Followers

Wednesday, May 1, 2013

பூர்வ புண்ணியம் 52



வணக்கம் நண்பர்களே!
                     பூர்வபுண்ணியத்தொடரில் ஐந்தில் கேது நின்றால் என்ன பாவம் முன்ஜென்மத்தில் செய்திருப்பார் என்று பார்த்தோம்.

முன்ஜென்மத்தில் உங்களோடு தொடர்புடையவர்களை நீ்ங்கள் தேடுங்கள் என்று சொல்லியிருந்தேன். இதை படித்துவிட்டு பல நண்பர்கள் என்னிடம் பேசும்போது இது எப்படி சாத்தியப்படும் என்று சொல்லிருந்தார்கள். வேறு என்ன செய்வது கடவுளிடம் நம்பிக்கை வைத்து தேடினால் கண்டிப்பாக உங்களால் அடையாளம் காணமுடியும். ஒருவன் மோட்சம் அடைவதற்க்கு ஒரு நல்ல துறவியாக இருந்தால் அவர் மூலம் நாம் அடையலாம். 

இந்த காலகட்டத்தில் அப்படிப்பட்ட துறவி கிடைப்பது அரிது. அதனால் நான் கர்மாவின் வினையை குறைக்க சம்பந்தப்பட்ட நபரை தேடச்சொன்னேன். எல்லாம் உங்களுக்கு அருகாமையில் இருப்பவர்களாக தான் இருப்பார்கள். எளிதில் அடையாளம் காணமுடியும். நான் சோதிட வழியாக எழுதிய தகவல் குறைவான ஒன்று தான் அனைத்தையும் எழுதும்பொழுது உங்களுக்கு எளிதில் தெரிந்துவிடும் ஆனால் நேரம் பற்றாக்குறை காரணமாக குறைவாக எழுதினேன். 

இந்த தகவலை வைத்துக்கொண்டு உங்களின் சோதிட அறிவையை சேர்த்து வைத்து பார்த்தால் அனைத்தும் எழுதில் புரிந்துவிடும். காலத்தை வீணடிக்காமல் முயற்சியில் இறங்கி வெற்றி பெறலாம். உங்களின் முன்ஜென்மத்தில் உள்ளவர்களை நீங்கள் பார்த்தால் அது எவ்வளவு பெரிய செயல்  தெரியுமா. ஆச்சரியத்தின் உச்சத்திற்க்கே சென்றுவிடலாம். நான் பார்த்ததால் உங்களுக்கு சொல்லுகிறேன். என்னுடைய அனுபவத்தில் நடந்ததால் நீங்களும் பயன்பெறவேண்டும் என்ற நோக்கத்தில் எழுதியுள்ளேன்.

சோதிடத்தில் இன்னும் பல வித்தியாசமான தகவலை தரபோகிறேன். அதோடு பூர்வபுண்ணியத்தொடரும் சேர்ந்து வரும். தேடுதல் உள்ள மனிதருக்கு ஜாதககதம்பம் ஒரு அஷ்யபாத்திரம் போல் இருக்கவேண்டும் என்ற ஆசையில் நான் தேடி அடைந்த பொக்கிஷத்தை தருகிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

1 comment:

Gowda Ponnusamy said...

எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.