Followers

Sunday, June 30, 2013

குருவை தேடி


வணக்கம் நண்பர்களே !
                    பல பேர்கள் குருவை தேடி அலைகிறார்கள் என்று தான் நினைக்கிறேன். ஏன் என்றால் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் அவர்கள் கேட்கும் கேள்வியை வைத்தே தெரிந்துக்கொள்ள முடிகிறது.

ஒரு சிலர் இவர் தான் குரு என்பதை எவ்வாறு அடையாளம் காண்பது என்றும் கேட்கிறார்கள். நாங்கள் ஒரு சிலரை பார்க்கிறோம் அவரை எப்படி நாங்கள் குருவாக ஏற்றுக்கொள்வது என்றும் கேட்கிறார்கள். அவர்களுக்கு பதில் எக்காரணம் கொண்டும் அவர்கள் உங்களை தேடி வருவதில்லை. நீங்கள் தான் அவர்களை தேடி போகிறீர்கள். அவர்கள் நல்லவராக இருப்பாரா கெட்டவராக இருப்பாரா என்று நாம் தெரிந்துக்கொள்ள தேவையில்லை.

நம்மிடம் எதுவும் எதிர்பார்க்காமல் அவர்கள் இருக்கிறார்கள். அவர்களை போய் நாம் தேடி செல்வதால் அவர்களை சோதனை செய்ய நமக்கு தகுதி இல்லை.நதி மூலம் ரிஷி மூலத்தை ஆராய்ந்து பார்க்ககூடாது என்பார்கள். அதனையே உங்களுக்கும் சொல்லுகிறேன். அவர்களை ஆராய்ச்சி செய்வதை விட்டுவிட்டு அவர்களிடம் கிடைத்தால் போதும் என்று நினையுங்கள்

அவர்கள் சொல்லுவதை உங்களின் மனம் ஏற்றுக்கொண்டால் அவர்களை பின்தொடருங்கள். அவர்கள் சொல்லுவதை அபபடியே பின்பற்றும் பொழுது உங்களுக்கு மேன்மை கிடைக்கும்.ஒரு சிலர் பல குரு பின்தொடர்கிறார்கள் அதுவும் தவறு. குழப்பம் மட்டுமே மிஞ்சும். 

ஒரு குருவை மட்டுமே நீங்கள் பின்பற்ற வேண்டும். ஒரு குருவை பின்பற்றும் பொழுது மட்டுமே அவர்கள் உங்களை காப்பாற்றுவார்கள்.மானசீகமாக உங்களுக்கு சொல்லிதருவார். அவசர காலத்தில் அவர் உங்களை காப்பாற்ற முடியும்.
நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: