Followers

Wednesday, May 15, 2013

குழந்தை பாக்கியம்: பகுதி 4



வணக்கம் நண்பர்களே !
                     குழந்தை பாக்கியம் பகுதியில் ஒரு பெண்ணின் ஜாதகத்தை பார்க்கலாம்.

மீனம் லக்கினம் கும்ப ராசி. லக்கினாதிபதி ஏழாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். லக்கினாதிபதி தன்னுடைய லக்கினத்தை தன் ஏழாம் பார்வையில் வைத்திருக்கிறார். குரு சனியு்டன் சேர்ந்து அமர்ந்திருக்கிறார். லக்கினத்தை சனியும் பார்வையிடுகிறார். சனி ஏழாம் பார்வையில் தான் பார்க்கிறார். குருவும் சனியும் ஒரே நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார்கள். இருவரும் ஹஸ்த நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார்கள். ஹஸ்த நட்சத்திரம் சந்திரனின் நட்சத்திரம். இருவரும் ஒரே பாதத்தில் வக்கிரமாக இருக்கிறார்கள்.

ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் வக்கிரத்தில் இருந்தால் பரவாயில்லை. இருகிரகங்கள் வக்கிரமாகியுள்ளது. சனியும் குருவும் வக்கிரமாகியுள்ளது இருவரும் ராஜகிரகங்கள். எண்ணங்கள் வக்கிரமாகிவிடும். குழந்தை பாக்கியத்தை தரும் கிரகமான சந்திரன் பனிரெண்டாம் வீட்டில் போய் அமர்ந்துள்ளது. சந்திரன் மூன்று கிரகங்களோடு அமர்ந்திருக்கிறது. சந்திரன் அங்குபோய் மாட்டிக்கொண்டதால் குழந்தை பாக்கியத்தை தருவதற்க்கு காலம் சென்றது.

திருமணமாகி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பாக்கியம் உருவாகியது. குழந்தை பாக்கியம் உருவாகி மூன்று நான்கு மாதங்களில் அழிந்தது. ராகு ஐந்தில் இருக்கிறார் மற்றும் சந்திரன் செவ்வாயோடும் இருக்கிறது அதனால் நடந்தது.

இந்த பெண்ணின் கணவர் வீட்டில் இந்த பெண்ணை திட்டினதால் ஒரு முறை தற்கொலைக்கும் முயன்றார். காப்பாற்றிவிட்டார்கள். ஏன் தற்கொலைக்கு முயன்றார் என்றால் எட்டாவது வீட்டு அதிபதி கேதுவுடன் சேர்ந்திருக்கிறார். கேது தற்கொலை எண்ணத்தை தருவார். மனக்காரகன் சந்திரன் பாதிப்படைந்துள்ளதால் அந்த எண்ணத்தை தந்திருக்கிறது.

பல ஆண்டுகளுக்கு பிறகு சோதிடத்தை பார்த்து தகுந்த பரிகாரம் செய்து குழந்தை தங்கி நல்லபடியாக குழந்தை பெற்று எடுத்தார் அந்த பெண். பரிகாரத்திற்க்கு அனைத்து கோவில்களுக்கும் சென்று வரவேண்டியதாகிவிட்டது. ஏன் என்றால் அதிகபட்ச கிரகங்கள் பாதிப்படைந்துள்ளதால் அவ்வாறு செல்லவேண்டியதாகிவிட்டது.


பரிகாரம் 

குலதெய்வத்திற்க்கு ஒரு அபிஷேகம்.

சூரியனார் கோவில் சென்று சூரியபெருமானை வழிப்பட்டார்கள். ஏன் சூரியனை வழிபடவேண்டும்

நவக்கிரகங்களுக்கு பரிகாரம் செய்ய தொடங்கினால் சூரியனை முதலில் வழிப்பட்டுவிட்டு பரிகாரம் செய்ய தொடங்க வேண்டும். அதன் பிறகு குரு மற்றும் சனிக்கு பரிகாரம் செய்தார்கள். ராகுவிற்க்காக பாம்பு சிலைக்கு பூஜை செய்தார்கள். திருச்செந்தூர் முருகனை வணங்கிய பிறகு இந்த பெண்ணிற்க்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: