Followers

Saturday, June 29, 2013

காயத்ரி மந்திரங்களை செய்பவர்களுக்கு


வணக்கம் நண்பர்களே!

காயத்ரி மந்திரங்களை செய்பவர்கள் ஒரு போதும் தீய எண்ணங்களை மனதில் வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை உரு ஏற்றாதீர்கள். எனக்கு தீங்கு செய்பவர்களை கெடுக்க வேண்டும் அதனால் காயத்ரி மந்திரங்களை பயிற்சி செய்கிறேன் என்று மனதில் நினைத்தால் ஒரு போதும் மந்திரங்கள் சித்தி நடைபெறாது.

காயத்ரி நன்மைக்கும் மட்டுமே துணை செய்யும் தீமைக்கு துணை செய்யாது. உங்களின் மனதில் அடுத்தவர்களுக்கு எப்பொழுது தீங்கு நினைக்கிறீர்களோ அப்பொழுதே உங்களின் விட்டு வெளியில் போய்விடும்.

என்னிடம் ஒருவர் கேட்டார் சார் இதனை வைத்து மாந்தீரிகம் செய்யலாமா என்று கேட்டார். அப்பொழுது தான் நினைத்தேன் ஏண்டா நான் எல்லோரும் நல்லபடியாக இருக்கதானே இவ்வளவு கஷ்டப்பட்டு அனைத்தும் எழுதிக்கொண்டிருக்கிறோம். இவர்கள் என்னடா என்றால் அடுத்தவர்களை கெடுப்பதற்க்கு கேள்விக்கொண்டுருகிறார் என்று நினைத்தேன். 

மனிதன் வாழும் வாழ்க்கை என்பது கடவுள் கொடுததது அதனை நாம் கெடுக்க நினைக்க கூடாது. ஒரு மனிதனை நாம் உயர்த்த வேண்டுமே தவிர அவனை பிடித்து கீழே தள்ளிவிடகூடாது. ஒரு உயிரை உருவாக்க நமக்கு தகுதி இல்லை எனும்பொழுது அழிக்க நினைக்ககூடாது. மாந்தீரிகத்தொழில் செய்பவர்களின் நிலை என்ன ஆகும் என்பதை நீங்கள் கண்டிப்பாக பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். 

நீங்கள் காயத்ரி மந்திரங்கள் செய்யும்பொழுது நல்லதை நினைத்துக்கொண்டு செய்யுங்கள். நாம் நல்லபடியாக வாழ்வதற்க்கு ஆண்டவன் ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறார் என்பதை மனதில் நினைத்துக்கொண்டு செய்யும்பொழுது நல்ல வாழக்கையை காயத்ரி தேவி ஏற்படுத்திக்கொடுக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: