Followers

Saturday, May 4, 2013

சிவமே பகுதி 7



வணக்கம் நண்பர்களே !
                    நமது நண்பர்கள் அனைவரும் போன் செய்து சிவமே தொடரை நிறுத்திவிட்டீர்கள். தொடர்ந்து எழுதுங்கள் என்று கேட்டார்கள். சரி எழுதிவிடலாம் என்று இப்பதிவை உங்களுக்கு தருகிறேன்.

ஆணும் பெண்ணும் சேர்ந்துக்கொண்டு நாங்கள் இருவரும் ஒருவராக மாறி இறைவனை அடைகிறோம் என்பது தான் திருமண சிந்தாந்தம். இது தான் நாங்கள் இறைவனை அடையும் வழி என்று சொல்லிக்கொண்டு இல்லறவாழ்வில் ஈடுபடுகிறார்கள். 

அண்டத்தில் இருப்பது தான் பிண்டத்தில் இருக்கிறது என்று நமது முன்னோர்கள் சொல்லிவைத்தார்கள். உன்னிடம் எது இல்லையோ அதனை உன்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. ஒரு உணவை நீ உட்க்கொண்டால் அந்த உணவின் தன்மை உன்னிடம் இருந்தால் தான் அது செரிக்கும் அப்படி அந்த தன்மை இல்லை என்றால் அந்த உணவு செரிக்காமல் வாந்தி எடுப்பார்கள் அல்லது விஷமாக மாறிவிடும். இந்த கருத்து அனைத்திலும் உண்டு. உணவுக்கு மட்டும் கிடையாது அனைத்திலும் இருக்கிறது.

நீங்கள் ஒரு ஆணாக இருக்கிறீர்கள். உங்களின் உள்ளே ஒரு பெண்ணின் தன்மையும் இருக்கும். உங்களுக்குள் பெண்ணின் தன்மையும் இருந்தால் தான் ஒரு பெண்ணை உங்களால் தொடமுடியும். அதே போல் பெண்ணிற்க்கும் ஒரு ஆண் தன்மை இருக்கும் இந்த தன்மை இருந்தால் தான் ஆணை அவர்களால் தொடமுடியும். ஆணிற்க்கு பெண் தன்மை இல்லை என்றால் அவனால் ஒரு பெண்ணை உள்வாங்கிக்கொள்ள முடியாது. வாந்தி எடுப்பது போல் பெண்ணை தொடக்கூடா மாட்டான். இந்த இருதன்மையும் சேர்த்து ஒரு தன்மையாக இல்லறத்தில் ஈடுபடும்பொழுது அங்கே சிவன் அர்த்தநாரீஸ்வரராக தோன்றி உங்களை அவனுள் ஈர்க்கிறான். 

இருவரும் ஒருவராக காமத்தில் ஈடுபட்டு நீங்கள் சரிசமமாக இரு தன்மையும் ஒரு தன்மையாக காணும் பொழுது உங்களுக்குள் சிவன் மலருவான். இப்பொழுது யாரும் இப்படி இருப்பதில்லை என்று தான் எனக்கு தோன்றுகிறது. திருமணம் என்பது சந்ததியை உருவாக்குவது என்ற நிலையிலேயே இருக்கிறது. அதனால் தான் பிரம்மசாரிகள் இல்லறத்தில் இருந்துக்கொண்டு ஒரு நாளும் நீ சிவனை அடையமுடியாது என்கிறார்கள். 

ஒரு பெண்ணை இப்பொழுது எப்படி நடத்துகிறார்கள் என்றால் ஒரு பெண் குழந்தை பெறும் இயந்திரம் போல் தான் நடத்துகிறார்கள். நீங்கள் நினைக்கலாம் இப்பொழுது காலம் மாறிவிட்டது பெண்கள் அப்படி இல்லை என்று நினைக்க தோன்றும். அப்படி ஒன்றும் காலம் மாறவில்லை. பெண்களை ஏமாற்ற ஒரு வித வேடிக்கை தான் நடத்தப்படுகிறது. பெண்கள் சம்பாதிக்கிறார்கள் பெண்களால் எல்லாம் முடியும் என்று நினைக்க தோன்றும் இதன் பின்னாடி ஆண்களின் சதி கண்டிப்பாக இருக்கும். அவர்களுக்கு லாபம் இருப்பதால் இதனை செய்யலாம்.

பெண்களும் பல தவறுகளை செய்துக்கொண்டு தவறு செய்யும்பொழுது நான் பெண் என்னை இப்படி செய்யகூடாது என்று சொல்லிக்கொண்டு வருகிறார்கள். உண்மையில் நான் பெண் என்று சொல்லிக்கொண்டு தப்புவது ஒரு வித திருட்டுதனம் தான். உண்மையில் உங்களுக்குள்ளும் ஆண் இருக்கிறான். ஆத்மாவில் ஆண் பெண் என்ற பேதம் கிடையாது. ஒரு ஆண் பல ஜென்மங்களில் பெண்ணாகவும் பிறந்திருக்கலாம். ஒரு பெண் பல ஜென்மங்களில் ஆணாகவும் பிறந்திருக்கலாம்.

இல்லறவாழ்வில் இணைந்து இரு ஆத்மாவும் ஒரே ஆத்மாவாக மாறி அர்த்தநாரீஸ்வரராக நீங்கள் தோன்றினால் அப்பொழுது கடவுள் தன்மையில் நீங்கள் இணைவீர்கள்.

ஒரு ஆணுக்குள்ளும் பெண் இருக்கிறாள். பெண்ணுக்குள்ளும் ஆண் இருக்கிறான். சரிசமமாக உங்களின் துணையை நீங்கள் பார்க்கும்பொழுது மட்டுமே கடவுள் தன்மை மலரும் வாய்ப்பு இருக்கிறது. இல்லறவாழ்வில் காமத்தில் ஈடுபட்டால் தான் கடவுளை அடையமுடியும் என்ற விதி இல்லை. இருவரும் அருகில் அமரும்பொழுது கூட கடவுளின் தன்மையில் இருக்கலாம். அதற்க்கு இரு ஆத்மாவும் ஒரே ஆத்மாவாக செயல்படவேண்டும். 

இது எல்லாம் பல ஜென்மங்கள் கணவன் மனைவியாக இருந்தவர்களுக்கு சாத்தியப்படும்.உங்களின் துணை உங்களின் அருகில் அமரும்பொழுது உங்களின் மனம் அமைதி அடைந்தாலே போதும். சிவத்தன்மை அங்கே மலரும்.

திருவண்ணாமலையில் சிவன் அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்தது இந்த தத்துவத்தை உங்களுக்கு புரியவைக்கவேண்டும் என்பதற்க்காக தான். இதனை புரிந்துக்கொண்டு செயல்பட்டால் நீங்களும் சிவன் தான்.

சிவமே தொடரும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: