Followers

Thursday, June 13, 2013

ஆனந்த யோகம்


வணக்கம் நண்பர்களே!
                    யோகத்தைப்பற்றி நாம் பார்க்கலாம் என்று சொல்லிருந்தேன். அதனை இந்த பதிவில் இருந்து நாம் பார்க்கலாம். மேலை கொடுக்கப்பட்ட ஜாதகம் உங்களுக்கு புரியவேண்டும் என்பதற்க்காக தான் கொடுத்துள்ளேன். 

முதலில் நாம் பார்ப்பது ஆனந்த யோகம். அனைவரும் ஆனந்தமாக இருக்கவேண்டும் என்று தான் ஆசைப்படுகிறோம். அதனால் முதலில் ஆனந்த யோகத்தைப்பற்றி பார்க்கலாம். லக்கனத்திற்க்கு ஐந்தாவது இடத்தில் சூரியனும் புதனும் சேர்ந்து இருக்கவேண்டும். லக்கினத்திற்க்கு பதினோராம் வீட்டில் குருவும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் அது ஆனந்த யோகம். 

இந்த யோகத்தால் என்ன பயன்?

இந்த யோகம் நல்ல சந்தோஷத்தையும் நல்ல பணவரவையும் இந்த ஜாதகருக்கு கொடுக்கும். பணம் வந்துக்கொண்டே இருக்கும். இப்பொழுது மனிதர்களுக்கு பணம் கிடைத்துவிட்டால் போதுமே நல்ல சந்தோஷத்தோடு வாழ்வார்கள்.

இந்த யோகம் எப்பொழுது நடைபெறும்?

எந்த ஒரு யோகமும் அது நடைபெறுவதற்க்குரிய தசா வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட கிரகங்களின் தசாவில் நடைபெறும்.

எந்த ஒரு யோகமும் நடைபெறுவதற்க்கு லக்கினாதிபதியும் நன்றாக இருக்கவேண்டும். லக்கினாதிபதி நன்றாக இருக்கும்பட்சத்தில் ஒரளவு அந்த யோகத்தை நாம் அனுபவிக்கலாம். ஏன் ஒரளவு என்று சொல்லுகிறீர்கள் என்று நினைக்கிறீர்களா தீயகிரகங்களின் பார்வை இருந்தால் ஒரளவு பயன் கிடைக்கும்.

இந்த யோகத்தால் பிரச்சினையும் வரும் அது என்ன என்றால் குருவும் சந்திரனும் பதினோராவது வீட்டில் இருப்பது வேலை செய்யும் இடத்தில் உயர்அதிகாரிகளுடன் அடிக்கடி பிரச்சினை வரும். உயர் அதிகாரிகள் உங்களை அடிக்கடி இடம் மாற்றம் செய்துக்கொண்டே இருப்பார்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: