Followers

Wednesday, May 29, 2013

மகாலட்சுமி எப்பொழுது வீட்டில் தங்குவாள்?


வணக்கம் நண்பர்களே!

இன்றைய அவசர உலகத்தில் பணம் இருந்தால் அனைத்தையும் செய்யமுடியும் என்ற நிலை வந்துவிட்டது. இல்லறத்தில் இருப்பவர்களுக்கு அதிக பணத்தேவை வந்துவிட்டது. இன்றைய காலத்தில் சந்நியாசிக்கே பணத்தெவை இருக்கும்பொழுது இல்லறத்தில் இருப்பவர்களுக்கு சொல்லிக்கொள்ள தேவையில்லை.

மனிதர்கள் தன்னால் முடிந்தளவுக்கு முயற்சி செய்து பார்க்கிறார்கள். தான் கஷ்டப்பட்டாலும் தன்னுடைய வாரிசுகள் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். நினைத்துக்கொண்டு அப்படியே இல்லாமல் கடுமையாக உழைக்கிறார்கள் இதனை பல வழிகளிலும் சேமித்தும் வைக்கிறார்கள். ஒரு மனிதனுக்கு உழைத்தால் மட்டும் போதாது அவனுக்கு அதிர்ஷ்டமும் தேவை. அந்த அதிர்ஷ்டம் இருந்தால் உழைக்கும் பணம் சேமிப்பில் அப்படியே இருக்கும் இல்லை என்றால் வந்த வழியிலேயே போய்விடும்.

இன்றைய காலகட்டத்தில் வீட்டில் செல்வம் தங்குவதற்க்கு ஒவ்வொரு மனிதனின் வீடும் மிக முக்கியமான ஒன்று. அந்த வீட்டில் மகாலட்சுமி தங்கவேண்டும். மகாலட்சுமி தங்கிவிட்டால் செல்வம் நிரந்தரமாக தங்கிவிடும். சில வீடுகளுக்கு சென்றால் மனதில் ஒரே வெறுப்பு வந்துவிடும். சில பேர்களுக்கு பைத்தியம் கூட பிடித்துவிடும். அதற்கு காரணம் என்ன என்றால் அந்த வீட்டில் துர்சம்பவங்கள் நடந்திருக்கும். சரி அதனை விடுங்கள் நாம் மகாலட்சுமி தங்குவதற்க்கு வழியை பார்க்கலாம்.

மாலை நேரத்தில் மகாலட்சுமி வீட்டிற்க்கு வருகிறாள். நீங்கள் வீட்டிற்க்குள் விளக்கை ஏற்றி அந்த நேரத்தில் வீட்டின் பின்பக்க கதவை மூடிவிடவேண்டும். இப்படி செய்தால் உங்களின் வீட்டில் மகாலட்சுமி தங்கி உங்களின் செல்வவளத்தை உயர்த்துவாள். நீங்கள் இப்படி செய்து உங்களின் செல்வ வளத்தை உயர்த்திக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

2 comments:

dreamwave said...

time :6.00pm to 8.00pm ok (many people going to office )


rajeshsubbu said...

வணக்கம் நண்பரே
நமக்கு வேலை இருக்கிறது என்பதால் நாம் நினைத்த நேரத்தில் கடவுள் வரமாட்டார். மாற்றத்தை மக்கள் விரும்பினால் என்ன வருகிறதோ அதனை அனுபவிக்க வேண்டியது தான் வேறு ஒன்றும் செய்யமுடியாது.