Followers

Thursday, May 9, 2013

நல்ல செயல்


வணக்கம் நண்பர்களே!
                    காயத்ரி மந்திர பயிற்சியை ஆரம்பிக்க நல்ல நாளைப்பற்றி சொல்லிருந்தேன். இதற்கு பல நண்பர்கள் தொடர்புக்கொண்டு கேட்டு வருகிறார்கள். நீங்கள் இதுவரை தொடர்புக்கொள்ளவில்லை என்றால் தொடர்புக்கொண்டு கேட்டுக்கொள்ளுங்கள்.

எப்படி செய்வது என்பதைப்பற்றி நான் இதுவரை பதிவில் சொல்லவில்லை அதற்கு காரணம் நீங்கள் எடுக்கும் தெய்வங்களை பொருத்து செய்யும் முறையும் மாறிவரும் என்பதால் பதிவில் சொல்லவில்லை. அதனால் நீங்கள் என்னிடம் தொடர்புக்கொண்டு கேட்டுக்கொள்வது நலம். பெண்கள் காயத்ரி மந்திரத்தை சொல்லக்கூடாது என்று சொல்லிவார்கள். காயத்ரி மந்திரம் மட்டும் இல்லை நீங்கள் எந்த தெய்வத்தின் மூலமந்திரத்தையும் எடுத்துககொண்டு செய்யலாம்.

உங்களின் குலதெய்வத்தையும் எடுத்து செய்துக்கொள்ளலாம். உங்களின் குலதெய்வ மந்திரம் தெரிந்திருந்தால் போதுமான ஒன்று. உங்களின் இஷ்டம்போல் மனதிற்க்கு பிடித்த தெய்வத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லுவதால் அனைத்து நண்பர்களும் விரும்பி இதனை செய்கிறார்கள். உங்களின் இஷ்டம்போல் தெய்வத்தை தேர்ந்தெடுத்துக்கொண்டு என்னை தொடர்புக்கொள்ளுங்கள்.

காயத்ரி மந்திரம் தானே அதனை நாமே செய்துக்கொள்ளலாம் என்று மட்டும் நினைத்து செய்துக்கொள்ளாதீர்கள். என்னை தொடர்புக்கொண்டு அனைத்தையும் தெரிந்துக்கொண்டு செய்து நலம். இது உங்களின் ஆன்மீகப்பயிற்சிக்கு ஒரு பிள்ளையார் சுழி மட்டுமே. இதன் உள்ளே பல பயிற்சிகளை வைத்துள்ளேன். ஒவ்வொருவரும் என்னை தொடர்புக்கொண்டு செய்வது நலம்.

நீங்கள் செய்யும்போதே உங்களின் ஆத்மாவின் பலம் என்ன என்பதை பரிசோதிக்கும் வழி எல்லாம் இதில் இருக்கிறது. நீங்களே பரிசோதனை செய்வது போல் வைத்திருக்கிறேன். அனைவரும் முயற்சி செய்து பாருங்கள். நல்ல பலனை அடையலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: