Followers

Tuesday, June 18, 2013

ஆன்மீக அனுபவங்கள் 99


வணக்கம் நண்பர்களே !
                    ஒரு ஆன்மீக செய்தி ஒன்றைப்பற்றி பார்க்கலாம். நாம் எப்பொழுதாவது ஒரு ஆன்மீகவாதியை எதிர்த்து இருக்கலாம். நமக்கும் அவருக்கும் சண்டை ஏற்பட்டு இருக்கலாம். நாம் என்ன செய்வோம் அவருக்கு எதிராக நாம் போய் ஏதாவது ஒரு தெய்வத்திடம் முறையிடுவோம்.

தெய்வத்திடம் ஆன்மீகவாதி இப்படி செய்தார் என்று நாம் முறையிட்டால் அந்த தெய்வம் நமக்கு எதிராக தான் செய்யும் என்பதை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். ஆன்மீகவாதியை எதிர்த்தால் நாம் எந்த தெய்வத்திடமும் முறையிடகூடாது. அந்த தெய்வம் நமக்கு எதிராக திரும்பி நம்மை உண்டு இல்லை என்று செய்துவிடும். ஆன்மீகவாதியே தவறு செய்தால் கூட நாம் வேண்டுதலை வைத்துவிடகூடாது. 

நீங்கள் நல்லது தான் செய்திருக்கிறீர்கள் அந்த ஆன்மீகவாதி தான் தவறு செய்திருக்கிறார் என்றாலும் கூட நீங்கள் முறையிடு செய்யாதீர்கள். ஆன்மீகவாதியின் செயல் அவர் அனுபவிப்பார் ஆனால் நீங்கள் முறையிட கூடாது. நான் பல ஆன்மீகவாதியிடம் சண்டை போட்டுக்கொண்டு இருந்திருக்கிறேன். அவர்களை எதிர்த்து பல கோவில்களுக்கு சென்று வணங்கியும் வந்திருக்கிறேன். அப்படி வணங்கிக்கொண்டு வரும்பொழுது எனக்கு ஆபத்து மேலும் மேலும் தேடிவந்துக்கொண்டு தான் இருக்கும்.

எனது குருநாதரிடம் இதனை கேட்டபொழுது சொன்னார். ஆன்மிகவாதிகளை எதிர்த்துக்கொண்டு கோவிலுக்கு சென்றால் நமக்கு ஆபத்து வரும் அது குலதெயவமாக கூட இருக்கலாம். ஆபத்து மட்டுமே செய்யும்.அப்படி செய்யாதே விட்டுவிடு என்றார்.

ஒரு சந்நியாசியாக இருந்தால் அதைவிட ஆபத்து நமக்கு கிடைக்கும். ஏன் என்றால் அவர்கள் அதற்க்கு என்றே தன்னை அர்ப்பணித்து இருக்கிறார்கள். அவர்களின் சக்தி மகத்தானது அல்லவா அதனால் சொல்லுகிறேன். நீங்கள் ஆன்மீகவாதிகளிடம் சண்டை போடவேண்டாம்.   அப்படி போட்டுக்கொண்டு ஊரில் உள்ள தெய்வத்திடம் வேண்டினால் உங்களுக்கு தான் ஆபத்து.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: