Followers

Wednesday, June 19, 2013

நெய்+காபி=குரு


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு சில காலங்களுக்கு முன்பு நெய் மீது ஒரு தனிபிரியம் ஏற்பட்டது. அதன் மணம் என்னை கவர்ந்து இழுத்தது. நான் இருக்கும் அடையார் ஏரியாவில் மூன்று பில்டிங் தாண்டினால் அடையார் ஆனந்தபவன் கடை உள்ளது. அதன் பக்கம் சென்றாலே அங்கு உபயோகப்படும் உணவில் நெய்யின் மணம் தூக்கலாக இருக்கும். அடையார் ஆனந்தபவன் பக்கம் சென்றாலே ஆளை பிடித்து இழுக்கும்.

எனக்கு என்னடா எப்பொழுதும் இல்லாமல் இப்படி இந்த பக்கம் நம்மை இழுக்கிறதே என்று நினைத்துக்கொண்டு இருப்பேன். பிறகு தான் எனக்கு தெரிந்தது குரு தசா நடைபெறுகிறது அதனால் இப்படி இழுக்கிறது என்று புரிந்தது. அதைபோல் அடையார் ஆனந்தபவனில் காபி குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இளவயதில் இருந்தே காபி மீது அதிக ஈடுபாடு. அனைத்தும் குரு கிரகத்தின் வசம் உள்ள பொருட்கள் மீது அதிக ஈடுபாடு இருந்தது. குரு பிராமணர்களுக்கு உரிய கிரகம் அல்லவா. 

இன்றைக்கும் எனக்கு ஒரு வீணான ஒரு செலவு எது என்றால் காபி குடிக்கும் பழக்கம் மட்டுமே. அதுவும் பில்டர் காபி மீது ஒரு தனிபிரியம். அடையார் ஆனந்தபவனில் இன்றைய நிலவரப்படி காபியின் விலை 25 ரூபாய். இதற்கு மட்டும் அதிகமாக செலவு செய்கிறேன். 

கொட்டிவாக்கம் சென்றால் திருவான்மியூரில் உள்ள ஹாட் சிப்ஸ் கடையில் காபி குடிக்கும் பழக்கமும் இருந்தது. இப்பொழுது அங்கு அந்தளவுக்கு காபி நன்றாக இல்லை அதனால் அங்கு செல்வதில்லை.

உண்மையில் இதுவும் ஒரு கெட்ட பழக்க வழக்கம் தான். பிராமணர்களின் சாராயம் என சொல்லப்படுவது காபி. எப்படியும் விட்டுவிடவேண்டும்என நினைக்கிறேன் முடியவில்லை.

ஒரு சில வீடுகளுக்கு நான் செல்லும்பொழுது கூட காபியை விரும்பி கேட்பது உண்டு. ஒரு சில வீடுகளில் அவர்கள் போடும் காபி வைத்தே அவர்களின் மனநிலையை அறிந்துக்கொள்ளமுடியும். கோயம்புத்தூர் ஒரு முறை சென்று இருந்தேன். அந்த வீட்டிற்க்கு என்னை கூப்பிட்டது ஒரு ஆள். அந்த ஆளின் அம்மாவுக்கு என்னை பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். அந்த அம்மா அவர்கள் ஒரு காபி போட்டுக்கொடுத்தார். வீட்டை விட்டு எழுந்து ஒடிய ஒட்டம் திரும்பி பார்த்தது சென்னையில் தான் . ஒவ்வொரு மனநிலையும் பொருத்தே அவர்களின் சமையலும். 

பிரமாணர்களோடும் அதிக பழக்கம் இளம்வயதில் இருந்தே இருக்கிறது. நான் பள்ளிப்படிப்பை மன்னார்குடியில் உள்ள தேசியமேல்நிலைப்பள்ளியில் தான் படித்தேன். அங்கு 75 சதவீதம் ஆசிரியர்கள் பிராமணர்கள். மாதம் மாதம் வரும் அமாவாசை அன்று பள்ளிவிடுமுறை அளிப்பார்கள். ஒரு சில நாட்களில் மதியம் 1 மணிக்கு பள்ளியை ஆரம்பிப்பார்கள். 

அவர்களோடு ஏற்பட்ட பழக்கவழக்கத்தில் தான் இந்த மாதிரி விசயங்கள் தொற்றிக்கொண்டுவிட்டன இன்று வரை அப்படியே அது இருக்கிறது. குரு தசா வந்தவுடன் அது கொடிகட்டி பறக்கிறது. ஒருவருக்கு குரு தசா நன்றாக இருக்கிறது என்பதை நான் சொன்ன விசயங்களில் மனது ஈடுபட்டாலே உங்களுக்கு குரு தசா நல்லதை செய்யும் என்று நினைத்துக்கொள்ளலாம். 



அப்புறம் எப்படி அசைவம் சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டது என்கிறீர்களா என்ன செய்வது அது குடும்ப பழக்கம் ஆகிவிட்டது. எனது ராசி அதிபதி மற்றும லக்கினாதிபதி சனியாகிவிட்டார். அவர் இதனை சாப்பிடுவைக்கிறார்.

நன்றி நண்பர்களே !



அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: