Followers

Saturday, May 25, 2013

மந்திர சித்தி



வணக்கம் நண்பர்களே!
                    காயத்ரி மந்திரத்தை செய்பவர்கள் பத்து நாட்கள் செய்துவிட்டு என்ன ஒன்றும் நடைபெறவில்லை என்று கேட்கிறார்கள். ஒருவர் ஆன்மீகப்பயிற்சியை பத்து நாட்களில் எடுக்கமுடியும் என்றால் உலகத்தில் பிரச்சினை என்பதே இருக்காது. அனைவரும் பத்து நாட்களில் பயிற்சியை எடுத்துவிட்டு அவர்களின் பிரச்சினை சரிசெய்துக்கொள்ளமுடியமே.

வெறும் பத்துநாட்களில் ஒன்றும் நடைபெறாது. அதற்கு என்று நேரம் வரும்பொழுது மடடுமே உங்களுக்கு சித்திகிடைக்கும். நாம் இருப்பது கலியுகத்தில் இருக்கிறோம். இந்த கலியுகத்தில் என்ன தான் ஆன்மீகமுயற்சி செய்தாலும் ஒருவரால் முன்னேற்றம் அடைய பல நாட்கள் கஷ்டப்படவேண்டும். உடனே நடைபெறாது. தொடர்ந்து செய்துக்கொண்டு வாருங்கள். உங்களுக்கு சித்தி கிடைக்கவில்லை என்றால் உங்களின் கர்மாவின் கணக்கு அதிகமாக இருக்கிறது என்று அர்த்தமே தவிர இதில் ஒன்றுமே இல்லை என்று சொல்லமுடியாது.

நீங்கள் செய்யும் பொழுது நம்பிக்கையுடன் செய்துக்கொண்டு வாருங்கள் அப்பொழுது மட்டுமே சித்திகி்டைக்கும். வேதத்தை படித்தவர் ஒரு மலையில் செல்லுகிறார் அந்த மலையில் கால் தவறி நீண்ட பள்ளத்தில் விழுகிறார். அப்பொழுது அவரின் மனதில் நினைக்கிறார் நான் படித்த வேதம் உண்மையால் எனக்கு அடிப்படாது என்று மனதில் நினைக்கிறார். அவர் விழுந்து பார்க்கும்பொழுது ஒரு சிராய்ப்பு மட்டும் ஏற்பட்டு இருக்கிறது. உடனே அவரின் குருவிடம் சென்று சொன்னார். நான் விழும்பொழுது நான் கற்ற மந்திரம் உண்மையானால் எனக்கு அடிப்பட கூடாது என்று சொன்னேன் ஆனால் இந்த சிராய்ப்பு மட்டும் ஏற்பட்டு இருக்கிறது இது எதனால் என்றார்.

அதற்கு குரு சொன்னார் நான் கற்ற மந்திரம் உண்மையானல் என்று கடைசியில் ஒரு இழு இழத்தாய். நீ சொல்லும்பொழுது நான் கற்ற மந்திரம் உண்மை என்னை காப்பாற்றும் என்று சொல்லிருந்தால் இந்த சிராய்ப்பு கூட ஏற்ப்பட்டு இருக்காது என்றார்.

கடைசியில் ஒரு சந்தேகம் உனக்குள் ஏற்பட்டு இருக்கிறது. அந்த சந்தேகம் கூட ஏற்படாமல் இருக்கவேண்டும் நீ கற்ற வேதம் உண்மை இதனை நீ உணர்ந்தால் உனக்கு சிறு சிராப்பும் ஏற்படாது என்றார். இதனை நான் ஏன் உங்களுக்கு சொல்லுகிறேன் என்றால் நீங்கள் அனைவரும் மனதில் ஒரு சிறு சந்தேகத்தோடு தான் செய்துக்கொண்டு வருகிறீர்கள். அந்த சந்தேகத்தை விட்டு விட்டு முழுமையாக நம்பினால் உங்களுக்கு மந்திரம் எளிதில் சித்தியாகும்.

முதலில் நீங்கள் உங்களை நம்பி உங்களின் தெய்வத்தை நம்பி இது இருக்கிறது இது தான் என் வாழ்க்கைக்கு உதவபோகிறது என்று நீங்கள் நம்பவேண்டும். இப்படி நீங்கள் செய்துக்கொண்டு வாருங்கள் உங்களுக்கு மந்திரசித்தி கிடைத்துவிடும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: