Followers

Monday, June 24, 2013

குருவே சரணம்


வணக்கம் நண்பர்களே!
                        பல நண்பர்கள் உங்களின் குருவை காட்டுங்கள் என்று சொல்லுகிறார்கள். நாங்களும் அவர்களோடு பழகிக்கொண்டு எங்களின் கர்மாவை தீர்த்துக்கொள்கிறோம் என்றும் சொல்லுகிறார்கள். உங்களிடம் அவரை காட்டுவதில் எனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. 

நான் அவரைப்பற்றி எதுவும் எழுதகூட கூடாது என்று சொல்வார். ஏன் என்றால் இது எல்லாம் தேவையற்ற ஒன்று என்றும் சொல்லுவார். கலியுகத்தில் எதனை செய்தாலும் அது தவறாக புரிந்துக்கொள்ளகூடும் என்று சொல்லுவார். நமக்கு கிடைத்தை வைத்துக்கொண்டு அதனை அனுபவித்து மேலே செல்ல வழி என்னவோ அதனை மட்டும் செய்யவேண்டும் என்று சொல்லுவார். எப்பேர்பட்ட சக்தியை அடைந்தாலும் அதனை வெளிக்காட்டிக்கொள்ள கூடாது என்றும் சொல்லுவார். 

இப்படி அவர் இருப்பதால் தான் என்னவோ அப்பேர்பட்ட சக்தியுடையவராக இருக்கிறார். அனைத்து சக்தியையும் நான் அடைந்தால் நான் கூட சும்மா இருக்கமாட்டேன் அதனை வைத்து என்ன செய்யலாம் என்று அதனை பயன்படுத்தி பார்த்துக்கொண்டு இருப்பேன். நம்ம ஆளுங்களா இருந்தால் சொல்லிக்கொள்ள தேவையில்லை. நாட்டையை உண்டு இல்லை என்று செய்துவிடுவார்கள். 

நாம் எல்லாம் இத்தனை வருடம் ஆன்மீக ஆராய்ச்சி செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டு திரிவோம். அவர் பிறந்ததில் இருந்து தன் வாழ்க்கையை ஆன்மீகத்திற்க்காக அர்ப்பணித்தவர். வெளியில் தன்னை காட்டிக்கொள்வது கிடையாது. அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருப்பார். ஒருத்தர் ஒரு மொழிக்கு மேல் கற்றால் என்ன செய்வார்கள் என்று உங்களுக்கு நன்றாக தெரியும். ஊரே அல்லோல்பட்டுவிடும். நமது குரு நன்றாக படித்தவர். பத்து மொழிகளுக்கு மேல் பேசுவார். அதனையும் வெளியில் சொல்வது கிடையாது.

அனைத்தையும் பார்த்தவன் வெளியில் காட்டிக்கொள்ளமாட்டான். குறையோடு இருப்பவன் தான் வெளியில் ஏதாவது சொல்லி தன்னையும் குழப்பிக்கொண்டு அடுத்தவனையும் குழப்பிவிட்டுவிடுவான்.எனக்கு பல சாமியார்களோடு பழக்கம் இருக்கிறது. நான் அவர்களோடு போகும் பொழுது என்னை சந்திக்கும் நண்பர்கள் இவர் தான் உன்னோடு குருவா என்று கேட்பார்கள் நான் இல்லை என்று சொல்லுவேன். நான் குருவோடு செல்லும்பொழுது ஒருவரும் என்னை சந்தித்ததுகிடையாது. அவரும் நானும் சும்மா சுற்றிக்கொண்டு திரிவோம் யாரும் கேட்ககூட மாட்டார்கள். அது ஏன் என்று தெரியவில்லை.

எனது நெருங்கிய நண்பர்களுக்கு சில பேருக்கு அவரை தெரியும். அவர்களின் வீடுகளுக்கு அடிக்கடி அழைத்துக்கொண்டு செல்வார்கள். அவரும் சென்று வருவார். நீங்கள் ஒரு ஆன்மீகவாதியாக இருந்தால் நன்றாக அவரை கண்டுக்கொள்ளலாம். அவரிடம் சில மணித்துளிகள் இருந்தாலே போதும். அவருடன் நீங்கள் அப்படி இருந்துவிடலாம் என தோன்றும். அவரின் ஆத்மா அப்படி ஈர்க்கும்.

நேரம் வரும்பொழுது நீங்களும் சந்திக்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: