Followers

Thursday, May 30, 2013

அன்னையின் அருள்


வணக்கம் நண்பர்களே !
                    அன்னையின் அருளைப்பற்றி எனது வாழ்க்கையில் நடந்த சம்பவத்தைப்பற்றி எழுதியிருந்தேன். அந்த சம்பவத்தில் வேறு ஒருவரும் சம்பந்தப்பட்டு இருந்தார். அந்த பணக்கார தொழில் அதிபருக்கு நெருங்கிய நண்பர். அவரும் என்னை எதிர்த்தவர் தான் என்ன மறைமுகமாக எதிர்த்தவர். அவரின் மகன்கள் இருவர் இருந்தார்கள் அவர்களுக்கு மிகப்பெரிய இடத்தில் பெண் பார்த்து திருமணத்தை முடித்து இருந்தார்.

அவரின் ஒரு மகனுக்கு திருமணம் முடிந்து குழந்தை பாக்கியம் இல்லை. அவர்களும் பல பரிகாரங்கள் செய்தும் பயன் இல்லை. அந்த பெண்ணின் தந்தை அரசியலில் மிகப்பெரிய அந்தஸ்துடன் இருப்பவர். அவருடைய ஒரே பெண் இந்த பெண். பல கோடிகளை கையில் வைத்திருப்பதால் என்ன பயன் குழந்தை பாக்கியம் என்பது இறைவன் நினைத்தால் மட்டுமே நடைபெறும் ஒரு செயல் அல்லவா.

அவர்கள் என்ன காரணத்தால் குழந்தை பாக்கியம் இல்லை என்பதை அறிந்து கொண்ட பிறகு இப்பொழுது என்னை தொடர்புக்கொள்ள முயற்சிக்கிறார்கள். நான் அன்னையின் அருளை எழுதியபிறகு இது நடந்துள்ளது. பலகோடிகளையும் சமூக அந்தஸ்தையும் வைத்துக்கொண்டு இருப்பவர்களை பரதேசி போல் இருக்கும் என்னை தேட வைத்தது யார் நமது அன்னை அல்லவா.

என்னை நேரடியாக தொடர்புக்கொள்ள இதுவரை முயற்சிக்கவில்லை. எனது நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்கள் மூலம் பேச்சு வார்த்தை நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. என்னிடம் கூடிய விரைவில் நேரில் வருவார்கள். நான் மன்னிப்பேன். எனது மனம் குழந்தைபோல் தானே தவிர கொடூரம் கிடையாது.

இது எல்லாம் உங்களிடம் ஏன் சொல்லுகிறேன் என்றால் ஒருவனின் பக்திக்கு ஒரு அன்னையி்ன் அருளை எப்படி காட்டுகிறது என்பதை உங்களுக்கு புரிய வைக்க தான் இதனை எழுதுகிறேன்.

நான் எவ்வளவோ மந்திரங்களை கற்று இருக்கிறேன் அதனை வைத்துக் கூட எனக்கு தொந்தரவு கொடுப்பவர்களை தடுக்கமுடியும் ஆனால் நான் அவ்வாறு செய்வதில்லை. ஏன் என்றால் ஒரு மந்திரத்தை எனது சொந்த தேவைக்காக உபயோகப்படுத்தினால் அதில் இருந்து எனக்கு கர்மவினை எனது ஆத்மாவில் தொற்றிக்கொள்ளும். எந்த காரணத்திலும் கர்மவினை தொடவிடகூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பேன்.

அனைத்தையும் அன்னை பார்த்துக்கொள்வாள் என்று நான் விடும்பொழுது அந்த பிரச்சினை அங்களாபரமேஸ்வரியி்ன் பிரச்சினையாக செல்கிறது. என்ன ஒன்று என்றால் கொஞ்ச நாட்கள் ஆகும். தெய்வம் நின்றுக்கொல்லும். எனக்கு பிரச்சினை தருபவர்கள் எனக்கு பிரச்சினை தரும் நேரத்தில் மிகுந்த வளர்ச்சியை அடைவார்கள். ஒரு மிகப்பெரிய வளர்ச்சி போல் இருக்கும் அதன் பிறகு அவர்கள் என்னை மறந்துவிடுவார்கள். அதன் பிறகு தான் அவர்களுக்கு வினையே ஆரம்பம் ஆகும்.

அன்னை எப்படி எதிரியை பிடித்து ஆட்டிபடைக்கிறது என்பதை எனக்கு இப்பொழுது தான் தெரிகிறது. ஆன்மீகத்தை ஒரளவு தெரிந்தபிறகு எனக்கு இந்த தகவல் கிடைத்தது. அது மிகப்பெரிய ஆச்சரியத்தை தருகிற விசயமாகவே இருக்கிறது.

என்னிடம் பிரச்சினை செய்யும்பொழுது செய்த பிறகும் நான் எவ்வளவோ இறங்கி போய் அவர்களிடம் கேட்பது பிரச்சினை வேண்டாம், விட்டுவிடுங்கள். மனம் திருந்துங்கள் என்று பலமுறை கேட்டு இருக்கிறேன் ஆனால் அவர்கள் இதனை காதால் கூட கேட்பதில்லை. ஏன் என்றால் பணத்திமிரு. பணத்தால் அனைத்தையும் சாதிக்கலாம் என்ற எண்ணம் தானே தவிர வேறு ஒன்றும் இல்லை. அம்மன் ஒருமுறை கோபத்துடன் அவர்களை பார்த்தால் போதும் அவர்களால் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எழு முடியாத காரியம் என்பதை நான் அறிவேன். 

நான் வைத்துள்ள நம்பிக்கையை அம்மனின் மேல் நீங்களும் வையுங்கள் உங்களை தன் பிள்ளையாக பாதுக்காப்பாள். அங்களாபரமேஸ்வரியிடம் சரணாகதி அடைந்துவிட்டால் போதும். அனைத்தையும் அவள் பார்த்துக்கொள்வாள்.

 ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி போற்றி.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: