Followers

Sunday, June 23, 2013

பேய் வீடு


வணக்கம் நண்பர்களே !
                    ஒருவருடைய ஜாதகத்தில் நான்காவது வீடு கெடும் பொழுது அந்த வீட்டில் எளிதாக பில்லி சூனியம் வைத்துவிடுவார்கள். இன்றைய காலத்தில் இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை ஆனால் இது பரவலாக பேசப்படும் விசயம்.

நான்காவது வீட்டில் ராகு கேது போன்ற கிரகங்கள் அமர்ந்தால் அந்த ஜாதகருடைய வீட்டில் இந்த மாதிரி பாதிப்பு ஏற்படும். அதனால் பாதிப்பை அந்த நபர்கள் பாதிக்கப்படுவார்கள். பேய் வீடு என்று சொல்வார்கள் அல்லவா. அதுபோல் வீடு இருக்கும். வீட்டிற்க்குள் நுழைந்தால் நிம்மதி கெட்டுவிடும். வீட்டிற்க்குள் அதிகமான இருக்கும் இருப்பதுபோல் மனதிற்க்குள் தோன்றும்.

ராகு, கேது மற்றும் சனி இருந்தால் இவ்வாறான பாதிப்பை அவர்களின் வீடுகள் பெறுகின்றன. தமிழ்நாட்டில் பில்லி சூனியம் என்பது எல்லாம் அந்தளவுக்கு வைக்கும் திறமை கிடையாது. மாவட்டத்திற்க்கு ஒருவர் இருந்தாலே மிகபெரிய விசயம்.அதனால் பயம்கொள்ள தேவையில்லை.ஒரு சில பகுதியில் இந்த மாதிரி வைக்கும் மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் வழியாக செய்யும் பொழுது பாதிப்பு ஏற்படுத்தும். 

உங்களின் ஜாதகத்தில் நான்காவது வீட்டில ராகு கேது சனி அமர்ந்திருந்தால் உங்களின் வீடுகளை தினமும் சுத்தம் செய்துககொண்டு இருக்கவேண்டும். ஏன் என்றால் சில வைப்பு முறைகளில் உங்களின் வீட்டில் பொருள்கள் வழியாக வைத்துவிடுவார்கள். நீங்கள் வீட்டை சுத்தம் செய்யும் பொழுது உங்களின் கண் பட்டு அதனை தூக்கி எறிந்துவிடுலாம்.

வீட்டில் கடல்நீரை கொண்டுவந்து மாததிற்க்கு ஒரு முறையாவது தெளித்துக்கொள்வதும் நல்லது. கோமியத்தை கொண்டும் தெளிக்கலாம். மஞ்சள் கலந்த தண்ணீரையும் தெளிக்கலாம். இவ்வாறு செய்யும் பொழுது உங்களின் வீட்டில் துர்சக்திகள் வாசம் செய்யாது. 

ஒரு சில கேரளாகாரர்கள் செய்தால் என்ன செய்தாலும் அதனை எடுக்கமுடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கும்.அவ்வாறு இருந்தால் நீங்கள் மாந்தீரிகம் தெரிந்தவர்களை கொண்டு அதனை எடுக்கவேண்டிய நிலை ஏற்படும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

Udhayaganesh said...

nice info.

rajeshsubbu said...

//* Udhayaganesh said...
nice info.
*//

தங்கள் வருகைக்கு நன்றி