Followers

Wednesday, June 26, 2013

வியாபார வெற்றிபடிகள்


வணக்கம் நண்பர்களே!
                    நமது ஜாதக கதம்பம் வழியாக வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கு என்று உதவி செய்துக்கொண்டு வருவது அனைவரும் தெரிந்ததே. இதனைப்பற்றி பல நண்பர்கள் என்னிடம் பல கேள்வியை கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். 

உங்களுக்கு இந்த உதவியை செய்து உங்களின் ஜாதகத்தை மீறிய ஒரு செயல் தான் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ஜாதகத்தை மீறி செய்வதற்க்கு அம்மன் துணை செய்கிறது. ஜாதகம் என்றால் கர்மா தான் வேறு ஒன்றும் இல்லை. உங்களின் கர்மாவை மீறி நடத்தப்படுகின்ற செயல். நமது அம்மனின் செயலால் வெற்றியை உங்களுக்கு தருகிறது.

கர்மாவை மீறுவதால் ஒன்றும் பிரச்சினை இல்லை. அம்மன் செய்வதால் நமக்கு பிரச்சினை என்பது இல்லை. இதனை நூறு சதவீதம் வெற்றியாக கொடுக்கமுடியும். உங்களின் நடவடிக்கையை பார்த்து தான் இதனை செய்யமுடியும். நான் முதலில் யாரிடமும் முன்பணம் வாங்காமல் செய்துக்கொண்டு இருப்பதால் அனைத்தும் பாதுகாப்பான முறையில் உங்களுக்கு செய்யவேண்டியதாக உள்ளது. 

முதலில் ஏற்படும் தோல்வியை கண்டு அஞ்சவேண்டாம். தொழிலில் செய்யும் அனைவருக்கும் அம்மன் வழியாக நல்லது செய்ய முடியும்.கொஞ்ச காலம் பொறுமையாக இருக்க வேண்டும்.அம்மனை நினைத்துக்கொண்டு யார் பின்னாடி விடாமல் வருகிறார்களோ அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது என்பதை மனதில் வையுங்கள். அம்மனின் அருள் மூலம் மிகபெரிய உதவி உங்களுக்கு இருக்கிறது.

முதலில் ஒரு சிலருக்கு தோல்வி ஏற்படுவதற்க்கு காரணம் உங்களுக்கு எந்தவித ஆன்மீகபூஜைகளும் செய்யாமல் வியாபாரத்தை நடத்த நாங்கள் செய்வதால் அப்படி நடைபெறும். படிப்படியாக வளர்ச்சியை காணும் பொழுது உங்களை தன் கண்ணில் வைத்து காப்பாற்றுவது போல் காப்பாற்றிவிடுவேன். வியாபார வெற்றிபடிகளில் நீங்கள் கால்பதிக்கும் காலத்தை எதிர்நோக்கி செல்ல அம்மனின் அருள் உங்களுக்கு துணை புரியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: