Followers

Thursday, June 13, 2013

நேரம்: பகுதி 2


வணக்கம் நண்பர்களே !
                    நேரத்தைப்பற்றி கடந்த பதிவில் சொல்லிருந்தேன். அதன் தொடர்ச்சி இது படித்து பயன்படித்திகொள்ளுங்கள்.

மதியம் 1:13 மணி முதல் மாலை 3:36 மணி வரை

இறந்துபோனவர்கள் மூதாதையர் பூமியில் உலவும் நேரம். இந்த நேரத்தில் பித்ருக்களுக்குத் திவசம் திதி தர்ப்பணம் முதலியவைகளைச் செய்தல் வேண்டும். இறந்துபோன ஆத்மாக்கள் உலவும் நேரம் என்பதால் அதிகப்பட்சமாக வெளியில் செல்லகூடாது என்பார்கள். அவசர உலகத்தில் யார் இது எல்லாம் பார்க்கிறார்கள். இந்த நேரத்தில் இறந்தவர்களை வீட்டில் இருந்து எடுக்ககூடாது. அப்படி எடுத்துச்சென்று எரித்தல் அல்லது புதைத்தல் செய்தால் அந்த வீட்டில் மீண்டும் மரணம் ஏற்படும்.

மாலை 3:37 மணி முதல் மாலை 6:00 மணி வரை

இந்த நேரத்தில் நீங்கள் ஆன்மீக விசயங்களை பற்றி சொற்பொழிவை கேட்கலாம். இந்த நேரத்தில்  ஞானத்தைப்பற்றி பேச்சை கேட்டால் உங்களுக்கு நல்ல ஆன்மீக அனுபவங்கள் ஏற்படும்.

மாலை 6:00 மணி முதல் இரவு 8:24 மணி வரை

இந்த நேரத்தில் எல்லாக் கோயில்களிலும் வழிபாடு நடக்கும். பிரம்மமுகூர்த்த நேரம் என்றும் இதனை சொல்லுவார்கள். தியானம் செய்ய இந்த நேரத்தை பயன்படுத்தலாம். உங்களின் வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

இரவு 8:25 மணி முதல் 1:12 மணி வரை

வடநாட்டில் இந்த நேரத்தில் திருமணம் செய்வார்கள். மந்திரத்தை கற்றுக்கொள்ள உகந்த நேரம். கூடுவிட்டுக் கூடு பாய்தல் போன்ற வித்தைகளை செய்யகூடிய நேரம் இது.

இரவு 10:49 மணி முதல் 1:12 மணி வரை

சித்து விளையாட்டுக்களை கற்றுக்கொள்ள கூடிய நேரம் இது. மாந்தீரிக மந்திரங்கள் செய்யகூடிய நேரம் இது. தொலைவில் உள்ள பொருட்களை அருகில் வரச்செய்தல். விரும்புகிற போகங்களை இருக்கும் இடத்திற்கே வரவழைத்து அனுபவித்தல் ஆகிய சித்துகளை கற்றுக்கொள்ளவும் இந்த நேரத்தில் செய்யலாம். பகைவர்களை தன் வசப்படுத்துதல் வயது ஏறாமல் எப்பொழுதும் இளமையாக இருக்குமாறு செய்தல் போன்றவற்றிற்க்கு இந்த நேரம் உகந்தது.

நள்ளிரவு 1:13 மணி முதல் 3:36 மணி வரை

மனிதன் பலவீனமாக இருக்கின்ற நேரம் இது. துர்சக்திகள் அதிகமாக நடமாட்டம் உள்ள நேரம் இது. இந்த நேரத்தில் நாய்கள் குழைத்தால் அது துர்சக்திகள் வருகின்றன என்று அர்த்தம். 



நண்பர்களே
          இந்தந்த நேரத்தில் இது தான் செய்ய வேண்டும் என்று முன்னோர்கள் சொன்னதை நீங்களும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: