Followers

Thursday, June 13, 2013

ஆன்மீக அனுபவங்கள் 95


வணக்கம் நண்பர்களே!
                    நமது நண்பர்கள் பலபேர் என்னிடம் கேட்கும கேள்வி நான் தனியாக வீட்டில் இருக்கிறேன். நான் ஆன்மீகப்பயிற்சி செய்ய வேண்டும் அதற்கு வழி சொல்லுங்கள் என்று கேட்கிறார்கள்.

நீங்கள் காயத்ரி மந்திரம் செய்பவர்களாக இருந்தால் அந்த மந்திரத்தை சொல்லலாம். மந்திர உரு ஏற்றுவது நல்லது. பாதி பேர் எங்களுக்கு ஸ்பார்க் கிடைக்கவேண்டும். அந்த சக்தியை உணரவேண்டும் அதற்கு வழி சொல்லுங்கள் என்று கேட்கிறார்கள். அப்படி கிடைப்பது எல்லாம் கோடியில் ஒருவருக்கு கிடைத்தாலே மிகப்பெரிய விசயம் தான் அது. நீங்கள் ஆயிரம் பயிற்சி செய்தாலும் ஒரு குரு கிடைக்கவில்லை என்றால் சக்தியை உணரும் பாக்கியம் உங்களுக்கு கிடைக்காது. 

குரு வழியாக தான் அந்த சக்தியை உணரமுடியும். குருவின் முயற்சியில் அது இருக்கிறது. குரு முழுசக்தியும் பயன்படுத்தி உங்களுக்கு அதனை தருவார். அப்பொழுது நீங்கள் அதனை அனுபவிக்கலாம். குரு இல்லாமல் சக்தியை உணரும் பாக்கியம் கிடைக்காது. படிக்கும் விசயம் ஆன்மீகத்திற்க்கு உதவாது என்பதையும் முதலில் புரிந்து கொள்ளுங்கள். ஆன்மீகத்தில் அனைத்தும் அனுபவம் மட்டுமே.

குரு ஒருவருக்கு தருகிறார் என்றால் அவருக்கும் அந்த நபருக்கும் முன்ஜென்ம உறவு இருந்தால் மட்டுமே அது கிடைக்கும். என்னுடைய குருவிடம் எத்தனையோ பேர் வந்து கேட்டுவிட்டார்கள் அவரும் எதாவது சொல்லிக்கொடுப்பார் ஒன்றும் நடைபெறாது. ஏன் என்றால் அந்த உறவு முறை இருந்தால் மட்டுமே சாத்தியப்படும். நிறைய நண்பர்கள் உங்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்கிறேன் என்று சொல்லுவார்கள் நான் சொல்லுவேன் தெரிந்துக்கொண்டு ஒன்றும் நடைபெறபோவதில்லை. 

ஆன்மீகம் என்பது உயிரை பணயம் வைத்து செய்கின்ற ஒரு பயிற்சி. சிறு தவறு நடந்தாலும் உயிர் போய்விடும். நல்ல குரு அமையும்பொழுது மட்டுமே அது சாத்தியப்படும். ஒரு பயிற்சி செய்யும் பொழுது ஏதாவது தவறாக நடைபெறு்ம்பொழுது உங்களை எந்த மருத்துவராலும் காப்பாற்றமுடியாது. குரு மட்டுமே காப்பாற்றுவார்.

நான் அதிகமாக பயிற்சி செய்வதில்லை எனக்கு இப்பொழுது அதற்கான நேரமும் இல்லை. நான் அனைத்தையும் குருவிடம் இருந்து பெற்றுக்கொளகிறேன். அவருடன் இருக்கும்பொழுது அது தவம் போல் தான் அமையும். தனியாக போய் தவம் செய்ய வேண்டியதில்லை. அவர்களின் ஆத்மா நமக்கு சக்தியை தரும். அந்த சக்தி நமக்கு போதுமான ஒன்று.

நல்ல ஆத்மாவோடு நாம் இணையும்பொழுது அதாவது அவர்களிடம் நெருங்கும்பொழுது நமது ஆத்மாவின் கர்மா நம்மை விட்டு விலகும். அதன் பிறகு நமக்கு குரு அமைவார். நமக்கு கர்மா அதிகமாக இருப்பதால் நாம் குருவை அடையமுடியவில்லை என்ற நிலை ஏற்படுகிறது.கர்மாவை குறைக்க நீங்கள் பல ஆன்மீகஸ்தலங்கள் மற்றும் சந்நியாசிகளின் சந்திப்பு பூர்வபுண்ணியத்தொடரில் சொல்லியுள்ள விசயங்களை நீங்கள் கடைபிடித்தால் உங்களுக்கும் நல்ல குரு கிடைப்பார்.

நமக்கு வரும் பிரச்சினைகளும் அப்படி தான் நீங்கள் அந்த பிரச்சினையில் இருந்து விடுபடவேண்டும் என்றால் முதலில் அழுதுக்கொண்டு உட்கார்ந்து இருக்காமல் காரியத்தில் இறங்கவேண்டும். கர்மாவால் இது நடைபெறுகிறது எப்படியும் இந்த கர்மாவின் வினையை குறைக்க வேண்டும் என்று நினைத்து அதனை குறைக்க முயற்சி செய்ய வேண்டும். 

நல்ல குரு அமைந்து அவருடன் இருக்கும்பொழுது உங்களுக்கு அனைத்தையும் அந்த குரு ஏற்படுத்திதருவார். அதனை வைத்து நீங்கள் ஆன்மீகவாழ்வு வாழலாம். நல்ல குரு அமையும் வரை ஜாதக கதம்பத்தை படித்துக்கொண்டு இருக்க வேண்டியது.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: