Followers

Friday, June 7, 2013

குருவின் அவசியம்


வணக்கம் நண்பர்களே!
                    நமது நண்பர்கள் அனைவரும் எப்படியாவது ஆன்மீகவாழ்க்கையில் முன்னேற்றம் அடையவேண்டும் என்று அதிகமாக விரும்புகிறார்கள். நல்லது தான் அனைவரும் முன்னேற்றத்தை அடையவேண்டும் என்று நானும் விரும்புகிறேன். அதற்கான வழியையும் என்னிடம் கேட்கிறார்கள். அவர்களுக்கு சொல்லிக்கொள்வது ஒரு குருவை நீங்கள் தேர்ந்தெடுக்குக்கொள்ளவேண்டும் என்று பல பதிவுகளில் நான் சொல்லியுள்ளேன்.

நமது மனதில் பல கேள்விகள் எழும். நாம் குருவை தேடி அடைந்துவிட்டால் நமக்கு கேள்விகள் மனதில் எழுவது கிடையாது. மனது அமைதி அடைந்துவிடும். குரு அமையவில்லை என்றால் மனது அமைதி அடையாது. அனைத்தையும் கற்க வேண்டும் என்றால் அதற்கு ஆசான் தேவை. ஆன்மீகத்திற்க்கு குரு என்பவர் முக்கியம். குரு இல்லை என்றால் ஆன்மீகவாழ்வில் நாம் முன்னேற முடியாது. நாம் தேடி கண்டுபிடித்த குருவும் அனைத்திலும் மிக உயர்ந்தவராக இருக்க வேண்டும்.சிறந்த ஞானத்தை அடைந்தவராக இருக்கவேண்டும்.

இன்றைய காலக்கட்டத்தில் அனைத்தையும் புத்தகத்தில் எழுதிவைத்துள்ளார்கள். புத்தக அறிவை வைத்துக்கொண்டு நாம் ஒன்றும் செய்யமுடியாது. எனக்கு குரு கிடைக்கும் முன்பு ஏகாப்பட்ட புத்தகத்தை வைத்துக்கொண்டு அதில் சொல்லியபடியே செய்து பார்த்தேன். ஒன்றும் அடையவில்லை. அனைத்திலும் தோல்வியை தான் சந்தித்தேன். எப்படி எப்படியோ செய்தும் ஒன்றும் வெற்றி பெறவில்லை. 

இன்றைக்கு ஏகாப்பட்ட சித்தர்களின் புத்தகம் கிடைக்கிறது. அந்த புத்தகத்தில் உள்ளவற்றை எல்லாம் செய்து பார்த்தால் ஒன்றும் வெற்றி இல்லை. ஒரு வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் வேறு ஒன்றை புரிந்துக்கொண்டு செய்தால் கண்டிப்பாக அது தோல்வியை தான் தருகிறது. குருவை அடைந்தபிறகு தோல்வி என்பது கிடையாது என்ற நிலை உருவாகும். நீங்கள் செய்யவேண்டியது அனைத்தும் நல்ல குருவை கண்டுபிடிப்பது மட்டுமே.


நண்பர்களே பாண்டிச்சேரிக்கு நாளை செல்கிறேன். பாண்டிச்சேரியில் இருக்கும் நமது நண்பர்களின் அழைப்பின் பேரில் அங்கு செல்கிறேன். பாண்டிச்சேரியில் இருக்கும் நண்பர்கள் என்னை சந்திக்கவேண்டும் என்றால் என்னை தொடர்புக்கொள்ளுங்கள். பாண்டிச்சேரியில் நண்பர்களை சந்தித்து முடித்த பிறகு திருவக்கரை அம்மனை தரிசனம் செய்ய செல்கிறேன். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: