Followers

Thursday, May 23, 2013

நண்பர்களின் கவனத்திற்க்காக


வணக்கம் நண்பர்களே !
                    அம்மனின் அருளைப்பற்றி ஒரு பதிவை எழுதியிருந்தேன். பல நண்பர்கள் அம்மனின் செயலை நினைத்து ஆச்சரியப்பட்டார்கள். பல செயல்களை நமது அம்மன் செய்திருக்கிறது அதனை எல்லாம் உங்களின் பார்வைக்கு அவ்வப்பொழுது தருகிறேன். இப்பொழுது உங்களைப்போல் இந்த தளத்திற்க்கு வரும் நண்பர்களுக்கும் நமது அம்மன் அருளை பொழிந்து வருகிறது.

ஒரு சிலர் அம்மனை நினைத்து பயமும் கொள்ளலாம். யாரும் பயம்கொள்ள தேவையில்லை ஏன் என்றால் உங்களை காப்பதற்க்கு தான் இந்த அம்மன் உள்ளது. உங்களை அழிப்பதற்க்கு கிடையாது. ஒரு சிலர் தீயவர்களாக வருகிறார்கள். அவர்களை தண்டிக்கபடவேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. அந்த நபர்ககளுக்கு அம்மன் தண்டனை கொடுக்கிறது. ஒரு பக்தன் தன்னை அண்டி சரணடையும்பொழுது அம்மன் அவனுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினையும் தீர்த்து வைக்கிறது.

அடைக்கலம் என வருபவர்களை அசிங்கப்படுத்தாது அடைக்கலம் என்று சொல்லிக்கொண்டு வரும் நயவஞ்சகர்களை அடக்கி ஆளவேண்டியது அம்மனின் கடமையாக இருக்கிறது. என்னால் அதனை ஒன்றும் செய்யமுடியாது.

நான் பல வீடுகளுக்கு தற்பொழுது சென்றுக்கொண்டிருக்கிறேன். அவர்கள் அனைவரும் அவர்களின் வீட்டில் ஒரு பையன் இருந்தால் எப்படி பாசத்துடன் பேசுவார்களே அப்படி தான் அனைவரும் என்னை பார்க்கிறார்கள். அவர்களுக்காக நான் அம்மனிடம் மனமுருகி வேண்டிக்கொள்கிறேன். எப்படியாவது இவர்களுக்கு நல்லது செய்துவிடு என்று கேட்கிறேன். அம்மனும் அதை செய்துக்கொடுக்கிறது. இப்பொழுது நான் யாரிடமும் பணம் இவ்வளவு தாருங்கள் என்று கேட்பதி்ல்லை ஏன் என்றால் ஒவ்வொருவரும் என்னிடம் காட்டும் பாசம் அதிகம். அவர்கள் கொடுப்பதை வாங்கிக்கொள்கிறேன். உண்மையை சொல்லவேண்டும் என்றால் நமது மக்கள் நல்ல மக்கள் அவர்களுக்கு நல்லதை சொல்லிக்கொடுக்க வேண்டும் அது ஒன்று இருந்தாலே போதும். 

இந்த தளத்திற்க்கு வரும் நண்பர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்த்துவைப்பது எல்லாம் அம்மன் தானே தவிர நான் கிடையாது. அனைத்து நண்பர்களும் எனக்கு போன் செய்து நன்றி சொல்லுவாங்க. செய்தது ஒரு ஆள். நமக்கு நன்றி வருகிறது என்று நினைத்துக்கொள்வேன். இந்த பிளாக்கின் சிறப்பே என்ன என்றால் இது அம்மனின் தளமாக தான் இருக்கிறது. என்ன டா முட்டாள் தனமாக உளர்கிறாய் என்று புத்தி நினைக்கலாம் ஆனால் என்னை உள்ளுக்குள் இருந்து இயக்க செய்வது அது தான் என்று நான் நினைக்கிறேன் அதனால் சொல்கிறேன்.

பல நண்பர்கள் தங்களுக்குள்ள பிரச்சினையை சொல்ல வெட்கப்படுகிறார்கள் என்று நினைக்கிறேன். பல பேர் கஷ்டத்தோடு இருக்கிறார்கள். ஏன் இதனை எல்லாம் நாம் சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். உங்களுக்கு கஷ்டம் என்றால் நீங்களே தாராளமாக இந்த அம்மனிடம் கேட்டுப்பாருங்கள் அதனை செவிசாய்த்து உங்களுக்கு நடத்திக்கொடுக்கும் அப்படி இல்லை என்றால் என்னிடம் ஒழிவு மறைவின்றி சொல்லுங்கள் உங்களுக்கு என்ன செய்யவேண்டுமோ அதனை செய்கிறேன். உங்களுக்குள்ளே மனதில் போட்டுக்கொண்டு கஷ்டப்படாதீர்கள்.

ஒரு கருத்து ஒன்று பரவலாக இருக்கிறது அது என்ன என்றால் சென்னை சோதிடர்கள் அதிக பணம் கேட்பார்கள் என்று தெரிகிறது. வேறு யாராவது போய் அப்படி ஏமாற்றபட்டு இருக்கலாம். இங்கே வாங்குவது உண்மை தான். ஒரு கல்லை கொடுத்துவிட்டு எழுபது ஆயிரம் பணம் கேட்கிறார்கள். நமது தளம் அப்படிபட்டது கிடையாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இனி உங்களுக்கு வரும் பிரச்சினையை சரி செய்துகொடுத்த பிறகு நீங்கள் பணத்தை தரலாம். 

உங்களின் மனம் சந்தோஷப்படும்பொழுது நீங்கள் பணத்தை கொடுக்கலாம். அந்த பணமும் நல்ல விசயத்திற்க்கு செலவு செய்ப்படும் அதனைப்பற்றி வெளியி்ல் சொல்லிக்கொள்ளவில்லை. பாதி பணம் நமது அம்மனின் பூஜைக்காக செலவு செய்யப்படும். எனக்கு தொழில் சோதிடம் தான் எனக்கு இப்பொழுது பல கம்பெனிகள் பணம் கொடுப்பதால் ஒன்றும் பிரச்சினை இல்லை. ஜாதககதம்பம் வழியாக வரும் பணத்தை அம்மனின் பூஜைக்கும் மற்றும் பல நல்ல காரியங்களுக்கு செலவு செய்யப்படும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: