Followers

Saturday, June 15, 2013

காயத்ரி மந்திர பயிற்சி


வணக்கம் நண்பர்களே!
                    அனைவரும் ஆன்மீக வாழ்க்கை வாழவேண்டும் என்று நினைக்கிறீர்கள். வரவேற்கிறேன். நமது பிளாக் வழியாக காயத்ரி மந்திர பயிற்சியும் செய்துக்கொண்டு இருக்கிறீர்கள்.  அதில் பலபேர் இன்று நல்ல நிலைமையில் இருக்கிறாரகள். பல தளங்களில் உள்ள மந்திரப்பயிற்சிக்கும் நமது பிளாக்கில் நீங்கள் செய்யும் மந்திரப்பயிற்சிக்கும் வித்தியாசம் இருக்கிறது. 

நீங்கள் எந்த தெய்வத்தின் மந்திரத்தை எடுத்தாலும் அதற்கு நமது அம்மனின் துணை அதிகமாக உங்களுக்கு கிடைக்கும். உலகத்தில் உள்ள மந்திரங்களில் காயத்ரி மந்திரம் முதன்மையானது. 21 ஒரு நாட்களில் நல்ல முன்னேற்றத்தை அடையமுடியும். நமது நண்பர்கள் அடைந்திருக்கிறார்கள். பல ஆன்மீக நண்பர்கள் என்ன காயத்ரி மந்திரம் தானே இதில் என்ன இருக்க போகிறது என்று நினைத்துக்கொண்டு செய்வதில்லை. காயத்ரி மந்திரத்தை மட்டும் இங்கே செய்ய சொல்லவில்லை அதோடு சேர்ந்து பல பயிற்சிகளை நான் கொடுத்துக்கொண்டு இருக்கிறேன்.

ஒரு சிலருக்கு அவர்களின் ஆத்மாவின் சக்திக்கு தகுந்தவாறு பயிற்சி கொடுக்கிறேன். ஒரு சிலருக்கு 108 நாட்கள் முடியட்டும் என்று விட்டுவைத்திருக்கிறேன். அனைத்தும் அவர்களின் ஆத்மாவின் சக்தியை பொருத்து நடத்தப்படும். பல பேர் பல தளங்களி்ல் செய்த மந்திரத்தால் ஒன்றும் நடைபெறவில்லை என்று அதனை விட்டுவிட்டு நமது பிளாக்கில் வந்து பயிற்சி செய்துக்கொண்டுருக்கிறார்கள்.

பிற தளங்களில் வழியாக நடத்தும் பயிற்சியை செய்வதில் தவறு ஒன்றும் இல்லை. அதில் உங்களுக்கு முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் காலத்தை கடத்தாமல் உடனே வந்துவிடுங்கள். நமது அம்மன் இருக்கிறது உங்களை  காப்பாற்றும.

நமது பயிற்சியில் எந்தவித கட்டுபாடும் கிடையாது. அதனால் உடனே நீங்கள் இந்த பயிற்சியை எடுத்துக்கொள்ளுங்கள். நமது அம்மன் உங்களுக்கு மிகப்பெரிய சக்தியை கொடுக்கும் அதனை வைத்து நீங்கள் அனைத்திலும் முன்னேற்றம் கண்டுவிடலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: