Followers

Wednesday, July 31, 2013

காலசர்ப்பதோஷம்


வணக்கம் நண்பர்களே!
                             காலசர்ப்பதோஷம் இதனைப்பற்றி பல பேர் பல விதமாக எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். ராகு கேதுவுக்குள் அனைத்து கிரகங்களும் மாட்டிக்கொண்டுவிட்டால் அது காலசர்ப்பதோஷம் எனப்படுகிறது. இரு கிரகங்களுக்குள் சந்திரன் மட்டும் வெளியில் நின்று பிறகு உள்ள கிரகங்கள் உள்ளே மாட்டினாலும் அது காலசர்ப்பதோஷம் எனப்படுகிறது.

காலசர்ப்பதோஷம் ஒரு ஜாதகருக்கு ஏற்படும்பொழுது அவர் முப்பத்திரண்டு வயது வரை ஒன்றும் செய்யமுடியாது என்றும் சொல்லுகிறார்கள். ஒரு சிலர் முப்பத்தி ஆறு வயது வரை வேலை செய்யது என்று சொல்லுகிறார்கள். இது தவறான ஒன்று.

ஒருவன் பிறந்தால் அவன் உயிர் வாழவேண்டும். அவன் தினந்தோறும் சாப்பிடவேண்டும். அவன் சாப்பிடும் சாப்பாடு எல்லாம் செரிக்க வேண்டும். இளமையில் கல்விகற்க வேண்டும் இப்படி ஏகாப்பட்ட வேலைகளை அந்தந்த வீடுகள் வேலை செய்யவில்லை என்றால் ஒருவன் உயிர் வாழமுடியாது.அனைத்து கிரகங்களும் வேலை செய்யும். பிறகு காலசர்ப்பதோஷத்தில் என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா.

இரண்டு விஷத்திற்க்கு இடையில் எல்லாம் கிரகங்களும் வேலை செய்ய வேண்டியுள்ளதால் அனைத்து கிரகங்களும் தன்னுடைய சுயதன்மையை இழக்கும். காலசர்ப்பதோஷம் உள்ளவர்கள் பார்த்தால் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பார்கள். அனைத்து செயல்களிலும் வித்தியாசமாக செய்வார்கள். ஊரோடு வாழமால் ஒதுங்கி வாழுவார்கள். தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அனைத்து வேலையும் செய்வார்கள்.அவர்களின் செயல்பாடு ஒரு வித பைத்தியம்போல் இருக்கும். 

நான் பார்த்த ஜாதகங்களில் 30 வயதுக்கு மேல் தெளிவு ஏற்படுகிறது. 35 வயதுக்கு மேல் ஒரு நல்ல வாழ்க்கையை அவர்கள் வாழ்கிறார்கள். பொதுவாக இளமையில் ஒருவர் நன்றாக வாழ்ந்தால் அவர் 35 வயதுக்கு மேல் நன்றாக வாழ்வதில்லை. இளமையில் வறுமையில் வாழ்ந்தால் அவர்கள் 35 வயதுக்கு மேல் நன்றாக வாழ்கிறார்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, July 30, 2013

குலதெய்வ சக்தி


வணக்கம் நண்பர்களே!
                     சில அனுபவங்களை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன். அந்த அனுபவங்கள் உங்களுக்கு நன்றாக பயன்படும் என்ற காரணத்தால் இதனை பகிர்ந்துக்கொள்கிறேன். அனைத்தும் உண்மையான தகவல்.

சேலத்தில் எனது நண்பர் வழியாக ஒருவர் எனக்கு பழக்கம். ஒரு அம்மா மட்டுமே என்னுடன் தொடர்பில் இருந்துக்கொண்டு வந்தார்கள். அந்த அம்மா நல்ல பக்திமான். அவருக்கு குலதெய்வத்தின் அருள் இல்லை என்று கண்டுபிடித்தேன். அவர்களுக்கு ஏகாப்பட்ட கஷ்டம் இருந்தது. குலதெய்வம் அருள் இல்லை அதனால் தான் இவர்களுக்கு கஷ்டம் ஏற்படுகிறது. குலதெய்வத்தை எடு்த்துக்கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்து ஒரு நாள் தேதியையும் கொடுத்து அதற்கான வழியை சொல்லி அனுப்பினேன்.

நான் அங்கு செல்லவில்லை. நாம் இருந்த இடத்தில் இருந்தே அனைத்தையும் செய்வதுவிடுவதால் நீங்கள் கோவிலுக்கு செல்லும் நேரத்தில் எனக்கு போன் செய்து விட்டு செல்லுங்கள் என்று சொல்லிருந்தேன். அவர்களின் வீட்டில் அப்படியே செய்தார்கள். பூஜையை முடித்துவிட்டு வீட்டிற்க்கு சென்றுவிட்டார்கள். அன்று இரவு பார்த்தால் அவர்களின் குடும்பத்தில் ஏன் குலதெய்வத்தின் அருள் இல்லாமல் இருக்கிறது என்று தெரிகிறது. 

அவர்களின் குடும்பத்தில் முன்னோர்களில் ஒருவர் ஒரு பெண்ணிற்க்கு தீங்கு செய்திருக்கிறார். அபாண்டமாக பலி சுமத்தியுள்ளார். அதற்கு அந்த பெண் மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளது.அந்த பெண்ணின் ஆத்மா அவ்வளவு கோரமாக இருக்கிறது. அவர்களின் குலதெய்வத்தையே அது கட்டுபடுத்திவிட்டது அதனால் அவர்களின் குடும்பம் அழிவை நோக்கி சென்று்க்கொண்டுள்ளது. அதனை தடுப்பதற்க்கு உடனே அதற்கு தேவையானவற்றை செய்துவிட்டு அவர்களின் குடும்பத்திற்க்கு குலதெய்வத்தின் அருளை பெற்று தந்தேன். 

இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் ஒரு ஆத்மாவிற்க்கு நாம் கெடுதல் செய்தால் அது நம்மை தாக்கும். அதற்கு ஒரு வழி தான் குலதெய்வத்தை தடுப்பது. ஏன் ஆத்மா குலதெய்வத்தை தடுக்கிறது என்றால்  குலதெய்வத்தின் அருள் இருந்தால் இவர்களை நாம் ஒன்றும் செய்யமுடியாது என்று எண்ணிக்கொண்டு குலதெய்வத்தை முடக்குகிறது.

அந்த ஆத்மாவை குலதெயவத்தால் தடுக்கமுடியாது என்று கேட்கதோன்றும். ஒரு ஆத்மா தன்னை பலி வாங்கியவனை பலி வாங்கவேண்டும் என்று நினைக்கும்பொழுது குலதெய்வம் விலகிவிடுகிறது. இவர்களும் ஒழுங்காக குலதெய்வ வழிபாடு செய்யவில்லை. அதனால் அவர்களுக்கு இப்பேர்ப்பட்ட பிரச்சினையை ஏற்படு்த்தியது.

அந்த ஆத்மாவிற்க்கு தேவையான விசயங்களை கொடுத்து அந்த ஆத்மாவை திருப்திபடுத்தி அதன் பிறகு குலதெய்வ அருள் கிடைக்க வழிசெய்யவேண்டும். இது எல்லாம் நான் அங்கு சென்று செய்வதில்லை. என்னுடைய இடத்தில் இருந்தே அதனை செய்துமுடித்துவிடுவேன். 

ஒவ்வொரு குலதெய்வத்திடம் நாம் செல்லும்பொழுது ஒவ்வொரு விதமான அனுபவம் ஏற்படுகிறது. மனிதன் செய்யும் ஒரு சிறு தவறு அவனை மட்டும் இல்லாமல் அவனது வம்சத்தையே பலிவாங்குகிறது.நமக்கு அனைத்திலும் காப்பது நமது குலதெய்வம் மட்டுமே.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அன்னையின் அருள்


வணக்கம் நண்பர்களே!
                     பிறரின் வலியில் நாம் சந்தோஷப்பட்டால் அவன் மனிதனே அல்ல. அப்படிப்பட்ட சந்தோஷம் தேவையில்லை என்று நினைப்பவன் தான் ஆனால் நம்மிடம் ஒன்றுமே இல்லாத நேரத்தில் நம்மை தாக்குவது என்பது நம்மை அழிப்பதற்க்கு சமம் என்று அர்த்தம். அந்த தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வது அவசியமான ஒன்றாகதான் இருக்கும்.

அன்னையின் அருள் பகுதியில் ஒரு கோடிஸ்வரரைப்பற்றி சொன்னேன் அல்லவா. இரண்டு வாரங்களுக்கு முன்பு என்னை வந்து சந்தித்தார். உங்களிடம் இதனைப்பற்றி சொல்லவேண்டும் என்று நினைத்தேன். வேலை காரணமாக சொல்லவில்லை. அவரிடம் இனிமேல் ஒவ்வொரு மனிதனும் தன்னைபோல் உள்ளவன் தான் மனிதனை முதலில் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். அடுத்தது எல்லாம் உங்களை தேடிவரும் என்று சொன்னேன். 

ஒவ்வொரு மனிதனும் அற்புதமானவர்கள் அதனை புரிந்துக்கொள்ளவேண்டும். கடவுள் மனிதனை படைக்கும்பொழுது ஒவ்வொரு தனித்தன்மையோடு படைக்கிறார். நாம் என்ன செய்கிறோம் அந்த தனித்தன்மையை பயன்படுத்திக்கொண்டு தான் மட்டும் உயர்ந்தவன் என்று நினைத்துக்கொண்டு கொஞ்சம் பணத்தை பார்த்தவுடன் ஆட ஆரம்பித்துவிடுகிறோம். அந்த ஆட்டத்தை முடித்துவைக்க ஆண்டவன் சாட்டையை எடுக்கிறான். 

தன்னால் ஒரு கோடி சம்பாதிக்கமுடியும் எனும்பொழுது பிறரும் அந்த பணத்தை சம்பாதிக்கமுடியும் என்று எண்ணவேண்டும்.அனைவரும் மனிதர்கள் என்று எண்ணம் இருந்தால் மட்டுமே உங்களுக்குள் ஆன்மீகம் வரும்.அடுத்தவர்களை என்று உதாசீனப்படுத்தினர்களோ அன்றே உங்களிடம் ஆன்மீகம் வராமல் போய்விடும்.

அன்னையின் அருளை படிக்கும்பொழுது இது எல்லாம் நடைபெற்று இருக்குமா என்று சந்தேகம் வருவது இயற்கை ஆனால் உண்மையில் நடைபெற்றது.தன்னை நம்பியவனை என்றும் காப்பாற்றுவள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, July 29, 2013

அவசியம் படியுங்கள்


வணக்கம் நண்பர்களே!
                     காயத்ரி மந்திர பயிற்சி செய்பவர்களுக்கு என்று இதனை எழுதவேண்டும் நினைத்து இருந்தேன் ஆனால் அதற்கு இன்று தான் நேரம் வாய்த்தது. இது உங்களுக்கு நன்றாக பயன்படும் என்று நினைக்கிறேன்.

காயத்ரி மந்திரம் என்பது நான் கண்டுபிடித்த மந்திரம் கிடையாது. நம் முன்னோர்கள் நமது வைத்துவிட்டு சென்ற மிகப்பெரிய சொத்து. ஒரு சராசரி மனிதன் ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடையவேண்டும் என்று வைத்துவிட்டு சென்றனர். இதனை செய்கிறவர்களுக்கு கர்மவினை குறையும். உங்களின் கர்மாவை பொறுத்து இது வேலை செய்ய தொடங்கும். எந்த மந்திரமும் உரு ஏற்றி அடுத்த நாள் தெய்வம் வந்து முன்னால் நிற்க்கும் என்றால் எப்படி வரும். கலியுகத்தில் தெய்வம் வருவது என்பது அவ்வளவு எளிதல்ல. உங்களின் கஷ்டத்தை இதில் போடவேண்டும் அப்பொழுது மட்டுமே இது சாத்தியப்படும்.

பல பேர் ஆராய்ச்சி நோக்கத்தோடு இதனை செய்வது தெரியவந்தது. முதலில் ஆன்மீகத்தில் ஆராய்ச்சி செய்தால் ஒன்றுமே கிடைக்காது. நம்பி செய்யவேண்டும். மேல்நாட்டுகாரர்கள் மட்டுமே ஆராய்ச்சி செய்துக்கொண்டு இருப்பார்கள். ஆராய்ச்சி என்று வந்துவிட்டால் தர்க்கம் ஏற்பட்டுவிடும். தர்க்கம் செய்வது ஆன்மீகத்திற்க்கு ஏற்றது அல்ல. ஆன்மீகத்தை பொறுத்தவரை உணர்வது மட்டுமே.

நான் உணர்ந்து இதனை எல்லாம் சொல்லுவதால் மட்டுமே உங்களுக்கு இந்த பதிவுகள் பிடிக்கும். உணராமல் சொன்னேன் என்றால் உங்களுக்கு ஆத்மா திருப்தி கிடைக்காது. பல தளங்களை நானும் ஒரு சில நேரங்களில் படித்து பார்ப்பேன். அதில் ஒரு சில ஆன்மீகத்தை எழுதுபவர்களை பார்த்து நான் நினைப்பது உண்டு இவர்கள் எல்லாம் எப்படி ஆன்மீகத்தை அடுத்தவர்களுக்கு போதிக்கிறார்கள் என்று நினைத்தது உண்டு.

ஆன்மீகத்தில் இத்தனை வருடம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன். எனது ஆராய்ச்சின் பயனாக பல்லாயிரக்கணக்கானவர்கள் நன்றாக இருக்கிறார்கள் என்று எல்லாம் போடுகிறார்கள். ஆன்மீகத்தை என்றைக்கும் ஆராய்ச்சி செய்ய முடியாது.உணர மட்டுமே முடியும்.குரு அவர்கள் தான் உணர்ந்ததை தன்னுடைய சிஷ்யனுக்கு உணர்த்திக்காட்டுகிறார்.  ஆன்மீகத்தில் இருப்பவர்கள் உணர்ந்து கொண்டிருப்பார்கள். நீங்களும் உணரவேண்டும். அதற்கு மந்திரப்பயிற்சி செய்யும்பொழுது ஆராய்ச்சி செய்யாமல் செய்யுங்கள்.

ஆன்மீகத்தில் கேள்விகேட்காமல் அடுத்தவர்களுக்கு இது நடைபெறும்பொழுது நமக்கு ஏன் நடைபெறாது என்ற எண்ணம் இருக்கவேண்டும்.ஆராய்ச்சி செய்யாமல் மந்திர உருவை ஏற்ற பாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

குலதெய்வத்தின் அவசியம்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு நாள் மட்டும் கோயம்புத்தூரில் இருந்து விட்டு இன்று சென்னை வந்துவிட்டேன். நேற்று கோயம்புத்தூரில் சந்தித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது குரு மற்றும் அம்மனின் ஆசி கண்டிப்பாக கிடைத்திருக்கும். நான் எந்த ஊருக்கு சென்றாலும் நமது நண்பர்களின் வீடுகளில் சென்று சந்திப்பது எனது பழக்கம். அதற்கு காரணம் ஏன் என்றால் நான் பழக்குவது சாமியார்கள் அவர்களின் ஆசி எனது வழியாக அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற காரணத்தால் நான் வீட்டுக்கு செலகிறேன்.

இன்று ஒவ்வொரு வீடுகளும் நல்ல முறையில் இருப்பதில்லை அதற்கு பல காரணங்கள் இருக்கிறது. துர்சக்திகளின் ஆதிக்கத்தில் வீடுகள் இருப்பதால் அவ்வாறு இருக்கின்றன. பல பேர் வீட்டில் குலதெய்வத்தின் அருள் இருப்பதில்லை. அவர்கள் நல்ல முறையில் வழிபாடு செய்கிறார்கள் ஆனால் இருப்பதில்லை. 

என்ன காரணம் குலதெய்வத்தின் அருளை அவர்களின் பங்காளிகள் நயவஞ்சகமாக எடுத்துவிடுகிறார்கள். மாந்தீரிகனை வைத்து எடுக்கும்பொழுது அவர்களின் குலதெய்வத்தின் முழுமையான சக்தியை எடுத்துவிடுகிறார்கள். அனைவரும் பயன்படவேண்டும் அதோடு நாமும் பயன்படவேண்டும் என்று நினைப்பதில்லை. முழுமையான சக்தியை அவர்களின் பக்கம் திருப்பிவிடுகிறார்கள். இது தவறு. நான் பல பேர்க்கு குலதெய்வதின் அருளை எடுத்துக்கொடுத்து இருக்கிறேன். இவர்களுக்கு அந்த அருள் கிடைக்கும்படி செய்வனே தவிர மொத்தமாக எடுத்துவிடமாட்டேன். அனைவரும் நன்றாக இருக்கும்பொழுது நாமும் நன்றாக இருப்போம். 

குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் நீங்கள் எப்பேர்பட்ட மகானை வைத்து பூஜை செய்தாலும் ஒரு புண்ணியமும் கிடைக்காது. நான் பலபேர்களுக்கு ஹோமம் செய்து கொடுக்கும்பொழுது கூட அவர்களின் குலதெய்வம் அவர்களுக்கு நன்றாக செய்து தரும்படி தான் செய்வேன். நமது அம்மன் வழியாக அந்த தெய்வம் செயல்பட்டு அவர்களுக்கு நல்லது செய்யும்.

என்னால் முடிந்தளவுக்கு பல வீடுகளில் குலதெய்வத்தை எடுத்து நல்லது செய்துக்கொடுத்திருக்கிறேன். உங்களுக்கும் இந்த மாதிரி செய்ய வேண்டும் என்றால் தொடர்புக்கொள்ளுங்கள். செலவு என்பது எல்லாம் குறைந்தளவு தான் வரும். நான் யாரிடமும் இவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்பதில்லை.  பணம் இருப்பவர்கள் நன்றாக கொடுக்கலாம். பணம் இல்லாதவர்கள் இருப்பதை கொடுக்கலாம். நீங்கள் கொடுக்கும் பணம் நல்லவழிகளுக்கு செலவு செய்யப்படுகிறது. அதனைப்பற்றி வெளியில் சொல்லவில்லை. கண்டிப்பாக நல்லவழிக்கு செலவு செய்யப்படுகிறது என்பது எனது நெருங்கிய வட்டத்திற்க்கு மட்டும் தெரிந்த ஒன்று.

ஆத்மசுத்தி மட்டும் பணம் செலவு அதிகம் ஆகும் அது ஏன் என்றால் அதிக ரிஸ்க் உள்ள விசயம் அதனால் அந்த பணம் கேட்கபடும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, July 27, 2013

தசாநாதன் பகுதி 10


வணக்கம் நண்பர்களே!
                    தசாநாதன் பகுதியில் ஒரு உதாரண ஜாதகத்தைப்பற்றி பார்க்கலாம். இந்த ஜாதகம் ஒரு ஆண் ஜாதகருடையது.

பொதுவாக தசாநாதனுக்கு 3 6 8 12 ஆகிய ஸ்தானங்களில் இருக்கும் புத்திகளின் காலங்களில் அந்த ஜாதகருக்கு கெடுதலை தருகிறது. தசாநாதனை லக்கினம்போல் எடுத்துக்கொண்டு அதற்கு 3 6 8 12 ஆகிய வீடுகளில் உள்ள கிரகங்களின் புத்திகளில் கெடுதல் பலனை தருகிறது. அனைத்து ஜாதகருக்கும் கெடுதலை தரும் என்று சொல்லிவிடமுடியாது. ஒரு சிலருக்கு நடக்கிறது.


இவருக்கு சூரியனின் தசா நடைபெற்றது. நடைபெற்ற ஆண்டு 2001 முதல் 2007 வரை. இவருக்கு சூரியனின் தசா அந்தளவுக்கு நல்லது செய்யவில்லை. சனி கிரகத்தின் சேர்ந்துக்கொண்டு சூரியன் அமர்ந்ததால் கெடுதலை அதிகம் தந்தது. சனியும் சூரியன் சேர்க்கை ஒரு கெட்ட சேர்க்கை என்று சொல்லவேண்டும்.

சூரியனின் சுயபுத்தியில் அதிக கெடுதலை தர ஆரம்பித்தது. குடும்பத்தில் அதிக செலவு உருவாகியது. கையில் இருக்கும் பணம் மருத்துவ செலவுக்கு என்று சென்றது.

இவருக்கு சந்திரபுத்தி சுக்கிரபுத்தி ராகு புத்தி கேது புத்தி அதிகமான கெடுதலை தந்தது. அதிகமான புத்திகள் தசாநாதனுக்கு 3 6 12 ஆகிய வீடுகளில் அமர்ந்து நடந்ததால் கெடுதலை அதிகமாக தந்தது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, July 26, 2013

விளக்கம்


வணக்கம் நண்பர்களே!
                    ஆத்மசுத்தி பற்றி பதிவில் சொன்னவுடன் பல நண்பர்கள் தொடர்புக்கொண்டு பேசினார்கள். பல பேருக்கு இதனைப்பற்றி புரியவில்லை என்றும் சொன்னார்கள்.

ஒருவருடைய ஆத்மாவில் பலவேறுபட்ட பாவங்கள் மற்றும் இதுவரை வந்த ஜென்மபயணத்தில் ஏற்பட்ட மாசுக்கள் அனைத்தையும் போக்கும் வழி தான் ஆத்மாசுத்தி. ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் ஒருமுறை திலாஹோமம் செய்ய வேண்டும் அதேபோல் ஒரு முறை ஆத்மசுத்தி செய்யப்படவேண்டும். திலாஹோமம் தன்னுடைய முன்னோர்களுக்கு செய்யப்படவேண்டும். தன்னுடைய ஆத்மாவிற்க்கு ஆத்மாசுத்தி செய்துக்கொள்ள வேண்டும்.

ஆத்மசுத்தி என்பது சாமியார்கள் செய்வார்கள் வெளியில் இதனைப்பற்றி யாரும் சொல்லுவதி்ல்லை. நமக்கு தெரிந்ததை அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்தவேண்டும் என்ற நல்நோக்கத்தில் இதனை உங்களுக்கு சொன்னேன். நீங்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் இருக்கும்பொழுது இதனை செய்துக்கொள்ளுங்கள். ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறீர்கள் என்றாலும் செய்துக்கொள்ளலாம். அதற்கு தகுந்தார் போல் செலவு செய்துக்கொள்ளலாம். 

கஷ்டப்பட்டு இருப்பவர்களுக்கு என்று ஒரு ஹோமத்தைப்பற்றி ஏற்கனவே சொல்லிருக்கிறேன். நமது அம்மனை வைத்து உங்களின் வீடுகளில் செய்துக்கொடுப்பது பற்றி பழைய பதிவுகளில் சொல்லிருக்கிறேன். இந்த ஹோமத்தை உங்களின் வீடுகளில் செய்தால் எப்படியும் ஒரு வாய்ப்பு தேடிவரும்.

நமது ஜாதககதம்பம் வழியாக வரும் நண்பர்களுக்கு பல நண்பர்களுக்கு செய்து அவர்களுக்கு நல்லது நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும் என்றால் அதனை நீங்கள் செய்துக்கொள்ளலாம்.அம்மன் நல்ல வாய்ப்பை தேடி தரும்.

கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் நண்பர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் என்னை தொடர்புக்கொள்ளவும்.

வரும் 28/07/2013 ஞாயிறு மற்றும் 29/07/2013 திங்கள்  கிழமைகளில் என்னை இந்த ஊரில் சந்திக்கலாம். என்னை உடனே தொடர்புக்கொண்டுவிடுங்கள்.

தொடர்புக்கு 9551155800.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஆன்மீக அனுபவங்கள் 102


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு ஆன்மீகவாதியின் முக்கிய செயல் ஒன்றைப்பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

காலையில் எழுந்தவுடன் ஒரு உயிரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருக்கும். இதனை குரு எனக்கு கற்றுக்கொடுத்தார். எப்படி என்றால் எல்லோரும் வேண்டுவார்கள். அனைவரும் நலமுடன் இருக்கவேண்டும் என்று பிராத்தனை செய்வார்கள். இது அனைத்து மதத்திலும் உண்டு. ஆனால் கொஞ்சம் வித்தியாசத்துடன் சம்பந்தப்பட்ட நபருக்காக இந்த செயலை காலையில் பூஜையில் செய்யவேண்டும்.

காலையில் நான் எழுந்தவுடன் இன்று ஒரு உயிரை காப்பாற்ற வேண்டும் என்று எழுவதால் எழும்பொழுதே ஒரு பெரிய புண்ணிய செயலை செய்ய ஆண்டவன் நம்மை எழுப்புகிறான் என்று நினைக்கும்பொழுது என்னை படைத்த இறைவனுக்க எப்படி நன்றி சொல்லுவது என்பதை தெரியவில்லை. இரவில் படுக்கும்பொழுது ஒன்று இரவில் கனவில் ஒரு உயிர் பிரச்சினையில் இருக்கிறது என்று காட்டும் அல்லது காலையில் பூஜையில் அமரும்பொழுது ஒரு உயிர் பிரச்சினையில் இருக்கிறது என்பது தெரியவரும் அதனை காப்பாற்றும் முயற்சியில் இறங்கி அதனை செய்த பிறகு தான் பூஜையை விட்டு எழும்பமுடியும்.

ஒரு உயிர் என்று சொன்னேன் அல்லவா அந்த உயிர் எந்த மனிதனுடையது என்பது எங்களுக்கு தெரியாது. யாரோ ஒருவராக இருக்கலாம் அல்லது அடுத்த வீட்டில் உள்ளவர்களாகவோ இருக்கலாம்.அந்த மனிதன் யார் என்று எனக்கு தெரியாது ஆனால் கண்டிப்பாக செய்யவேண்டும்.ஒரு மனிதன் தனக்காக தூக்கத்தை விட்டு எழும்புவதற்க்கும் அடுத்தவர்களுக்காக தூக்கத்தை விட்டு எழும்புவதற்க்கும் எவ்வளவோ வித்தியாசம் இருக்கிறது.

ஒரு சில நாட்களில் இந்த புண்ணியத்தை செய்வதற்க்கு வாய்ப்பு இருக்காது. இந்த செயலை செய்ய செய்ய ஆன்மீகத்தில் உயர்ந்த இடத்திற்க்கு செல்லலாம். இதனை குரு எனக்கு சொல்லி்க்கொடுத்த விசயங்களில் அதிமுக்கியமானது இது தான். என்னால் பல உயிர்கள் காப்பாற்றபடுகிறது என்பதை நாம் நினைத்தால் அந்த புண்ணியத்திற்க்கு வேறு ஏதும் இல்லை. 

இதனை அனைத்து ஆன்மீகவாதிகளும் செய்வார்கள். வெளியில் சொல்லிக்கொள்ள மாட்டார்கள். இதனை ஏன் உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன் என்றால் நீங்களும் இந்த செயலை செய்யவேண்டும் என்ற காரணத்தால் மட்டுமே. பல சேவைகள் இருக்கின்றன். ஒரு முக்கியமான செய்தி ஒன்றை சொல்லுகிறேன். இன்றைய காலகட்டங்களில் ஆன்மீகவாதிகளை எதிர்ப்பவர்கள் பல பேர் இருக்கிறார்கள். 

இப்படி ஆன்மீகவாதிகளை எதிர்ப்பவர்களுக்கு பல குடும்பங்களை ஒன்றுமே இல்லாமல் அழிந்துவிடும். இவர்கள் நினைத்துக்கொண்டு இருப்பார்கள் அந்த ஆன்மீகவாதி பில்லி சூனியம் வைத்துவிட்டார்கள் என்று நினைக்கலாம். உண்மையில் யாரும் இதனை எல்லாம் செய்யமாட்டார்கள். ஒரு ஆன்மீகவாதி செய்யும் புண்ணியம் அவனை எதிர்பபவர்களை அழிக்கும்.

புண்ணியம் என்பது இது தான் அடுத்த உயிரை காப்பாற்ற ஒரு நாளைக்கு பல பணிகளை செய்வார்கள். காலையில் எழுந்தவுடனே ஒரு உயிரை காப்பாற்றுபவன் எந்த சொல் சொன்னாலும் பலிக்கும்.




கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் நண்பர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் என்னை தொடர்புக்கொள்ளவும்.

வரும் 28/07/2013 ஞாயிறு மற்றும் 29/07/2013 திங்கள்  கிழமைகளில் என்னை இந்த ஊரில் சந்திக்கலாம். என்னை உடனே தொடர்புக்கொண்டுவிடுங்கள்.

தொடர்புக்கு 9551155800.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, July 25, 2013

தசாநாதன் பகுதி 9


வணக்கம் நண்பர்களே!
                    மேலே இருக்கும் படத்தில் உள்ள ஜாதகம். ஒரு ஆண் ஜாதகருடையது. மேஷ லக்கினத்தை லக்கினமாக உடையவர். மேஷ லக்கினத்தின் அதிபதியான செவ்வாய் மூன்றாம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். 

மேஷலக்கினத்தின் குணம் அதிகமான வேகம் மட்டுமே முதல் குணமாக இருக்கும். இந்த குணம் இவர்களை நல்லவிதத்திலும் முன்னேற்றம் அதே நேரத்தில் கீழே தள்ளியும் விடும்.

உபயராசியான மிதுனத்தில் அமர்ந்திருக்கிறார். சுக்கிரனோடு சேர்ந்து அமர்ந்திருகிறார். குரு தன்னுடைய சொந்த வீட்டில் இருந்து செவ்வாயை பார்க்கிறார். குரு பார்த்தால் நல்லது என்று சொல்லலாம் ஆனால் பகை வீட்டை பார்க்கிறார். மிதுன ராசியின் அதிபதி லக்கினத்திற்க்கு பனிரென்டாவது வீட்டில் அமர்ந்திருக்கிறார். 


செவ்வாய் கிரகத்தின் தசா நடைபெற்று பொழுது இவர் அதிகமாக போகத்திற்க்காக செலவை செய்தார்.அந்த தசா முழுவதும் அதற்காகவே அர்பணித்தார் என்று தான் சொல்லவேண்டும். லக்கினாதிபதியாக இருந்தாலும் இவருக்கு செவ்வாய் தசா இப்படிபட்ட பலனை தந்தது.

அடுத்து வந்த ராகு தசா இவருக்கு மிகப்பெரிய ஏற்றத்தை தந்தது என்று தான் சொல்லவேண்டும். பொதுவாக ராகு தசாவில் தான் அதிகமான காமத்தின் மீது ஆசை கொடுத்து சம்பந்தப்பட்ட நபரை கெடுக்கும் ஆனால் இவருக்கு செவ்வாய் தசா அந்த எண்ணத்தை தந்துவிட்டது. பிறகு வந்த ராகு தசா நல்ல முன்னேற்றத்தை இவருக்கு தந்தது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, July 24, 2013

ஆத்ம சுத்தி அறிவிப்பு


வணக்கம் நண்பர்களே!
                     ஆத்மா சுத்தி என்பதை பற்றி சொல்லியவுடன் பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு பேசினார்கள். இதனை நாங்கள் எப்படி செய்துக்கொள்வது என்பதை பற்றியும் கேட்டார்கள்.

பல புதிய தகவல்களை தருவதே நமது ஜாதக கதம்பத்தின் முக்கிய நோக்கம். ஆத்மா சுத்தியை நாங்கள் செய்வது உண்டு. மிகபபெரிய அளவில் ஒருவர்க்கு பிரச்சினை வரும்பொழுது ஆத்மசுத்தியை செய்வது உண்டு. ஒருவனால் எந்த வழியிலும் முன்னேற்றத்தை அடையமுடியவில்லை என்றால் ஆத்மசுத்தி செய்து அவனை முன்னேற்றத்தை அடையவைப்பது அல்லது ஒருவர் கடுமையான நோயுடன் படுத்துவிட்டார் என்றால் அவரை காப்பாற்ற இப்படி செய்வது உண்டு.

ஆத்மாசுத்தி செய்வதற்க்கு செலவு அதிகம் ஆகும் என்பது உண்மைதான். நமது பிளாக்கில் இருந்து வருபவர்கள் என்ன சார் நீங்களே இவ்வளவு பணம் கேட்கிறீர்கள் என்று சொன்னார்கள். நான் என்ன செய்து உங்களின் அனைத்து பாவத்தையும் வெளியில் எடுக்கவேண்டும் அதனை சுமந்து அழிக்க நாங்கள் அழிக்கவேண்டும். ஆத்மசுத்தி கடினமான ஒரு வேலை. அதனை செய்யும்பொழுது சிரமப்பட்டு செய்யவேண்டிய ஒன்று.

வசதிபடைத்த அனைவரும் இதனை செய்து கொள்வார்கள். வெளியில் இதனைப்பற்றி நீங்கள் கேட்டீர்கள் என்றால் லட்சக்கணக்கில் பணம் கேட்பார்கள். நமது தளத்தின் வழியாக வருபவர்களுக்கு குறைந்த பணத்தி்ல் நீங்கள் செய்துக்கொள்ள வழிசெய்கிறேன்.

இதன் வழியாக வரும் பணத்தை பாதியளவு  நமது பிளாக்கில் வரும் நண்பர்களுக்கு கொடுத்து உதவ எண்ணியத்தால் இந்த சிறப்பு அறிவிப்பு. ஏன் என்றால் நமது தளத்தில் வழியாக வருபவர்கள் என்னிடம் உதவி கேட்கிறார்கள் அவர்களுக்கு என்னால் முடிந்த உதவி செய்துக்கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். இன்னமும் பல பேர் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். 

என்னிடம் உதவி வேண்டும் என்று கேட்கும்பொழுது எனக்கு சந்தோஷமாக தான் இருக்கிறது ஏன் என்றால் என்னை எந்தளவு மனதில் எண்ணி என்னை நாடி வருவார்கள். அந்த எண்ணத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதால் இதனை எல்லாம் செய்துக்கொண்டிருக்கிறேன்.ஒரு சில காலகட்டங்களில் நான் ஏண்டா பிறந்தோம் என்று எண்ணிக்கொண்டு இருந்தேன ஆனால் இன்று அந்த புண்ணியத்தை பெற்றுவிட்டேன் என்று தான் சொல்லவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

தசாநாதன் பகுதி 8


வணக்கம் நண்பர்களே!
                     தசாநாதனின் பலனை சொல்லும்பொழுது லக்னதசா நடைபெற்றால் யார்க்கு எல்லாம் பலன் தரும் என்பதைப்பற்றி நாம் பார்க்கலாம்.

ஒருவருக்கு லக்னதசா நடைபெற்றால் உடனே உங்களுக்கு லக்னதசா நடைபெறுகிறது அதனால் உங்களுக்கு யோககாலம் என்று நாம் சொல்லகூடாது. அந்த லக்னத்தைப்பற்றி நாம் தெரிந்துக்கொண்டு பலன் சொல்லவேண்டும்.

பொதுவாக லக்னதசாவைப்பற்றி பார்க்கும்பொழுது அந்த லக்கினத்தின் கிரகம் எங்கு அமர்ந்துள்ளது என்பதைப்பற்றி கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். லக்கினத்தை பார்க்கும் கிரகத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு எல்லாம் அஷ்டவர்க்கம் பெரிதாக தெரிகிறது அல்லவா அதனையும் நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை எல்லாம் தெரிந்த பிறகு அவர்களுக்கு நாம் பலனை சொல்லுவோம் இது ஒரு வகையான பலனை சொல்லும் ஒரு உத்தி.

வேறு வழியை ஒன்றை பார்க்கலாம்

ஒருவரின் ஜாதகத்தில் லக்கினம் சரராசியாக இருந்து அந்த தசா நடைபெற்றால் அந்த ஜாதகருக்கும் முழு பலனையும் லக்கினதசா தரும்.

ஒருவரின் ஜாதகத்தில் லக்கினம் ஸ்திரராசியாக இருந்து அந்த தசா நடைபெற்றால் அந்த ஜாதகருக்கு லக்கின தசா பாதியளவு மட்டுமே அவர்களுக்கு பலனை தரும்.

ஒருவரின் ஜாதகத்தில் லக்கினம் உபராசியாக இருந்து தசா நடைபெற்றால் அவருக்கு லக்கினதசா சுமாரான பலனை தரும்.

சரராசி :மேஷம் ,கடகம், துலாம், மகரம்
ஸ்திர ராசி :ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம்
உபய ராசி :மிதுனம், கன்னி, தனுசு, மீனம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

குரு எப்பொழுது கிடைப்பார்?


வணக்கம் நண்பர்களே!
                     நமக்கு அமையும் குரு என்பவர் ஒரு வழி காட்டிக்கொடுப்பார் அந்த வழியை நாம் தான் பின்பற்றி செல்லவேண்டும். அவரின் பங்கு சிறிதளவு இருந்தாலும் நமது முயற்சியால் முன்னேற்றத்தை அடையவேண்டும். நமது குரு இருப்பார் அந்து குருவிற்க்கு முன்னர் பல பேர் இருப்பார்கள் அவர்கள் உங்களுக்கு பல வழிகாட்டுதலை கொடுப்பார்கள்.அவர்கள் இறந்து இருப்பார்கள் ஆனால் அவர்களின் வழிகாட்டுதல் மிகமுக்கியமான ஒன்றாக நமக்கு அமையும். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் உள்ளவர்கள் கூட உங்களுக்கு வழிகாட்டுதலை தருவார்கள். 

நமது குருவின் முன்னோர்கள் நமக்கு வழிகாட்டுதலை செய்வதோடு நின்றுவிடாமல் நமக்கு ஆபத்து காலத்தில் உதவ முன்வருவார்கள். இப்படிபட்ட வழிகாட்டுதலை நான் பெற்றதால் உங்களுக்கு இதனை சொல்லுகிறேன். இந்த காரணத்தில் தான் சீடனாக ஒருவரை எடுப்பதற்க்கு பல காலம் யோசனை செய்து எடுக்கிறார்கள்.

என்னை பொருத்தரை இந்த ஒன்று மட்டுமே பணம் கொடுத்து வாங்கமுடியாத ஒன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு குருவை மட்டும் நாம் வாங்கமுடியாது. அவர்களாக பார்த்து நம்மை ஏற்றுக்கொண்டால மட்டுமே சாத்தியப்படும்.கோடிக்கணக்கில் பணம் இருக்கலாம் அநத் பணத்தை வைத்துக்கொண்டு குருவை வாங்கலாம் என்று நினைத்தால் ஒருவரும் குருவாக வரமாட்டார்கள். 

ஒரு குரு தனக்கு சேவை செய்பவர்களா என்று தான் எதிர்பார்ப்பார்கள். அதைப்போல் இவனால் பல பேர்க்கு நன்மை செய்வானா என்றும் பார்ப்பார்கள். இதனை மட்டும் நீங்கள் செய்தீர்கள் என்றால் உங்களுக்கு கண்டிப்பாக ஒரு குரு கிடைப்பார்.

நாம் இதற்க்கெல்லாம் தயார் நிலையில் இல்லை என்பதால் அவர்களும் தயார் நிலையில் இல்லை. நாம் குருவை தேடுவது போலவே அவர்களும் தனக்கு ஒரு நல்ல சீடன் கிடைப்பானா என்று பார்ப்பார்கள். பெரிய குருவிற்க்கு கூட சீடன் இல்லாமல் அப்படியே விட்டுவிட்டு சென்றவர்கள் அதிகமானவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

குரு பலன் பரிகாரம்


வணக்கம் நண்பர்களே!
                     நேற்றைய பதிவில் குரு பலன் என்பதைப்பற்றி ஒரு பதிவை எழுதியிருந்தேன். அதில் ஒரு கேள்வியை கேட்டுருந்தேன் அதற்கு ஒருவரும் பதில் தரவில்லை.

சோதிடம் பார்க்க நிறைய பேர் இப்பொழுது இருக்கிறார்கள். கணிணியே முக்கால்வாசி கணித்து கொடுத்துவிடுகிறது. நம்மிடம் வரும் வாடிக்கையாளர்களுக்கு நாம் சொல்லும் பரிகாரம் சரியாக போய்சேர்ந்து அவர்கள் அந்த பிரச்சினையில் இருந்து காப்பாற்றபடவேண்டும். மக்களை காப்பாற்ற தான் சோதிடம், சோதிட பாடங்களை அப்படியே மனப்பாடம் செய்து வரும் நபர்களுக்கு சொல்லுவதல் என்ன நடந்துவிடபோகிறது. உங்களால் உங்களை தேடி வரும் நபர்களை காப்பாற்றபடவேண்டும். அதற்கு மட்டுமே சோதிடத்தை படிக்க வேண்டும்.

குருவின் பலனோடு ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்றால் பெற்றோர்கள் அதிகமான பக்தியோடு இருக்கவேண்டும். குழந்தை வயிற்றில் இருக்கும்பொழுது மந்திர பயிற்சி செய்ய வேண்டும்.  மந்திரங்களை ஆடியோவில் கூட காலையும் மாலையும் கேட்கலாம்.

சாந்தமாக இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று வரலாம். மதங்களைப் பற்றி பேசும் பெரியவர்களுக்கு உதவி செய்யலாம். சொந்த மதத்தை வளர்க்கும் வேலையில் கூட ஈடுபடலாம். ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவியை செய்யலாம்.கல்வியை வளர்க்கும் பொழுது நமக்கு அதிகமான குரு பலன் கிடைக்கும்.

தியானம் செய்யலாம். தியானம் செய்யும் இடம் கூட கோவிலாக இருந்தால் மிக நல்லது. கல்லால் மரத்திற்க்கு கீழ் அமர்ந்து தியானம் செய்யும்பொழுது மிக அதிகமான குரு பலனை பெறமுடியும். இந்த மரம் அதிகமாக காடுகளில் இருப்பதால் அங்கு செல்வது கடினமான ஒன்று.

அல்லது அந்த மரத்தின் குச்சியை கொண்டு வந்துகூட வீட்டில் வைத்து தியானம் செய்யலாம் அல்லது பூஜை செய்யலாம்.சோதிடத்தைப்பற்றி உங்களின் அருகில் இருப்பவர்களுக்கு சொல்லிக்கொடுக்கலாம். ஷீரடி சாய்பாபாவின் பக்தர்களாக மாறலாம். ஹோமங்கள் நடைபெறும் இடத்திற்க்கு சென்று வரலாம்.இதனை எல்லாம் செய்தால் உஙகளின் குழந்தை குரு பலத்தோடு பிறக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பீஜமந்திரம்


வணக்கம் நண்பர்களே!
                     நமது ஜாதக கதம்பம் வழியாக மந்திர பயிற்சி செய்கிறார்கள். இவற்றுக்கான மந்திரங்களை நான் ஒருபோதும் உங்களுக்கு கொடுக்கவில்லை ஏன் என்றால் ஒவ்வொரு தெய்வத்திற்க்கும் ஒவ்வொரு மந்திரங்கள் இருக்கும். உங்களுக்கு விரும்பிய தெய்வங்களின் மந்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்க்காக இந்த ஏற்பாட்டை செய்தேன்.

பல நண்பர்கள் என்னிடம் சொன்னார்கள். ஏன் நீங்களாவே ஒரு மந்திரத்தை சொல்லவேண்டியது தானே அல்லது கண்டிபிடித்து தாருங்கள் என்றும் சொன்னார்கள். நமக்கு அந்த வேலை எல்லாம் சரிப்பட்டு வராது அதற்கு காரணம் நமது மதத்தில் அனைத்தையும் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்கள். அதனை நாம் தெரிந்துக்கொண்டு உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள மட்டுமே இதனை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

நான் காயத்ரி மந்திரங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லியுள்ளேன். காயத்ரி மந்திரம் சாதாரண மனிதர்களுக்கும் பயிற்சி எடுத்து உயர்ந்த நிலைக்கு செல்லவைக்கும்.

பீஜம் என்பது விதை என்று அர்த்தம். விதை நாம் இட்டால் தான் அது முளைக்க முடியும். பீஜாட்சரங்கள் என்றால் மந்திரங்களின் வித்துக்கள் என்று பொருள்படும். பீஜாட்சரங்களை மந்திரத்தோடு இணைத்து நாம் சொல்லவேண்டும். அப்படி சொன்னால் மட்டுமே நமக்கு மந்திரசித்தி கிடைக்கும்.

பீஜாசாட்சரங்கள் இல்லை என்றால் ஒரு சாதாரண மனிதனால் ஆன்மீகத்தில் உயரமுடியாது. ஐம் என்று ஒரு வார்த்தை வரும் இந்த வார்த்தை எதனை குறிக்கிறது என்றால் நமது உடலை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது.

ஹ்ரீம் என்று ஒரு வார்த்தை வரும் இந்த வார்த்தை எதனை குறிக்கிறது என்றால் நமது மனதை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது.

ஓம் என்று ஒரு வார்த்தை வரும் இந்த வார்த்தை எதனை குறிக்கிறது என்றால் நமது மூலாதாரத்தை எழுப்பும் ஆற்றல் உள்ளது.

இந்த மந்திரங்களை நாம் சேர்த்து சொல்லும்பொழுது மட்டுமே  இந்த மந்திர எழுத்துக்குள் வரவேண்டும் அப்பொழுது மட்டுமே நமக்கு மந்திரசித்தி கிடைக்கும். இதனை தான் பீஜாசாரங்கள் என்று சொல்லுவார்கள். இது நமது உடலுக்குள் சென்று ஆத்மாவையும் உடலையும் சரியான விதத்தில் உயர்த்த செய்யும். உங்களுக்குள் ஆன்மீகம் பீஜாசாரங்கள் வழியாக தான் நடைபெறும். இதனை நமது முன்னோர்கள் அறிந்து தெளிவாக உருவாக்கி வைத்துள்ளார்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, July 23, 2013

சனியின் வக்கிர முடிவு


வணக்கம் நண்பர்களே!
                    நடந்து முடிந்தவுடன் அதனைப்பற்றி சோதிடத்தில் சொல்லக்கூடாது ஆனால் நடப்பதற்க்கு முன் பல பேர் இதனைப்பற்றி சொன்னாலும் யாரும் அதனைப்பற்றி கவனத்தில் எடுத்துக்கொள்ளமாட்டார்கள். நமக்கு தெரிந்ததை சொல்லிவிடுகிறேன்.
சரி விசயத்தை பார்க்கலாம். 

சினிமாவில் இருப்பவர்களுக்கு இது போதா காலம் என்று சொல்லவேண்டும். ஒருத்தர் மாற்றி ஒருத்தர் மரணத்தை தழுவிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு காரணம் தற்பொழுது சனி பகவான் துலாம் ராசியில் அமர்ந்துக்கொண்டு இருக்கிறார். கூடவே பங்காளி ராகுவும் சேர்ந்து அமர்ந்துள்ளது. கலைதுறையில் இருப்பவர்களுக்கு குறிக்கும் கிரகம் சுக்கிரன். சுக்கிரனின் வீட்டில் அமர்ந்து இருப்பதால் கலைதுறையினர் அதிகம் பேர் மரணத்தை தழுவுகிறார்கள். 

சுக்கிரன் வண்டி வாகனங்களுக்கும் காரகம் வகிப்பதால் வாகனங்கள் அதிகமாக விபத்துக்குள்ளாகும். வண்டியில் போகும் பொழுது எச்சரிக்கையுடன் இருங்கள். வெளியுலகத்தை சோதிடர்களாக இருப்பவர்கள் உற்று நோக்க வேண்டும். அப்பொழுது மட்டுமே உலகத்தில் என்ன நடக்கிறது எதனால் நடக்கிறது என்பதை அறியமுடியும்.

சினிமாவில் இருப்பவர்கள் சனிக்கும் ராகுக்கும் பரிகாரம் செய்வது நலம் பயக்கும். மொத்தமாக சேர்நது பரிகாரம் செய்ய வேண்டியது. சினிமாவில் சங்கம் இருக்கிறது அல்லவா  அவர்கள் செய்யலாம். நமது பிளாக்கிற்க்கு சினிமாவில் இருப்பவர்கள் வந்து படித்து செல்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். நீங்களே சொல்லிவிடுங்கள்.

இதனை ஏன் இப்பொழுது நடந்து முடிந்தவுடன் சொல்லுகிறீர்கள் என்று நினைக்கலாம். சனிபெயர்ச்சி நடக்கும்பொழுதே அனைத்து புத்தகங்களிலும் கலைதுறையினர்க்கு எச்சரிக்கை என்று எழுதி இருப்பார்கள். அப்பொழுது அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டோம். இப்பொழுது தான் சனிக்கிரகம் வக்கிரம் முடிந்து வந்து இருக்கிறது இனி ஆட்டத்தை ஆட ஆரம்பிக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஆடி செவ்வாய்


வணக்கம் நண்பர்களே!
                     செவ்வாய்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை அம்மனின் கோவிலுக்கு நான் செல்வேன். என்னை போல என்னுடைய வாடிக்கையாளர்களையும் கோவிலுக்கு செல்ல சொல்லுவது எனது வாடிக்கையான ஒரு செயல்.

வெள்ளிக்கிழமை அன்று நான் கோவிலுக்கு செல்லாமல் இருந்தாலும் செவ்வாய்கிழமை அன்று கண்டிப்பாக எப்படியாவது கோவிலுக்கு செல்லுவது என்னுடைய வழக்கம். செவ்வாய்கிழமை அன்று அம்மனை பார்க்க எனக்கு பிடிக்கும். செவ்வாய்கிழமை கோபமாக அம்மன் இருந்தாலும் அன்னையை பார்க்க ஆசைப்படுவேன்.

சென்னையில் இருப்பதால் காளிகாம்பாளை தரிசனம் செய்வது நமது கடமை மற்றும் எனது பாதுகாப்பு கூட என்பதால் காளிகாம்பாளை பார்க்க செல்வது உண்டு. இந்த அம்மனைப்பற்றி நான் ஏற்கனவே உங்களுக்கு சொல்லிருந்தாலும் அங்கு பல சிறப்பு இருக்கிறது. எனக்கு ஒரு மணி நேரம் ஒய்வு கிடைத்தாலும் உடனே அங்கு சென்று தரிசித்துவிட்டு வந்துவிடுவேன். அது எந்த நாளாக இருந்தாலும் நான் செல்வது வழக்கம்.

எனக்கு காளிகாம்பாளை பார்க்க பார்க்க எனக்கு ஆனந்தம் பொங்கும். நான் வேண்டுதலை வைப்பதில்லை என்பதால் அன்னை பார்க்க மட்டும் செல்லுவது எனக்கு பிடிக்கும். நான் பார்த்து திரும்புவதற்க்குள் அன்னை எனக்கு என்ன தேவையே அதனை கொடுத்துவிடுவாள். நான் அன்று வேண்டுதலை வைப்பதில்லை ஆனால் நான் கேட்காமலே கொடுத்துவிடுவாள்.

நீங்கள் சென்னையில் வசித்து வந்தீர்கள் என்றால் கண்டிப்பாக சென்று பார்த்துவிட்டு வாருங்கள். அவளை தரிசிக்க பல மன்னர்களே வந்து சென்று இருக்கிறார்கள். நாம் எல்லாம் வெறும் தூசு அப்படிபட்டவளை நீங்கள் தரிசினம் செய்யாமல் இருக்ககூடாது அதனால் சென்று வணங்கிவாருங்கள்.செவ்வாய்கிழமை அதுவும் ஆடிசெவ்வாய்கிழமை கண்டிப்பாக உங்களின் அருகில் இருக்கும் அம்மனை தரிசிக்க வேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

குரு பலம்


வணக்கம் நண்பர்களே!
                     குரு பலம் வேண்டும் என்பதை பல பதிவுகளில் நான் சொல்லிருந்தாலும் ஒரு சில கருத்தை சொல்ல வேண்டும் என்பதால் இந்த பதிவில் உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன்.

ஒவ்வொரு மனிதனின் இந்த ஜென்மத்தில் அனுபவிக்கும் நல்லது கெட்டது எல்லாவற்றிர்க்கும் அவனின் முன்ஜென்மம் மட்டுமே காரணம் என்று நமது மதம் சொல்லும் உண்மை. சோதிடமும் அதனை தான் சொல்லுகிறது. முன்ஜென்மத்தை பற்றி தெரிந்துக்கொள்ள சோதிடத்தில் ஐந்தாவது வீடு நமக்கு காட்டுகிறது. இந்த ஐந்தாவது வீட்டிற்க்கு காரகம் அதிகமாக எடுத்துக்கொள்பவர் குரு கிரகம். ஒரு ஜாதகத்தில் அனைத்து கிரகமும் அடிப்பட்டு குரு கிரகம் மட்டும் நன்றாக இருந்தால் போதும் அவன் பிழைத்துவிடலாம்.  அப்படி என்ன தான் குரு கிரகத்தில் இருக்கிறது என்று பார்த்தால் நாம் முன்ஜென்மத்தில் சேர்த்து வைத்த புண்ணியத்தை இந்த ஜென்மத்தில் நமக்கு தருபவர் குரு கிரகம்.

நான் பலபேருக்கு வியாபாரத்திற்க்கு என்று உதவி செய்து வருகிறேன் என்று உங்களுக்கு தெரியும். அவர்களுக்கு உதவி செய்வது நமது அம்மனாக இருந்தாலும் அவர்களின் ஜாதகத்தில் குரு பலம் நன்றாக இருந்தால் எளிதில் வெற்றி பெற்றுவிடுவார்கள். அவர்களுக்கு குரு பலம் நல்ல இல்லை என்றால் நான் எவ்வளவு கஷ்டப்பட்டு செய்தாலும் பலன் ஐம்பது சதவீதம் மட்டுமே கிடைக்கும். 

குரு பலன் கோச்சாரபடியும் நன்றாக இருந்தாலும் அவர்களுக்கு எளிதில் வெற்றி பெற்றுவிடமுடியும். அம்மனை வைத்து நாம் நல்லது செய்தாலும் அவர்களின் பூர்வபுண்ணியத்திற்க்கு ஏற்ப மட்டுமே நல்லது நடக்கிறது. நான் செய்யும்பொழுதே அவர்களின் குரு பலத்தை அறிந்து செய்கிறேன். அவர்களுக்கு குரு பலன் இல்லை என்றால் அவர்களுக்கு நான் கஷ்டப்பட்டு செய்ய வேண்டும்.

ஒரு சிலருக்கு நான் செய்யும்பொழுது உடனே பலனை தரும் அவர்களின் குரு பலனின் சதவீதம் குறைவாக இருந்தால் உடனே திரும்பிவிடும். மறுபடியும் குருவிற்க்கு என்று தனியாக பரிகாரத்தை செய்து அவர்களின் குருபலத்தை அதிகரிக்க செய்யும் வழிகளை செய்து அவர்களை காப்பாற்ற வேண்டியுள்ளது. 

வியாபாரத்திற்க்கு என்று வந்த பணத்தை இப்பொழுது எல்லாம் புதிதாக வந்த வாடிக்கையாளர்க்கு செலவு செய்வதற்க்கே என்னுடைய பணம் எல்லாம் கரைகிறது.புதிதாக வரும் நபர்களிடம் நாம் பணம் கேட்கமுடியாது அதனால் அவர்களுக்கு என்னுடைய பணத்திலேயே செய்யவேண்டியுள்ளது. இதனை ஏன் உங்களிடம் சொல்லுகிறேன் என்றால் குரு பலம் எந்தளவுக்கு ஒரு மனிதனுக்கு தேவை என்பதை உங்களுக்கு அனுபத்தில் சொல்லவேண்டும் என்பதால் சொல்லுகிறேன்.


கேள்வி
உங்களின் குழந்தை குருபலத்தோடு பிறக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வறுமை ஏன்?


வணக்கம் நண்பர்களே!
                    பல ஏழை மக்களை பார்க்கும்பொழுது ஒரு விசயம் எனக்கு தென்பட்டது அது என்ன என்றால் நாங்கள் ஏழை என்று அவர்களே ஏற்றுக்கொண்டுவிடுகிறார்கள். இந்த ஏற்றுக்கொள்ளும் விதம் மட்டுமே அவர்களே ஏழையாகவே வைத்திருக்கிறது.

ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம் ஒரு விதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அதனை முழுமையாக ஏற்றுக்கொளளகூடாது. அதாவது எல்லாவிதத்திலும் அதனை ஏற்றுக்கொள்ளகூடாது. அதுவும் வறுமையில் மட்டும் இந்த மனப்பக்குவத்தை ஏற்றுக்கொள்ளகூடாது.நான ஏழை என்று மட்டும் ஒருவன் ஏற்றுக்கொண்டுவிட்டால் அவனால் வாழ்க்கையில் என்றுமே முன்னேற்றம் என்பதை அடையமுடியாது.

இல்லறவாழ்க்கையில் இருப்பவர்கள் ஒரு நாளும் நான் ஏழையாகவே இருப்பேன் என்று மட்டும் ஏற்றுக்கொள்ளகூடாது. இல்லறவாழ்க்கையில் இருப்பவர்கள் எப்படியாவது முன்னேற்றம் அடைந்தே தீருவேன் என்று உறுதியோடு இருந்தால் மட்டுமே அவனால் வெற்றி பெறமுடியும்.மனதில் எந்த நேரத்திலும் வெற்றி பெறுவேன் என்று உறுதியோடு செயல்படும்பொழுது மட்டுமே வெற்றி கிடைக்கும்.

வறுமை போல் மரணத்தையும் இவர்கள் விரும்பி வரவழைக்கிறார்கள் என்பதையும் கண்டேன். நான் இனிமேல் வாழ்ந்து என்ன செய்யபோகிறேன். நான் சாகபோகிறேன் என்று அவர்களாகவே மரணத்தை வரவழைக்கிறார்கள். எப்பொழுது மனதில் மரணத்தை கூப்பிடுகிறார்களோ அப்பொழுதே மரணம் தேடி வந்துவிடும்.

மனதிற்க்கு மரணத்தைப்பற்றி சிந்தனை வரக்கூடாது. மரணத்தைப்பற்றி சிந்தனை எப்பொழுது வரலாம் என்றால் அவன் ஆன்மீகத்திற்க்கு வரும்பொழுது மட்டுமே அவன் நினைக்கவேண்டும். இல்லறவாழ்க்கையில் இருந்துக்கொண்டு இதனைப்பற்றி நினைக்ககூடாது. ஏன் என்றால் உங்களுக்கு கடமை நிறைய இருக்கிறது.

மரணம் வரப்போகிறது என்று மனதில் ஒரு பயத்தை உண்டு பண்ணி பார்த்தால் உங்களின் மனது உடனே மரணத்தை தழுவ ஆயத்தம் ஆகிவிடும். உடல் எல்லாம் ஒரு மாதிரி செய்ய ஆரம்பித்துவிடும். உடனே மரணம் வந்துவிடும். தற்கொலை செய்தவற்க்கு நீங்கள் பிறஉபகரணங்களை நாட வேண்டியதில்லை. உங்களின் மனதே போதும் அதுவாகவே கொன்றுக்கொள்ளும்.

இந்த நாட்டில் மற்றும் எல்லா நாட்டிலும் வறுமை மற்றும் மரணத்தை பல பேர் அவர்களாகவே வரவழைத்துக்கொள்கிறார்கள் என்பது மட்டும் உண்மை. இதனை மேலோட்டமாக படித்தால் ஒன்றும் புரியாது. படித்துவிட்டு சிந்தனை செய்யும்பொழுது எளிதில் உங்களுக்கு புரியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

தசாநாதன் பகுதி 7


வணக்கம் நண்பர்களே!
                    ஒவ்வொருவரும் ஜாதகத்தை எடுத்து பார்த்துவிட்டு உங்களுக்கு என்ன தசா நடைபெறுகிறது என்று பார்த்துக்கொள்ளுங்கள். அந்த தசாநாதனுக்கு தகுந்தமாதிரி உங்களின் தொழிலை மற்றும் பழக்கவழக்கத்தை மாற்றிக்கொள்ளுங்கள். இந்த ஒன்றை பின்பற்றினாலேயே நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிடலாம்.

சோதிடத்தை பார்த்தோம் அல்லது படித்தோம் என்று அப்படியே விட்டுவிடகூடாது அதன் படி நடக்க கற்றுக்கொள்ள வேண்டும். தசாநாதன் ஒரு மனிதன் செல்லும் திசையை மாற்றும் வல்லமை அவனுக்கு உண்டு. அநத் தசாநாதனுக்கு ஈடுகொடுத்து நீங்கள் செல்லும்பொழுது அனைத்தும் எளிமையாக அமையும். தசாநாதனின் வழியில் நீங்கள் செல்லாமல் வேறு வழியில் நீங்கள் சென்றால் நீங்கள் செல்லும் வழியில் பல இடையூறுகளை சந்திக்க நேரிடும்.

எனக்கு ராகுதசா நடைபெற்றுக்கொண்டு இருக்கும்பொழுது நான் கம்யூட்டர் துறையில் இருந்தேன். ராகுதசா நன்றாக கைகொடுத்தது. குரு தசா வந்தவுடன் கம்யூட்டர் துறை அந்தளவுக்கு கைகொடுக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். குரு தசாவில் முழுநேர சோதிடராகவே மாறிவிட்டேன். 

உங்களுக்கு என்ன தசா நடக்கும் என்பதை பார்த்துக்கொண்டு அந்த தசாவிற்க்கு தகுந்தமாதிரி உங்களின் தொழிலையும் மாற்றி்க்கொள்வது நல்லது.அப்பொழுது எளிதில் வெற்றி காணமுடியும்.ஒரு சிலருக்கு தசாநாதன் கெடுதலையும் தருவார் அந்த மாதிரி உங்களுக்கு கெடுதலை தரும் தசா நடைபெற்றுக்கொண்டு இருக்கும்பொழுது நீங்கள் தகுந்த பரிகாரத்தை செய்துக்கொள்ளுங்கள். ஓகோ என்று இல்லாமல் ஒரளவாவது நன்மையை தரும்.

உங்களின் தசாநாதன் வழியில் நீங்கள் சென்று உங்களின் வாழ்க்கையை எளிமையாக்கிக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Monday, July 22, 2013

வீட்டில் செய்யும் ஹோமம்


வணக்கம் நண்பர்களே!
                    கடந்த வாரம் ஒரு நண்பரின் வீட்டிற்க்கு சென்றுருந்தேன். அவர்கள் ஒரு கேள்வியை கேட்டார்கள். அதாவது நீங்கள் ஹோமம் செய்து தருகிறேன் என்று சொல்லியுள்ளீர்கள். அந்த ஹோமத்தை நாங்கள் எங்களின் வீட்டில் செய்கிறோம் பிறகு நாங்கள் வேறு ஒரு வீட்டிற்க்கு செல்லும்பொழுது அதே ஹோமத்தை செய்யவேண்டுமா என்று கேட்டார்கள் அவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக உங்களுக்கும் புரியவேண்டும் என்பதற்க்காக இதனை தருகிறேன்.

நமது அம்மனை வைத்து உங்களின் வீடுகளில் ஹோமம் செய்கிறேன். இப்படி செய்யும்பொழுது உங்களுக்கு ஏதாவது ஒரு வாய்ப்பை நமது அம்மன் ஏற்படுத்திக்கொடுக்கும். அதே நேரத்தில் உங்களின் குலதெய்வத்தின் அருளையும் பெற்று தரும். இதனை ஏன் ஹோமம் செய்து தருகிறேன் என்றால் எந்த சக்தியையும் நிலைநாட்டவேண்டும் என்றால் அதற்கு அக்னி தேவை என்பதால் ஹோமம் செய்து கொடுக்கிறேன்.

இந்த ஹோமம் செய்யும்பொழுது உங்களின் வீட்டில் ஏதாவது துர்சக்திகள் இருந்தால் அதனை வெளியேற்றிவிடும். ஒரு வீட்டில் ஹோமம் செய்யும்பொழுது அந்த வீட்டு நபர்களை வைத்து தான் செய்கிறேன். அவர்களை வைத்து செய்வதால் அவர்களுக்கும் ஒரு பாதுகாப்பை தருவதற்க்கு வழி செய்துவிடுவேன். உங்களின் வீட்டிற்க்கு பிறரின் தீயஎண்ணங்கள் உங்களின் வீட்டிற்க்குள் வராது. அதே நேரத்தில் உங்களின் வீடு ஒரு பாதுகாப்பு வளையம்போல் காக்கப்படும்.

நீங்கள் அந்த வீட்டை விட்டு வேறு வீட்டிற்க்கு சென்றால் உங்களுக்கு மட்டும் காப்பு இருக்கும். புதிய வீட்டிற்க்கு அந்த காப்பு இருக்காது.வீட்டில் ஏதும் துர்சக்திகள் இருந்தால் அது வெளியில் செல்லாது. புதிய வீட்டிற்க்கும் நீங்கள் ஹோமம் செய்யப்படவேண்டும். அப்பொழுது மட்டுமே அந்த வீட்டிற்க்கு காப்பு ஏற்படுத்தமுடியும்.

புதிதாக நீங்கள் வீடு குடிபோகும்பொழுது நீங்கள் கணபதி ஹோமம் செய்வார்கள் அப்படி செய்தாலும் நாங்கள் தரும் முறையிலும் செய்யப்பட வேண்டும்.அப்பொழுது மட்டும் குலதெய்வத்தை நிலைநாட்டமுடியும். உங்களின் வீட்டில் நல்ல சக்தியை நிறுத்தமுடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

அம்மனின் பூஜை விளக்கம்


வணக்கம் நண்பர்களே!
                     நமது அம்மனின் பூஜையை பற்றி நேற்று பதிவில் சொல்லிருந்தேன். அதற்கு வரவேற்பு பல பேர்களிடம் இருந்து வந்தது. இவர்கள் நமது அம்மனின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது. 

பல பேர் நமது அம்மனின் அருளால் நல்லதை பெற்று இருக்கிறார்கள். பல பேர் குடும்பத்தில் இருக்கும் நண்பர்களாக இருக்கிறார்கள். இவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் நான் சொன்னவுடன் அவர்களிடம் இருக்கும் பணத்தை அனுப்ப நினைக்கிறார்கள். உங்களுக்கு சொல்லிக்கொள்ளுவது என்ன என்றால் உங்களிடம் அதிகமான பணம் இருக்கும்பட்சத்தில் மட்டுமே பூஜைக்கு என்று பணம் அனுப்பவேண்டும். நடுத்தரகுடும்பத்தில் இருந்துக்கொண்டு பணத்தை அனுப்பி உங்களின் மாத செலவுக்கு பிரச்சினை ஏற்படும். இப்படிபட்டவர்கள் தயவு செய்து பணத்தை அனுப்பாதீர்கள். 

உங்களின் துயர்துடைக்க மட்டுமே அம்மன் உங்களுக்கு உதவுகிறது. அந்த நினைப்பை வைத்துக்கொண்டு இந்த பிரச்சினையில் இருந்து விடுவித்துவிட்டாய் அடுத்து என்னை பொருளாதாரத்திலும் உயர்த்து என்று நீங்கள் வேண்டுதலை வையுங்கள். நீங்கள் பொருளாதாரத்தில் உயரமுடியும். கண்டிப்பாக அம்மனுக்கு நீங்கள் செய்யவேண்டிய கட்டாயம் ஒன்றும் கி்டையாது. உங்களை காப்பாற்ற அம்மன் இருக்கிறது.

நமது அம்மனை நான் ஒரு தாய் போல் தான் எண்ணிக்கொண்டு இருக்கிறேன். நீங்களும் அவ்வாறே எண்ணவேண்டும். ஒரு தாய் தன் மக்களை காப்பாற்றும். அதற்கு நாம் பிரதி உபகாரம் செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண்டு நாம் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் நன்றாக இருக்கும்பொழுது செய்யலாம்.

நல்ல நிலைமையில் அதாவது பொருளாதாரத்தில் நீங்கள் நன்றாக இருந்தால் நீங்கள் அம்மனுக்கு செய்யலாம். பிராத்தனையை வையுங்கள். நான் அதனை செய்கிறேன் இதனை செய்கிறேன் என்று நினைக்காமல் இந்த பிரச்சினையை எனக்கு தீர்த்து வை என்று மட்டும் பிராத்தனை இருக்கட்டும்.எளிதில் பிரச்சினை தீர்ந்துவிடும். ஏழைக்கு இறங்கி வந்து தீர்த்து வைக்கும் தாய் அவள் என்பதை மறக்க வேண்டாம்.

பூஜை செய்வதின் நோக்கம் அந்த அம்மனின் சக்தியை அதிகமாக பயன்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே செய்கிறேன். மாதத்திற்க்கு ஒரு பூஜை செய்து அதனை பலபேர்களின் இன்னல்களை தீர்க்க வழிசெய்கிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ஊழல்



வணக்கம் நண்பர்களே!

இந்தியாவில் ஊழல் ஒரு பெரும் பிரச்சினை. அது இந்தியாவின் பொருளாதாரத்தை மோசமாக பாதிக்கின்றது. இந்தியாவில் திரான்சிபரன்சி இன்டர்நேஷனல்(Transparency International) நடத்திய 2005ஆம் ஆண்டின் ஆய்வின் படி 62 சதவிகிதத்திற்க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு இலஞ்சம் கொடுப்பது, அல்லது செல்வாக்கு பயன்படுத்தி பொது அலுவலகங்களில் வெற்றிகரமாக வேலைகளை முடித்துக் கொள்வதில் முதல் கை அனுபவம் இருந்ததாக தெரியவந்துள்ளது. அதன் 2008 ஆய்வில், 40% இந்தியர்கள் இலஞ்சம் கொடுப்பது அல்லது ஒரு தொடர்பை பயன்படுத்தி பொது அலுவலகத்தில் வேலையை செய்து முடிப்பதில் முதல் கை அனுபவம் பெற்றுள்ளனர், என குறிப்பிடப்பட்டுள்ளது.

2011 ல் இந்தியா திரான்சிபரன்சி இன்டர்நேஷனலின் ஊழல் மலிவுச் சுட்டெண்ணில் (Corruption Perceptions Index) 178 நாடுகளுள் 95 வது இடத்தில் இந்தியா இருந்தது.

இந்திய அரசாங்கம் இயற்றிய சில சமூக செலவு திட்டங்கள் மற்றும் உரிமம் வழங்கும் திட்டங்கள் ஊழலுக்கான மிக பெரிய மூலங்கள் ஆகும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் மற்றும் தேசிய ஊரக சுகாதார திட்டம் ஆகியவை உதாரணங்கள் ஆகும். நெடுஞ்சாலைகளில் உள்ள பல ஒழுங்குமுறை மற்றும் போலீஸ் நிறுத்தங்களுக்கு, போக்குவரத்து சார்ந்த தொழில்கள், ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் இலஞ்சம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

சுவிஸ் வங்கிகளில் டிரில்லியன் கணக்கான டாலர்கள் இந்திய ஊழல்வாதிகளால் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்று இந்திய ஊடகங்கள் பரவலாக குற்றச்சாட்டுக்களை வெளியிட்டுள்ளன. எனினும் சுவிஸ் அதிகாரிகள், இந்த குற்றச்சாட்டுக்களை ஒரு முழுமையான கட்டுருவாக்கம் மற்றும் தவறானது என்று கூறுகிறார்கள்.

அதிக கட்டுப்பாடுகள், சிக்கலான வரிகள் மற்றும் உரிமம் அமைப்புகள், பல்வேறு அரசு துறைகள் ஒவ்வொன்றிற்கும் ஒளிபுகா அதிகாரத்துவம் மற்றும் விருப்ப அதிகாரங்கள், அரசாங்க கட்டுப்பாட்டு நிறுவனங்களுக்கு சில பொருட்கள் மற்றும் சேவைகளின் மேல் தரும் தனியுரிமை, வெளிப்படையான சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் இல்லாமை ஆகியவை இந்தியாவில் ஊழலுக்கான காரணங்களில் அடங்கும். 

நன்றி
wikipedia

மேலே உள்ள செய்திளைப்பற்றி எதார்த்தமாக பார்க்க நேரிட்டது சரி நமது எண்ணத்தை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள இந்த பதிவை உங்களுக்கு தருகிறேன்.

அரசாங்கத்தில் வேலைக்கு சேர்க்கும்பொழுது நல்ல சோதிடரை வைத்து அவர்களைப்பற்றி தெரிந்துக்கொண்டு சேர்த்தால் இந்த மாதிரி ஊழல் வருவதற்க்கு வாய்ப்பு கிடையாது. நீங்களே பாருங்கள் காவல்துறைக்கு ஆளை எடுக்கிறார்கள். அவர்களை பார்த்தால் போலீஸ் மாதிரியாகவா தெரிகிறது. போலீஸ் என்றால் நல்ல உயரமாக எடுப்பாக இருப்பார்கள். அனைவரும் செவ்வாயின் காரத்துவத்தோடு இருப்பார்கள். இப்பொழுது உள்ளவர்களை பார்த்தால் அனைவரும் குள்ளமாக இருக்கிறார்கள். சனியின் அம்சத்தில் இருக்கிறார்கள். திருடனே போலீஸ் ஆக இருந்தால் திருடனை எங்கு போய் பிடிப்பது. திருடனே அவன் தானே. அனைத்திலும் வில்லகத்தை கலந்துவிட்டார்கள் அதனால் தான் ஊழல் உருவாகிறது. 

சோதிடர்களுக்கே நாங்கள் லஞ்சம் கொடுத்து சேர்ந்தால் என்ன செய்வது என்று கேட்கிறீர்களா அப்படி நடந்தால் இந்தியாவின் தலைவிதியை யாராலும் மாற்றமுடியாது. சோதிடம் மூலம் நல்லவரை தேர்ந்தெடுக்கமுடியும் என்பதால் இதனை சொன்னேன். நம்ம ஆளுங்க பிறந்த தேதியை மாற்றிக்கொடுப்பார்கள் தான். நல்ல சோதிடர்களுக்கு சோதிடத்தை பார்க்காமலேயே ஆளை பற்றி கணக்கு செய்துவிடமுடியும்.

ஒவ்வொரு கிரகத்தின் அம்சத்தை சம்பந்தப்பட்ட கிரகம் ஒவ்வொரு மனிதனிடத்தில் வெளிப்படுத்தும் அதனை நாம் பார்க்கும்பொழுதே தெரிந்துக்கொள்ளலாம்.

சும்மா ஜாலிக்காக இந்த பதிவை எழுதினேன். இதனை சாத்தியப்படுத்துவது என்பது மிகப்பெரிய சவால். செய்தால் நாடு நன்றாக இருக்கும். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

குலதெய்வ வழிபாடு


வணக்கம் நண்பர்களே!
                    இப்பொழுது சென்னையில் இருக்கும் நமது சோதிடநண்பர்கள் எல்லாம் என்னை அவர்கள் வந்து சந்திப்பதற்க்கு பதில் அவர்களை நான் சென்று சந்திக்கிறேன். இதற்கு காரணம் ஒன்று நான் அவர்களின் வீட்டிற்க்கு செல்வதால் நமது அம்மனின் வழியாக அவர்களுக்கு நல்லது நடக்கும் மற்றோன்று அவர்களின் வீட்டை நான் பார்த்தால் அவர்களின் வீடுகளில் குலதெய்வத்தின் அருள் எப்படி இருக்கும் என்று பார்த்து அதற்கு தகுந்த ஏற்பாடு செய்யலாம் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு வீட்டிற்க்கும் நான் செல்லுகிறேன்.

குலதெய்வத்தை பொருத்தவரை நான் பல பதிவுகளை எழுதியுள்ளேன். பங்காளிகளாக சேர்ந்து ஒரு தெய்வத்தை வணங்கிவரலாம். இப்படி பங்காளிகள் வணங்கினாலும் ஒருவருக்கு மட்டுமே அந்த குலதெய்வம் அனைத்தையும் வழங்கிக்கொண்டிருக்கும். பலர் கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பார்கள். இந்த நிலை எதனால் ஏற்படுகிறது என்றால் குலதெய்வத்தில் இருந்து சம்பந்தப்பட்ட நபர் மண் எடுத்து வந்து அதனை பூஜை செய்து அவர்களின் பக்கமாக இதனை திருப்பிவிடுவார்கள். இது இப்பொழுது இல்லை என்றாலும் ஒரு சில இடங்களில் இது நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

பிறரை கஷ்டப்படுத்தி நாம் மட்டும் வாழவேண்டும் என்ற நினைப்பு ஒரு சில ஆண்டுகள் வரை நன்றாக இருக்கலாம். அதன் பிறகு அவர்களுக்கு பிரச்சினையை தரும். நான் செல்லும் வீடுகளுக்கு அவர்களும் வாழவேண்டும் அவர்களை சேர்ந்தவர்களும் வாழவேண்டும் அனைவருக்கும் பொதுவான சக்தியாக கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே செய்வது எனது இயல்பு.

குலதெய்வ வழிபாட்டை ஏன் நான் அதிகமாக சொல்லுவதற்க்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும். வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை பல ஆன்மீகவழிகளில் முயற்சி செய்து அதனை பார்த்து உங்களுக்கு சொல்லுகிறேன். 

பிற தெய்வத்தை வணங்குங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் பிறதெய்வத்தை வணங்கினாலும் உங்களின் குலதெய்வத்தை வணங்கிய பிறகு நீங்கள் பிற தெய்வங்களின் கோவிலுக்கு சென்றால் மட்டும் அந்த தெய்வத்தின் புண்ணியம் கிடைக்கும். இல்லை என்றால் கண்டிப்பாக கிடைக்காது.

ஒரு சில வருடங்களுக்கு முன்பு துர்கை வழிபாடு விசேஷமாக இருந்தது. இன்று காலபைரவர் விசேஷமாக இருக்கிறார். இந்த வழிபாடு எல்லாம் ஒரு சிலரின் சுயநலத்திற்க்காக பரப்பும் ஒரு செயல்தானே தவிர வேறு ஒன்றும் கிடையாது. இந்த வழிபாடு எல்லாம் ஒரு சில ஆண்டுகளில் காணாமல் போய்விடும் ஆனால் என்றும் நிலைத்திருக்கும் ஒரே வழிபாடு குலதெய்வ வழிபாடு மட்டுமே. 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

தசாநாதன் பகுதி 6


வணக்கம் நண்பர்களே!
                     பொதுவாக எந்த ஒரு தசா நடந்தாலும் ஒரு மனிதனுக்கு அந்த தசாநாதனின் குணம் வெளிப்படும் அதே நேரத்தில் அந்த மனிதனின் சுயகுணத்தையும் அறிந்து தசாப்பலனை சொன்னால் மட்டுமே சொல்லும் ஜாதக பலன் சரியாக அமையும். இதனை நான் பல ஜாதகங்களை பார்க்கும்பொழுது  தெரிந்தது.

ஒருவரின் சுயகுணம் என்பது மிகமுக்கியம். ஒருவருக்கு திருட்டு குணம் இருந்து அவருக்கு கெடுதல் தரும் தசா நடந்தால் அது தான் அவரின் வாழ்க்கையில் பொன்னான நேரமாக இருக்கும். இப்பொழுது அரசியல்வாதிகள் முக்கால்வாசி பேர் பொதுசொத்தை திருடுகிறார்கள். ஒரு அரசியல்வாதி உங்களி்டம் வருகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு ஆறாவது வீட்டு தசா நடந்துக்கொண்டு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு நாம் பலன் சொல்லும்பொழுது உங்களுக்கு கஷ்டகாலம் இந்த காலத்தில் ஜாக்கிரதையாக இருங்கள் என்று சொல்லக்கூடாது.

அவரிடம் நீங்கள் தசாவின் சுயபுத்தி முடிந்துவிட்டால் இனி தான் உங்களுக்கு நல்ல காலம் வருகிறது இனி நீங்கள் கோடிஸ்வரர் ஆக போகிறீர்கள் என்று சொல்லுங்கள். நீங்கள் சொல்லுவது போலவே நடைபெறும். ஏன் என்றால் அரசியலில் கொள்ளை அடிப்பதற்க்கு ஏற்ற காலம் எது என்றால் இப்படிபட்ட தசா ஒருவருக்கு நடைபெற்றால் அவருக்கு பொன்னான வாய்ப்பு உருவாகும். இவர்கள் அடிக்கும் பணத்தை எவனாலும் கண்டுபிடிக்கமுடியாது. கோடிக்கணக்கில் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு எல்லாம் கெடுதல் தசாவில் தான் சம்பாதிப்பார்கள். இவர்கள் அடிக்கும் பணத்தை கண்டுபிடிக்கவே முடியாதற்க்கு காரணம் இந்த மாதிரி தசாக்கள் செய்யும் வேலை.

எனது சோதிடவாடிக்கையாளர் ஒருவர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இப்பொழுது எல்லாம் இந்த தேர்தலுக்கு செய்யும் செலவை எடுப்பது என்றால் முடியாத காரியம். ஏன் என்றால் பணத்தை அள்ளி வீசினால் மட்டுமே ஜெயிக்கமுடியும் என்ற நிலை. இவர்கள் செய்யும் செலவை அந்த ஊராட்சியில் இருந்து எடுப்பது கடினமான ஒன்று. பல வருடங்களுக்கு முன்பு அவர் போட்டியிட்டார் நல்ல செலவு செய்தார். அவர் வெற்றியும் பெற்றார்.

கொஞ்சகாலத்தில் அவர் என்னிடம் சோதிடம் பார்த்தார். அவருக்கு ஆறாவது வீட்டு தசா நடைபெற்றுக்கொண்டு இருந்தது. நான் சொன்னேன் இன்னும் ஒரு மாதத்தில் உங்களுக்கு பணம் தேடிவரும். நல்ல செல்வாக்குடன் வாழபோகிறீர்கள் என்று சொன்னேன். அவர் சொன்னார் அந்த ஊராட்சியில் பணம் என்பதே கிடையாது. தெருவிளக்கு போடகூடா பணம் இல்லை. எங்கு இருந்து பணம் வரும் என்று கேட்டார். நான் உங்களுக்கு வரும் என்று மட்டும் சொன்னேன். அவர் போய்விட்டார்.

சரியாக ஒரு மாதத்திற்க்கு பிறகு அரசாங்கத்தில் ஏரி ஆறு போன்றவற்றை தூர்வார வேண்டும் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார்கள். அதனை செயல்படுத்தினார்கள். தலைவர் காட்டில் பணமழை கொட்டியது. இப்படியும் தசா செயல்படும் என்பதை சொல்லுவதற்க்காக இதனை உங்களிடம் சொன்னேன்.

அவரின் சுயகுணத்தை ஆராய்ந்து தசாபலனை சொல்லும்பொழுது சரியான பலன் கிடைக்கும். ஒருவர் நல்லவராக இருந்து மறைவுவீட்டு தசா நடைபெற்றால் அவரை உண்டு இல்லை என்று செய்துவிடும். ஒருவரின் குணாதிசயத்தை கண்டுபிடித்து அவருக்கு பலனை நாம் சொல்லவேண்டும்..

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Sunday, July 21, 2013

குருவே அம்மன்


வணக்கம் நண்பர்களே !
                     இப்பொழுது பல நண்பர்கள் காயத்ரி மந்திர பயிற்சி செய்துக்கொண்டு வருகிறார்கள். இந்த காயத்ரி மந்திர பயிற்சி பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இவர் சொல்லுதை கேட்டு நாம் செய்தால் அப்படி என்ன நடந்துவிடபோகிறது என்று நினைக்கலாம்.

காயத்ரி மந்திரங்கள் பல ஆண்டுகளாக இருக்கின்ற ஒன்று தான் நான் அதனை ஏற்றுக்கொள்கிறேன். இந்த மந்திரங்களை நீங்கள் உரு ஏற்றினாலும் அந்த உரு ஏற்றுவதற்க்கு அதிகமான சக்தியை கொடுத்து உதவ செய்வது நமது அம்மன். என்னிடம் பல பேர் பேசி இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் குறைந்தது நாற்பது வருடங்கள் எல்லாம் காயத்ரி மந்திர உபசானை செய்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு முன்னேற்றமும் நடைபெறவில்லை. என்னிடம் வந்து இந்த பயிற்சியை செய்தவுடன் ஒரு சில நாட்களிலேயே சிறப்பான அனுபத்தை பெற்று இருக்கிறார்கள்.

நான் எதுவும் இதில் செய்யவில்லை. எல்லாம் நமது அம்மனின் அருள் அவர்களுக்கு கிடைக்கிறது அவர்கள் செய்யும் தெய்வங்களின் உரு உடனே பலனை தருகிறது.காயத்ரி மந்திரங்கள் என்பது உண்மை தான் ஆனால் அதனை சொல்லிக்கொடுக்கவும் ஒரு குரு தேவை. அந்த குருவிடம் நல்ல சக்தி இருந்தால் மட்டுமே அந்த மந்திரமும் செயல்படமுடியும். நமது பிளாக் வழியாக செய்யும் நண்பர்களுக்கு நமது அம்மனே குருவாக இருந்து கற்பிக்கிறாள் என்பது மட்டுமே உண்மையான ஒன்று. 

நீங்கள் இதுவரை மந்திரங்கள் பயிற்சி பெற்றாலும் இந்த பயிற்சியை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் பல வருடங்கள் ஒரே மந்திரத்தை உரு ஏற்றி செய்துக்கொண்டு இருக்கலாம். அதனால் ஒன்றும் பயன் ஏற்படவில்லை என்றால் அந்த மந்திரத்தை எடுத்துக்கொண்டு என்னிடம் தொடர்புக்கொண்ட பிறகு செய்யுங்கள். உங்களுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும்.

ஒரு சிலர் என்ன நினைக்கிறார்கள் என்றால் நாம் இந்த மாதிரி பயிற்சி எல்லாம் செய்தால் ஆன்மீகவாதியாக மாறி சாமியாராகிவிடுவோம் நமது இல்லறவாழ்க்கை பாதிக்கப்படசெய்யும் என்றும் நினைக்கிறார்கள். அவர்களுக்கு சொல்லிக்கொள்வது ஒன்று நீங்கள் நீங்களாவே இருப்பீர்கள் என்ன அதிக சந்தோஷத்தோடு மற்றும் மனஅமைதியோடும் இருப்பீர்கள். பயம்கொள்ளாமல் உடனே பயிற்சி எடுக்க பாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.