Followers

Monday, June 17, 2013

ஆன்மீக அனுபவங்கள் 98


வணக்கம் நண்பர்களே !
                    ஒரு ஆன்மீகதகவலைச் சொல்லுகிறேன். என்னிடம் சோதிடம்கேட்க வரும் நண்பர்களுக்கு பல ஆன்மீகவிசயங்கள் செய்துக்கொண்டு இருக்கிறேன். இந்தியாவில் இருக்கும் நண்பர்களும் வெளிநாட்டில் வாழும் நண்பர்களும் செய்து வருகிறேன். 

வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்களுக்கு செய்யும் பொழுது ஒரு ஆன்மீகவாதி அதிகமாக கஷ்டப்படவேண்டும். ஏன் என்றால் தெரியாத நாடு. கடலை தாண்டி ஒரு விசயத்தை செய்ய வேண்டும் என்றால் கடினமான வேலை. இங்கே இருப்பவர்களுக்கே செய்வது கடினம் எனும் பொழுது அயல்நாட்டில் இருப்பவர்களுக்கு எப்படி வேலை செய்யமுடியும். இங்கு இருந்து அயல்நாட்டில் வேலை செய்பவர்களுக்கு ஆன்மீகம் செய்வது கடினம். 

இந்தியாவில் இருந்துக்கொண்டு அயல்நாட்டில் இருப்பவர்களுக்கு ஒரு சக்தியை அனுப்ப ஒவ்வொருவரும் அவ்வளவு கஷ்டப்படுவார்கள். நீங்கள் ஆன்மீகவாதிகளாக இருந்தால் கண்டி்ப்பாக இதனைப்பற்றி நன்றாக தெரியும்.நான் தொழில் செய்ய கற்றக்கொண்டு நாளில் இருந்தே அயல்நாட்டில் இருப்பவர்களுக்கு காரியம் எளிதாக செய்துக்கொடுப்பேன். இதனை பெருமையாக சொல்லவில்லை ஆனால் உண்மை.

என்னுடைய குருநாதரிடம் இதனைப்பற்றி கேட்காமலே நான் செய்தேன். அவர் சொன்னார் உனக்கு இதனை எளிதாக செய்யமுடிகிறது என்றால் நீ எதனையும் வெற்றி பெற்றுவிடுவே டா என்று சொல்லுவார். ஒரு அம்மனை நீங்கள் அயல்நாட்டிற்க்கு அனுப்பி வேலை செய்வதற்க்குள் படாதபாடுபட்டுவிடுவீர்கள். நான் அடுத்த நிமிடத்தில் அனுப்பி வேலையை செய்வேன்.   கடலை கடப்பது கடினமான ஒரு செயல் அல்லவா. அப்படி ஒரு கடினமான செயலை என்னால் எளிதான செய்யமுடிகிறது. 

சென்னையில் அமர்ந்துக்கொண்டு உலகம் முழுவதும் செய்வது என்றால் சாதாரணபட்ட செயல் அல்ல இது. குருவோடு கஷ்டம் இதில் இருக்கிறது. அம்மனின் சக்தி அதிகம் என்பதால் அனைத்தும் நடைபெறுகிறது. நீங்களும் இப்படி எல்லாம் செய்யவேண்டும் என்று நினைக்கவேண்டும் அப்பொழுது அனைத்தும் உங்களுக்கு கிடைத்துவிடும் என்பதால் இதனை சொல்லுகிறேன்.

அன்பான நண்பர்களே ! வரும் 20-06-2013 வியாழன் அன்று எனது ஊரில் இருக்கும் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரிக்கு நமது தளத்தின் நண்பர்களின் உதவியுடன் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: