Followers

Tuesday, June 18, 2013

வீரமிக்க செவ்வாய்கிழமை


வணக்கம் நண்பர்களே!
                    ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு சக்தி இருப்பதை அறிந்து நமது முன்னோர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். அதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லியுள்ளார்கள்.

செவ்வாய்கிழமை என்பது மிகவும் விஷேசமான ஒரு நாள். இந்த நாள் போர்கடவுளான அங்காரங்கனுக்கு உகந்த நாள். இந்த நாளை நாம் அனைவரும் நல்லது செய்வதற்க்கு தவிர்ப்போம். ஏன் என்றால் இந்த நாளி்ல் இரத்தகாயம் ஏற்படும். தீ காயம் ஏற்படும் என்று காரணத்தால் நாம் இந்த நாளில் எதுவும் செய்வதில்லை. உண்மையில் செவ்வாய்கிழமை அன்று ஏற்படுகிறது.

சலூன் கடை கூட இந்த நாளில் விடுமுறை அளிப்பார்கள் ஏன் என்றால் கத்தி ஏதும் பட்டு இரத்தகாயம் ஏற்பட்டுவிடும் என்பதால் அவ்வாறு செய்வார்கள். ஆண்களாக இருந்தால் நீங்களே இந்த நாளில் ஒரு சோதனை செய்து பார்க்கலாம். செவ்வாய்கிழமை அன்று ஷேவ் செய்து பாருங்கள் உங்களின் கன்னத்தில் கண்டிப்பாக இரத்த காயம் ஏற்படும் அல்லது கடுமையான எரிச்சல் ஏற்படும். வேறு நாட்களில் செய்தால் எரிச்சல் ஏற்படாது. செவ்வாய்கிழமை செய்தால் கண்டிப்பாக எரிச்சல் ஏற்படும். 

செவ்வாய்கிழமை அன்று நீங்கள் எந்த கோவிலுக்கு சென்றாலும் அதன் சக்தி அதிவேகமாக இருக்கும். உங்களுக்கு எதிரிகளின் தொந்தரவு இருந்தால் கூட நீங்கள் செவ்வாய்கிழமை அன்று ஏதாவது ஒரு அம்மனிடம் சென்று முறையிட்டால் உங்களின் எதிரிக்கு மிக பெரிய ஆபத்து ஏற்பட்டுவிடும். எதிரிகளின் தொந்தரவு அதிகமாக இருக்கிறது என்று என்னிடம் சொல்லும் சோதிடவாடிக்கையாளருககு நான் சொல்லுவது செவ்வாய்கிழமை பரிகாரம் செய்யுங்கள் என்று தான் சொல்லுவேன். 

செவ்வாய்கிழமை அன்று எப்படியும் நான் அம்மனை சென்று தரிசனம் செய்துவிட்டு வருவேன். நான் கோவிலில் அம்மனுக்கு தீபம் ஏற்றுவது கூட செவ்வாய்கிழமையில் தான் செய்வேன். நீங்களும் செவ்வாய்கிழமை அன்று அம்மனை வழிபடுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

KJ said...

thanks a lot sir. Very useful information.

rajeshsubbu said...

வணக்கம் KJ சார் நிறைய கேள்விகள் கேட்கிறீர்கள் என்னால் பதில் தான் தரமுடியவில்லை. முடிந்தளவு அனைத்தையும் பதிவிலேயே தந்துவிடுகிறேன்.