Followers

Sunday, May 19, 2013

வியாபார நண்பர்களுக்கு



வணக்கம் நண்பர்களே!
                    வியாபார நண்பர்களுக்கு ஆலோசனை என்ற பதிவில் வியாபார செய்பவர்களுக்கு என்று ஒரு வாய்ப்பை கொடுத்திருந்தேன். அதன் மூலம் பல நண்பர்கள் என்னிடம் தொடர்புக்கொண்டு அவர்களின் வியாபாரத்தை நல்ல முறையில் மேம்படுத்திக்கொண்டு வருகிறார்கள். 

இப்பொழுது இதனை பயன்படுத்துபவர்கள் அதிகம் பேர் நமது பிளாக்கில் இருந்து வருவதால் அவர்களுக்கு பதிவு மூலமாக ஒரு சில கருத்துக்களை சொல்லுகிறேன். உங்களின் வியாபாரத்தை படிப்படியாக மட்டுமே உயர்த்தமுடியும். உடனடியாக நீங்கள் உயர முடியாது. உங்களின் கிரக நிலை தடைசெய்யும். உங்களை ஒரு நிலைக்கு உயர்த்திய பிறகு உங்களுக்கு என்று ஒரு சில பூஜைகளை உங்களை வைத்து நாங்கள் செய்வோம். அதன் பிறகு தான் நீங்கள் நினைக்கும் இடத்திற்க்கு உங்களால் செல்ல முடியும். 

இந்த பூஜைகளுக்கு செய்யும் செலவு எல்லாம் உங்களின் வியாபாரத்தில் சம்பாதித்து அந்த பணத்தின் வழியாக தான் செய்வோம். அதனால் முதல் நிலையில் படிப்படியாக உயருங்கள் அதன் பிறகு மிக உயர்ந்த நிலைக்கு செல்லலாம். உங்களிடம் நான் எதையும் மறைப்பதில்லை உங்களை படிப்படியாக உயர்த்தும்பொழுது மட்டுமே நீங்கள் என்னை மறக்கமாட்டீர்கள். உடனடியாக உயர்த்தினால் அடுத்த நிமிடமே என்னை மறந்துவிட்டு சென்றுவிடுவீர்கள்.

வடநாட்டு சேட்டுகளுக்கு மட்டுமே செய்து வந்ததை உங்களுக்கு செய்து தருகிறேன். சேட்டுகள் வியாபாரம் அவ்வளவு துல்லியமாக இருக்கும். அவர்களுக்கு என்னை போல் இருப்பவர்கள் எது வேண்டுமானாலும் செய்து கொடுப்பார்கள். அவர்கள் எங்களுக்கு கொடுக்கும் தொகையும் அதிகம் எந்த வித பிரச்சினையும் எங்களுக்கு கொடுக்கமாட்டார்கள். மாதம் முடிந்தால் பணம் எங்களுக்கு தேடிவரும்.

நமது மதத்தில் நிறைய விசயங்கள் வியாபாரத்திற்க்கு என்று உள்ளது அதனை உங்களுக்கு பயன்படும் விதமாக தருகிறோம். பல பேர் வியாபாரத்தில் ஆன்மிகவாதிகளிடம் ஏமாந்து போய் உள்ளார்கள். நேற்று என்னிடம் பிரான்சில் இருந்து பேசிய நண்பர் ஒருவர் கூட என்னிடம் சொன்னார். இங்கு வந்து மந்திரம் செய்து தருகிறேன். வியாபாரத்தை முன்னேற்றி தருகிறேன் என்று சொல்லி இந்தியாவில் இருந்து இங்கு வந்து ஏமாற்றிஉள்ளார்கள் என்று சொன்னார்.

நாம் அப்படி செய்வதில்லை நீங்கள் பணத்தை ஒரு போதும் முன்னாடியே தரபோவதில்லை நீங்கள் வியாபாரத்தில் வெற்றி பெற்று நல்ல நிலையில் இருக்கின்ற பொழுது மட்டுமே நீங்கள் எனக்கு பணம் தரபோகிறீர்கள் அதனால் உங்களுக்கு பலனை கொடுத்துவிட்டு பிறகு பணத்தை பெற்றுக்கொள்கிறேன். இந்த வழியில் நீங்கள் நினைக்காத முன்னேற்றத்தை அடையமுடியும். சரியாக பயன்படுத்துங்கள். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: