Followers

Monday, June 10, 2013

எட்டில் சுக்கிரன் உதாரண ஜாதகம்


வணக்கம் நண்பர்களே !
                     இப்பொழுது ஒரு ஜாதகத்தை நாம் பார்க்கலாம். லக்கினாதிபதி எட்டாம் வீட்டில் அமர்ந்து ராஜயோகமான வாழ்க்கையை வாழும் ஒருவருடைய ஜாதகத்தைப்பற்றி பார்க்க போகிறோம்.

துலாம் லக்கினம் லக்கினாதிபதியாகிய சுக்கிரன் எட்டாவது வீட்டில் அமர்ந்திருக்கிறார். ரிஷப ராசியில் சொந்தவீட்டில் லக்கினாதிபதி அமர்ந்திருக்கிறார். லக்கினாதிபதி எட்டாவது வீட்டில் அமர்ந்தால் வாழ்க்கை பிரச்சினையை அதிகம் சந்திக்கும் என்று பார்த்திருப்போம். ஆனால் இவருடைய ஜாதகத்தில் லக்கினாதிபதி எட்டாவது வீட்டில் சொந்த வீட்டில் அமர்ந்து இவருக்கு ராஜயோகத்தை வழங்கியது. சுக்கிரன் எட்டில் அமர்ந்தால் அது இரண்டாம் வீடான தனவீட்டை பார்க்கும். பணத்திற்க்கு இவருக்கு குறைவே இல்லை என்று சொல்லும் அளவிற்க்கு பணம் வந்துக்கொண்டு இருக்கிறது.

ஒருவர் சுகமான வாழ்க்கையை வாழவேண்டும் என்றால் அதற்கு சுக்கிரன் துணை வேண்டும். சுக்கிரன் நன்றாக அமைய வேண்டும். இன்பமான வாழ்க்கையை இந்த உலகத்தில் யார் தான் விரும்பமாட்டார்கள் அனைவரும் அதனை தான் விரும்புகிறார்கள். இன்பமான வாழ்க்கைக்கு சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் போதுமானது. இந்த ஜாதகருக்கு லக்கினாதிபதியான சுக்கிரன் 8ல் அமர்ந்தாலும் சொந்த வீட்டில் அமர்ந்ததால் அவருக்கு அனைத்துவிதமான சொகுசுவாழ்க்கையை அது தந்தது.

சுக்கிரன் எட்டில் அமர்ந்ததால் அவருக்கு ஒரு குறையை சுக்கிரன் ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறார் அது என்ன என்றால் எட்டில் அமரும் சுக்கிரன். இவருடைய மனைவியையும் இவரையும் அடிக்கடி பிரித்து வைக்கிறார். எப்படி என்றால் இவர் அடிக்கடி வேலை விசயமாக வெளிநாடு செல்வார்.

வெளிநாட்டில் இருந்து ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்கள் அங்கேயே தங்கிவிட்டு திரும்பி இந்தியா வருவார். அதனை மட்டும் சுக்கிரன் இவருக்கு எதிராக செய்வார். நீங்கள் நினைக்கலாம் அதுதான் திரும்பிவருகிறாரே குடும்பத்தை விட்டு நிரந்தரமாக பிரியவில்லையே என்று நினைக்கலாம். இல்லறவாழ்க்கையில் இருப்பவர்கள் அதிகபட்சமாக ஒரு வாரம் கூட பிரியகூடாது. எட்டில் அமர்ந்த சுக்கிரனால் இவருக்கு இப்படிபட்ட ஒரு வாழ்க்கை அமைந்தது.

ஏழாம் வீட்டு அதிபதி செவ்வாய் லாபஸ்தானத்தில் போய் அமர்வதால் துணைவர் இவருக்கு பிரச்சினையை ஏற்படுத்தவில்லை. குடும்பஸ்தானத்திற்க்கு அதிபதியாகும் செவ்வாய் வருவதால் குடும்பமும் நல்ல வளர்ச்சியை நோக்கி வருகிறது. சனி செவ்வாய் சேர்க்கை இருக்கிறது அதனால் பெரிய அளவில் பிரச்சினை ஏற்படவில்லை. 

இவருக்கு நல்ல பணவரவிற்க்கு சுக்கிரன் எட்டில் இருப்பது மட்டும் காரணம் இல்லை. சனி கேதுவை பார்க்கிறது அது மிகப்பெரிய யோகம் அல்லவா. அனைத்தையும் இருவரும் வாரி வழங்குவார்கள். அதேப்போல் வாரி வழங்கிக்கொண்டிருக்கிறது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

3 comments:

Anonymous said...

ஒரு நல்ல அனுபவ பாடத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி .
என் தரப்பிலிருந்து சிலவற்றைக் கூறலாமா ?

1.யோககாரகனான சனி லாப ஸ்தானத்தில் செவ்வாயுடன் . ஆனால் பகை வீட்டில் அமர்ந்து
இருப்பது யோகத்தை வேண்டுமானால் குறைத்துச் செய்யலாம் . ஆனால் லாப ஸ்தானத்தைக் கெடுக்கவில்லை போல் தெரிகிறது . மேலும் சனி செவ்வாய் இருவர் இடையேயான பாகை அளவும் அதிகமாக இருக்கலாம்.

2. ராகு தனக்குகந்த பதினோராம் பாவத்தில் பதினோராம் பாவாதிபதி ஆன சூரியன் வீட்டிலேயே இருப்பதும் ராகு தசை நடப்பில் உள்ளதும் அதிக செல்வ வளத்திற்குக்
காரணமாக அமைந்து இருக்கலாம்.

3.ஜாதகருக்கு களத்திரம் வழியிலும் [ செவ்வாய் நான்காம் பார்வையாக இரண்டாமிடமான விருச்சிகத்தைப் பார்ப்பது ] சகோதர வழியிலும் [ மூன்றாமாதியான குரு தன் பாவத்தையே ஐந்தாம் பார்வையாகப் பார்ப்பது ] நன்மையே.
மேலும் இவர் தன் விருப்பங்களை பிடிவாதமாக இருந்து
சாதித்துக் கொள்வார்.

rajeshsubbu said...

வணக்கம் ஸ்ரவாணி
நன்றாக கணித்து பலனை சொல்லியுள்ளீர்கள். தாங்கள் பலனை சொல்லி அடுத்தவர்களும் தெரிந்துக்கொள்ள வழி செய்தர்க்கு நன்றி.

தமிழ்செல்வன் said...

I Thank This Blog Admin "Rajesh" For This Example Birthchart ...and also thank to shravaani (ஸ்ரவாணி)
for sharing more informations...