Followers

Saturday, June 1, 2013

சோதிட அனுபவம்


வணக்கம் நண்பர்களே !
                     நமது ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் நாம் வாழ்கின்ற வாழ்க்கையை பிரதிப்பலிக்கிறது. நம்முடைய ஜாதகத்தில் கிரகங்கள் நல்ல நிலையில் அமரும்பொழுது அந்த ஜாதகரை உலகம் உற்றுப்பார்க்கிறது. கிரகங்கள் சரியில்லை என்றால் உலகம் அவரை கேவலமாக பார்க்கிறது.

இந்த ஜாதகரை எனக்கு நன்றாக தெரியும். இந்த ஜாதகருடைய லக்கினாதிபதி லக்கினத்திலேயே இருக்கிறார். லக்கினாதிபதிக்கு சனியின் பார்வை கிடைக்கிறது. லக்கினத்தில் லக்கினாதிபதி அமருவதால் இவருடைய சொந்த முயற்சியில் உயர்ந்து விடுவார் என்றால் அதுவும் நடக்கவில்லை. பிறந்த நாள் முதல் கிட்டதட்ட கடந்த வருடம் வரை மிகப்பெரிய போராட்டமாக தான் வாழ்க்கை இருந்தது. 

லக்கினாதிபதி ஒன்றாகவும் ராசி அதிபதி வேறு ஒன்றாக இருந்தாலும் பரவாயில்லை வேறு ஏதாவது ஒரு வழியில் முன்னேற்றம் அடைந்துவிடுவார் என்று பார்த்தால் அதற்க்கும் வழியில்லை. இரண்டும் ஒன்றாகவே அமைந்துவிட்டது. இரண்டு பக்கமும் அடி எழுவதற்க்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. 

இவருக்கும தான் ஜாதகம் சரியில்லை சரி இவருக்கு திருமணம் செய்துவிட்டால் அந்த பெண் வழியாக ஏதாவது முன்னேற்றம் இருக்கும் என்று பார்த்தால் இவருக்கு அதற்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. எவ்வளவோ முயன்றும் முடியாமல் போய்விட்டது.  

சரி அப்படி என்ன பிரச்சினை என்கிறீர்களா ஜாதகம் காலசர்ப்ப தோஷத்தில் மாட்டிக்கொண்டுள்ளது. அனைத்து கிரகங்களும் ராகு கேதுக்குள் மாட்டிக்கொண்டுள்ளது.

அதனால் தான் இவர் அந்த பாடுபட்டார். மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் தான் இருந்தார்.  கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு அனைத்து சரியாகிவிட்டது. சொந்தமாக தொழில் தொடங்கியுள்ளார். ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இப்பொழுது தொழில் நன்றாக சென்றுக்கொண்டுள்ளது. என்னுடைய கணிப்பில் மிக உயர்ந்த இடத்திற்க்கு செல்வார் என்று தெரிகிறது. 

ஒருவருக்கு இப்படிப்பட்ட கிரகநிலை அமையும்பொழுது 35 வயதிற்க்கு பிறகு மிக உயர்ந்த நிலைக்கு செல்வார்கள் அதே போல் தான் இவருக்கும் அமைந்தது. 30 வயது வரை இவருக்கு தான் என்ன செய்கிறோம் என்று கூட தெரியவில்லை. 30 வயதுக்கு பிறகு ஒரளவு நன்றாக இருந்தது. கடந்த ஒரு வருடத்திற்க்கு முன்பு நல்ல நிலைக்கு வந்தார்.

காலசர்ப்ப தோஷத்திற்க்கு நாம் பல பரிகாரங்களை சொன்னாலும் அதுவாகவே தான் நடைபெறுகிறது. காலசர்ப்ப தோஷம் என்பது ஒருவருக்கு மோசமான நிலையை ஏற்படுத்தி பிறகு ஒரு நல்ல வளர்ச்சியை தரும் என்பது இவரை பார்த்து தான் நான் தெரிந்துக்கொண்டேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: