர்களின் உயில் வழியாக சொத்து வரும்.

ஒருவரின் ஜாதகத்தில் ஒன்பதுக்குடையவனுடைய தசா நடைபெற்றால் நல்ல காரியம் செய்ய மனதில் தோன்றும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். வாழ்கின்ற சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.

ஒருவரின் ஜாதகத்தில் பத்துக்குடையவனுடைய தசா நடைபெற்றால் வேலை வாய்ப்பை தரும். செய்கின்ற தொழிலில் சிறக்கமுடியும். பெற்றோர்களுக்கு கர்மம் செய்ய வைக்கும்.

ஒருவரின் ஜாதகத்தில் பதினோராவது வீட்டுக்கு உடையவனுடைய தசா நடைபெற்றால் லாபத்தை தரும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். மூத்த சகோதர சகோதரிகளின் வழியில் நல்ல உறவு ஏற்படும்.

ஒருவரின் ஜாதகத்தில் பனிரெண்டாவது வீட்டுக்கு உடையவனுடைய தசா நடைபெற்றால் வியாதி மற்றும் பொருள்நாசம் ஏற்படும். ஒரு சிலருக்கு போகவாழ்க்கையில் ஈடுபடசெய்வார்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: