Followers

Tuesday, June 25, 2013

முன்னேற்ற வாய்ப்பு


வணக்கம் நண்பர்களே !
                    நேற்று வியாபார நண்பர்களுக்கு என்று எழுதிய பதிவில் ஒரு நண்பர் கேள்வி கேட்டிருந்தார். அவர் கேள்வி வழியாக தெரியும் செய்தி ஒன்றுமே இல்லாதவன் எப்படி முன்னேற்றம் அடைவது என்பது போல் தான் இருந்தது.

அவர் வழியாக பல பேர்களின் மனதிலும் அந்த கேள்வி எழுந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஜாதக கதம்பம் என்பது பணக்காரர்களுக்கு என்று மட்டும் இல்லை. அனைவரையும் நல்ல வாழ்க்கையை வாழ வைக்க வழி செய்யும். உங்களி்டம் பணம் என்பது இல்லை என்று கவலைபட வேண்டாம். நான் பல பேர்களுக்கு வீட்டில் ஹோமம் செய்துக்கொடுத்திருக்கிறேன். அப்படி செய்யும்பொழுது அந்த வீட்டில் எந்த ஒரு வியாபாரம் செய்யாமல் இருந்திருப்பார்கள். இதனை செய்தவுடன் அவர்களுக்கு ஒரு வாய்ப்பை நமது அம்மன் ஏற்படுத்திக்கொடுக்கும் அதனை வைத்து அவர்கள் முன்னேற்றத்தை நோக்கி செல்வார்கள்.

இதனை செய்வதற்க்கும் கொஞ்சம் செலவு ஆகும். நான் இருப்பது சென்னையில் வேறு ஊர்களுக்கு சென்று வருவதற்க்கு என்று செலவு இருக்கிறது. ஹோம செலவு வேறு இருக்கிறது. இதனை நீங்கள் செய்யவேண்டும். இதற்காவது நீங்கள் சம்பாதித்துவிட்டு சொல்லுங்கள் நான் உங்களுக்கு செய்துக்கொடுக்கிறேன்.

இப்பொழுது புதிய நினைப்பு ஒன்று வரும். இதனை செய்வதால் நமக்கு புதிய வாய்ப்பு வருமா என்று நினைக்க தோன்றும். மனிதர்கள் தானே சந்தேகங்கள் வரத்தான் செய்யும். ஜாதக கதம்பம் வழியாக வந்து பல பேர் பயன்பெற்று இருக்கிறார்கள். அனைத்தையும் நம்பி இறங்கும்பொழுது உங்களுக்கு அம்மனின் அருள்கிடைத்து முன்னேற்றம் அடையமுடியும்.

உங்களுக்கு இது மட்டுமே என்னால் முடிந்த உதவி செய்யமுடியும். என்னிடமிருந்து பணஉதவி செய்ய தற்பொழுது முடியாத காரியமாக இருக்கின்றது. வருகின்ற பணம் அனைத்தும் ஆன்மீக காரியங்களுக்கு என்றே செலவு செய்யப்படுகிறது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: