Followers

Friday, May 31, 2013

வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கு


வணக்கம் நண்பர்களே!
                     வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கு என்று ஒரு வாய்ப்பை தந்தேன் அல்லவா. இதனை பல நண்பர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அது மகிழ்ச்சியை தருகிறது. அதே நேரத்தில் இதனை எப்படி செய்வது என்பது மட்டும் அவர்களுக்கு தெரியவில்லை.

ஒரு வியாபாரத்தில் அந்தளவுக்கு அறிவு குறைவாக இருக்கிறது என்பதை மட்டுமே காட்டுகிறது. நாளை யாரை சந்திக்க போகிறோம் என்பதனை கூட இவர்களால் திட்டம் தீட்டி வைக்கமுடியவில்லை. அந்த நேரத்தில் அந்த இடத்தில் இருந்து எனக்கு போன் செய்து இப்பொழுது இவரை பார்க்கபோகிறேன் என்று சொல்லுகிறார்கள். உடனடியாக நான் என்ன செய்யமுடியும் எனக்கு தொடர்ந்து வேலை இருக்கிறது. எதையும் முதல் நாட்களிலேயே எனக்கு சொல்லிவிடவேண்டும். அப்பொழுது மட்டுமே உங்களுக்கு அந்த வேலையை சரியாக நான் செய்துக்கொடுக்க முடியும்.

இதனை நான் ஆரம்பித்ததே பதிவுக்கு வருபவர்களுக்கு ஒரு வாய்ப்பை தரவேண்டும் என்பதற்க்காக மட்டுமே. என்னிடம் நிறைய வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள் அவர்களின் வழியாக தினமும் எனக்கு தொழில் வாய்ப்பு வந்துக்கொண்டே இருக்கிறது. உங்களுக்கும் இது பயன்பட வேண்டும் என்பதால் உங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டேன். பல பேர் இதனை எப்படி பயன்படுத்துவது என்பது கூட தெரியவில்லை. ஒன்றும் இல்லாதவர்கள் கூட இதில் முன்னேற்றம் அடையமுடியும்.

நான் இப்பொழுது எடு்த்துள்ள கம்பெனிகள் அனைத்தும் கடுமையான சிக்கலில் சிக்கி தவித்த கம்பெனிகளை மீட்டுக்கொடுத்துள்ளேன். இன்னமும் பல கம்பெனிகள் சிக்கலில் இருக்கின்றன அதனையும் மீட்டுக்கொடுக்க போராட வேண்டியுள்ளது முயற்சி செய்துக்கொண்டு இருக்கிறேன்.

சென்னையில் ஒரு நண்பர் ஷேர் வணிகம் செய்துக்கொண்டு இருக்கிறார் அவர் நமது பிளாக்கை படித்துவிட்டு என்னை சந்தித்து பேசினார். அவர் என்னை சந்திக்கும்பொழுது மிகவும் கஷ்டத்தில் நடத்திக்கொண்டிருந்தார். என்னை சந்தித்துவிட்டு போனபிறகு அவரின் தொழில் வாய்ப்பு பல மடங்காக உயர்ந்தது. ஏன் என்றால் அவர் சரியாக திட்டமிட்டு என்னை பயன்படுத்தினார். 

ஒவ்வொரு வாடிக்கையாரையும் சந்திக்கும்பொழுது எனக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே தகவலை கொடுத்துவிடுவார். அம்மனும் அவருக்கு நல்ல உதவி செய்கிறது. அவரின் தொழில் திட்டம் அந்தளவு சரியாக இருக்கிறது. நல்ல வளர்ச்சியை நோக்கி அவரது தொழில் செல்லுகிறது.

இப்பொழுது பல கம்பெனிகள் என்னுடைய கம்பெனிகள் போல் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. அறிவிப்பு வெளியாகி இரண்டு வாரங்கள் கூட இருக்காது என்று நினைக்கிறேன். பல கம்பெனிகள் முன்னேற்றத்தை நோக்கி பயணத்தை எடுத்து இருக்கிறது மகிழ்ச்சியை அளிக்கிறது.

நேற்றுக்கூட ஒரு நண்பர் கும்பகோணத்திற்க்கு அருகில் இருந்து பேசினார் நான் கறவை மாடுகளை வைத்து பால் பண்ணை ஆரம்பிக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கு உங்களின் உதவி கிடைக்குமா என்று கேட்டார். கண்டிப்பாக உங்களுக்கு உதவுகிறேன் என்று சொன்னேன். அனைத்து தொழிலிலும் செயல்படுத்த முடியும்.

இரண்டு மாதங்களில் என்னிடம் வராத தொழில்களே இல்லை என்ற நிலை ஏற்படும் என்று நினைக்கிறேன். எல்லாம் அம்மனின் அருள் இன்றி வேறு ஒன்றும் இல்லை.இப்பொழுது வந்த தொழில்கள் எல்லாம் நமது ஜாதக கதம்பத்தின் வழியாக வந்தது தான்.

 காலத்தை வீண் செய்யாமல் உடனே செயல்படுத்த பாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: