Followers

Monday, June 17, 2013

கர்மாவின் தாக்குதல்


வணக்கம் நண்பர்களே!
                     நேற்று பதிவு போடமுடியவில்லை. ஏன் என்றால் சில நேரங்களில் பிறர் கர்மாவின் வினை தாக்குகிறது அப்பொழுது உடல் நிலை பாதிப்பு ஏற்படுகிறது. ஒரு சில நேரங்களில் இப்படி நடைபெறுவது உண்டு. 

பிறர்க்காக வேலை செய்யும்பொழுது அவர்களின் கர்மவினை தாக்கும் அதற்கு பாதிப்பு ஏற்படா செய்துக்கொண்டு தான் செய்வோம். ஒரு சில நேரங்களில் மீறி தாக்குதலை நடத்துக்கிறது. அப்பொழுது என்ன நடக்கும் என்றால் படுத்தபடுக்கையாக கிடக்க வேண்டிய நிலை ஏற்படும். எனக்கு தலைவலி வரும் பிறகு நமது அம்மனை வைத்து சரிசெய்துக்கொண்டு மறுபடியும் கிளம்ப வேண்டியதாகிவிடும் அதற்கு கொஞ்சம் நேரம் பிடிக்கும். நேற்று மதியம் நான்கு மணிவரை போராடவேண்டியதாகிவிட்டது. பிறகு நான்கு மணிக்கு பிறகு கிளம்பி பெசன்ட்நகர் அஷ்டலஷ்மி கோவில் சென்றுவி்ட்டு அப்படியே கடற்கரையில் உட்கார்ந்து தியானம் செய்த பிறகு நன்றாகிவிட்டது. தியானம் என்றால் சும்மா கடலை பார்ப்பது மட்டுமே.

நீங்களும் பிறர்க்கு ஜாதகம் பார்க்கும்பொழுது அல்லது பரிகாரம் சொல்லும்பொழுது இப்படி நடக்க வாய்ப்பு அதிகம். கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது உங்களின் பொறுப்பு. பிறரின் கர்மாவை பார்ப்பது தானே நமது வேலை. இந்த வேலையை செய்யும்பொழுது அவர்களின் கர்மா நம்மை தாக்குவது இயல்பான ஒன்று அதனை தாக்கவிடாமல் நாம் தப்பிப்பது நமது கடமை.

உங்களிடம் நான் பலமுறை சொல்லிருக்கிறேன் பிறர்க்கு ஜாதகத்தை பார்க்கும்பொழுது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சொல்லியுள்ளேன். பல பேர்களிடம் ஜாதகத்தை பார்க்கவேண்டாம் என்று சொன்னாலம் கேட்பதில்லை. ஏன் கேட்பதில்லை என்றால் சோதிடம் ஒருவருக்கு படிக்க விருப்பம் வந்துவிட்டால் அவனுக்கு அது பைத்தியம் பிடிப்பது போல் வைத்துவிடும். ஒரு சிலரை நாம் பார்க்கலாம் பேஷ்புக் மீது பைத்தியம் பிடிப்பது போல் பார்த்துக்கொண்டு இருப்பார்கள் அல்லது செல்போனை வைத்து அதில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள் அதுபோல் சோதிடம் படிப்பவனும் இப்படி தான். படித்து விட்டு சும்மா இருக்கவிடாது ஏதாவது ஜாதகத்தை பார்ப்போமே என்று நினைக்க வைத்துவிடும் பிறகு பிறர்கர்மாவை சேர்ந்து சுமக்க வேண்டியது தான்.

ஆன்மீகத்தில் உயர்நிலையில் இருப்பவர்கள் சக்தியை தேவையில்லாமல் உபயோகிக்கமாட்டார்கள். அவர்கள் அப்படியே சேமித்து வைப்பார்கள். அவர்களின் ஆன்மீகவளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்துவார்களே தவிர பிறர்க்கு பயன்படுத்த மாட்டார்கள். நான் அப்படி கிடையாது, கிடைத்தவரை அடுத்தவர்ககளுக்கு கொடுப்போம் என்று நினைத்து செய்கிறேன்

சோதிடம் பார்ப்பது என்று வந்துவிட்டால் தகுந்த ஏற்பாட்டோடு வந்துவிடுவது நல்லது. பிறர் கர்மா வினை எப்படி எதிர்க்கொள்வதில் தான் உங்களின் வெற்றியே அடங்கியுள்ளது. பிறரின் கர்மாவை உங்களின் ஆத்மாவில் ஏற்றிக்கொள்ளாமல் சோதிடத்தை பாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: