Followers

Friday, May 3, 2013

ஆன்மீக அனுபவங்கள் 88



வணக்கம் நண்பர்களே!
                    நாம் குருவை தேடி கண்டுபிடிக்கிறோம். குருவை நாம் கண்டுபிடித்து நாம் அவரை குருவாக ஏற்றுக்கொண்டாலும் அவர்கள் நம்மை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் அப்பொழுது மட்டுமே அனைத்தையும் அவர்கள் கற்றுதருவார்கள். சிஷ்யனுக்கு என்று சில தகுதிகள் இருக்கின்றன. அதில் மிக முக்கியமான ஒன்று எந்தவிதத்திலும் ஒரு மனித உயிருக்கு தீங்கு இழைக்காத குணம் இருக்கிறதா என்று தான் முதலில் பார்ப்பார்கள். அதில் பல சோதனைகளை கொடுப்பார்கள் அந்த சோதனையில் வெற்றி பெறும்பொழுது மட்டுமே நம்மை அவர்கள் சிஷ்யனாக ஏற்றுக்கொள்வார்கள்.

ஒரு மனித உயிரின் மகத்துவம் என்ன என்று அவர்கள் நல்ல அறிவார்கள். மனித உயிர் இந்த பூமிக்கு தன்னுடைய கர்மாவின் பலனை அனுபவிக்க வந்திருக்கிறது. அதற்கு நாம் இடையூறு கொடு்த்தால் தன்னுடைய கர்மாவை தீர்க்கமுடியாது என்பதை நன்றாக அறிந்தவர்கள். 


குரு கொடுக்கும் மந்திரங்களை வைத்து ஒரு உயிரை எடுக்கமுடியும். அதனை வைத்து தன்னுடைய சிஷ்யன் தவறாக பயன்படுத்தகூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பார்கள்.

சரி மந்திரங்கள் மனித உயிரை எடுக்க முடியுமா? 

எடுக்கமுடியும். 

நல்ல ஆன்மீகவாதிகள் இந்த மந்திரங்களை ஏன் வைத்திருக்கிறார்கள் என்றால் ஒரு உயிரால் இந்த உலகத்திற்க்கு எந்த உபயோகம் இல்லை என்ற நிலை வரும்பொழுது இந்த மந்திரத்தை பயன்படுத்துவார்கள்.அந்த ஆத்மாவிற்க்கு மோட்சத்தை கொடுக்கமுடியுமா என்று பார்த்துவிட்டு தான் உயிரை எடுப்பார்கள்.

ஒரு மனிதன் இறக்கிறான் என்று வைத்துக்கொள்வோம் அவன் ஆத்மா மோட்சத்தை அடைந்ததா என்று எப்படி பார்ப்பது.

இதற்கு என் குருநாதர் கொடுத்த விளக்கம்.

இறந்தவர்களின் முகத்தை வைத்து தெரிந்துக்கொள்ளலாம். இறந்தவர்களின் முகம் லட்சுமி கடாஷம் போல் இருக்கும். நல்ல சிரித்த முகத்துடன் காணப்படுவார்கள். அவர்கள் இறக்கும்பொழுது எந்தவித தொந்தரவும் இருக்காது. எந்தவித சத்தமும் இல்லாமல் அமைதியாக உயிர் பிரியும். இப்படி இருந்தால் அவரின் ஆத்மா மோட்சத்தை அடைந்துவிடடது என்று நாம் தெரிந்துக்கொள்ளலாம் என்றார்.

ஒரு ஆன்மீகவாதிக்கு ஒரு உயிரை உருவாக்கவும் தெரியவேண்டும். காக்கவும் தெரியவேண்டும். உயிரை எடுக்கவும் தெரியவேண்டும் அப்பொழுது மட்டுமே அவன் சிறந்த ஆன்மீகவாதியாக இருப்பான். 

உயிரை உருவாக்குவது என்றால் குழந்தை இல்லை என்று ஒரு தம்பதினர் வந்தால் அந்த தம்பதினருக்கு குழந்தையை கொடுக்கும் சக்தியை ஒரு ஆன்மீகவாதி பெற்று இருக்கவேண்டும். ஒரு உயிரை காக்கவும் தெரிந்திருக்கவேண்டும். உயிரை எடுப்பது என்றால் கடைசி காலத்தில் செய்கின்ற உயிரை எடுத்து மோட்சத்திற்க்கு அனுப்புவது இது அனைத்தையும் தெரியும்பொழுது மட்டுமே ஆன்மீகத்தில் இருப்பது பயன். 

இது மிகப்பெரிய வித்தை இதனை குரு ஒரு சிஷ்யனுக்கு தருவது அவருடைய கடைசி காலத்தில் மட்டுமே கொடுப்பார். ஆனால் நான் கடந்த வாரம் இந்த வித்தையை பெற்றேன். எனது குரு இதனை இப்பொழுதே எனக்கு கொடுத்துவிட்டார். 

குருநாதருக்கும் இன்னும் காலம் இருக்கிறது. ஆனால் கொடுத்துவிட்டார் ஏன் கொடுத்தார் என்றால் என்மீது இருக்கும் நம்பிக்கையில தான். எந்தவிதத்திலும் தவறாக பயன்படுத்தமாட்டான் என்று அவர் நம்பியதால் கொடுத்தார். எனக்கு உள்ள மிகப்பெரிய தகுதி என்ன என்றால் மன்னிக்கும் குணம் இயற்கையாகவே எனக்கு அமைந்தது. இது ஒன்று மட்டும் தான் ஆன்மீகத்தில் எனக்கு இருக்கும் தகுதி. 

நான் எப்படிபட்ட கோபபட்டாலும் அந்த நேரத்தில் திட்டுவேன் இரு உன்னை உன் குடும்பத்தில் உள்ளவர்களை எல்லாம் மந்திரத்தால் கொன்றுவிடுவேன் என்று சொல்லுவேன். பிறகு அவர்களிடமே மன்னிப்பு கேட்டுவிடுவேன். ஏதோ கோபத்தில் திட்டிவிட்டேன் ஒன்றும் செய்ய மாட்டேன் என்ற சொல்லிவிடுவேன். எந்தவிதத்திலும் அடுத்த மனிதனுக்கு தீங்கு செய்யவில்லை என்றால் கண்டிப்பாக ஆன்மீகத்தில் மிகப்பெரிய பதவி உங்களுக்கு இருக்கிறது. அனைத்தும் உன்னை தேடிவரும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: