Followers

Wednesday, May 15, 2013

மந்திரபயிற்சி விளக்கம்


வணக்கம் நண்பர்களே!
                     நமது நண்பர்கள் பலபேர் மந்திரப்பயிற்சி செய்துக்கொண்டு வருகிறீர்கள் அப்படி மந்திரப்பயிற்சி செய்யும் நண்பர்கள் பயிற்சியை மேற்க்கொண்டு மூன்றாவது நாளே என்னிடம்  பேசி எதுவும் நடக்கவில்லை என்று சொல்லுகிறார்கள். மூன்று நாட்களில் அனைத்தும் நடைபெறும் என்று எண்ணினால் எப்படி நடைபெறும். 108 நாட்கள் முடிந்தால் தான் இது முழுமை பெறும் அதுவரை பொறுமை தேவை.

உங்களுக்கு இந்த மந்திரங்கள் உரு ஏறும் பொழுது உங்களின் கர்மா குறையும். கர்மா எந்தளவுக்கு இருக்கிறதோ அந்தளவுக்கு உரு ஏறுவதில் தாமதம் ஏற்படும். ஒரு சிலருக்கு இதனை செய்வதற்க்கே வாய்ப்பு வராது அந்தளவுக்கு அவர்களின் கர்மா தடைச்செய்யும். நீங்கள் பயிற்சி செய்யும் அளவிற்க்கு வந்திருக்கிறீர்கள் என்பது ஒரு புண்ணிய செயல்.

காயத்ரி மந்திரங்கள் செய்பவர்கள் மூச்சுப்பயிற்சியும் செய்துவாருங்கள். மூச்சுப்பயிற்சினை எப்படி செய்வது என்பதை பழைய பதிவுகளில் பாருங்கள். மூச்சுபயிற்சியை செய்ய செய்ய உங்களின் காயத்ரி மந்திரம் அந்தளவுக்கு உங்களுக்கு அதிவேகமாக உருஏறும். மந்திரம் உரு ஏற ஏற நீங்கள் புதிய உலகில் பிரவேசிப்பீர்கள்.

மந்திரப்பயிற்சி செய்யும் நேரத்தை சொன்னேன் அல்லவா கூடுமானவரை பிரம்மமுகூர்த்த நேரமாக இருந்தால் மிகச்சிறப்பு. விடியற்காலையில் பிரம்மமுகூர்த்த நேரத்தில் ஒரு மந்திரம் பல மடங்கு வீரியத்தோடு உரு ஏறும். எனது குரு சொல்வார் ஒரு ஆன்மீகவாதி சரியாக விடியற்காலை நான்கு மணிக்கு எல்லாம் எழுந்துவிடவேண்டும் என்பார். 

என்னையும் சரியாக நான்கு மணிக்கு எல்லாம் எழுந்து பயிற்சி செய்ய சொல்லுவார். எனக்கு விடியற்காலையில் நல்ல தூக்கம் வரும். இவர் தொந்தரவு செய்வார் என்று மொபைலை சுவிட்ஸ் ஆப் செய்வேன். அவர் அவரின் சக்தியால் என்னை விடியற்காலை எழ வைத்துவிடுவார். அதுவே இப்பொழுது பழக்கமாகிவிட்டது. அவர் சொல்வார் விடியற்காலையில் பிரம்மமுகூர்த்தத்தில் தான் தெய்வங்கள் நமக்கு என்று வரும் அப்பொழுது மட்டுமே அனைத்தும் உனக்கு வசப்படும் என்பார். அது உண்மை தான் என்று எனக்கு இப்பொழுது புரிகிறது.

உங்களுக்கு குடுமபத்தில் நிறைய நபர்கள் இருக்கலாம் அவர்களுக்கு தொந்தரவு கொடுக்ககூடாது என்பதால் மூன்று நாட்கள் மட்டும் விடியற்காலையில் எழுந்து செய்யசொன்னேன். அடுத்தவர்களுக்கு தொந்தரவு இல்லை என்றால் நீங்கள் விடியற்காலையில் எழுந்து செய்து விரைவில் உன்னதமான நிலையை அடையங்கள்.நல்ல நேரத்தை பயன்படுத்த வேண்டும்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: