Followers

Wednesday, July 24, 2013

பீஜமந்திரம்


வணக்கம் நண்பர்களே!
                     நமது ஜாதக கதம்பம் வழியாக மந்திர பயிற்சி செய்கிறார்கள். இவற்றுக்கான மந்திரங்களை நான் ஒருபோதும் உங்களுக்கு கொடுக்கவில்லை ஏன் என்றால் ஒவ்வொரு தெய்வத்திற்க்கும் ஒவ்வொரு மந்திரங்கள் இருக்கும். உங்களுக்கு விரும்பிய தெய்வங்களின் மந்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்க்காக இந்த ஏற்பாட்டை செய்தேன்.

பல நண்பர்கள் என்னிடம் சொன்னார்கள். ஏன் நீங்களாவே ஒரு மந்திரத்தை சொல்லவேண்டியது தானே அல்லது கண்டிபிடித்து தாருங்கள் என்றும் சொன்னார்கள். நமக்கு அந்த வேலை எல்லாம் சரிப்பட்டு வராது அதற்கு காரணம் நமது மதத்தில் அனைத்தையும் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்கள். அதனை நாம் தெரிந்துக்கொண்டு உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள மட்டுமே இதனை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

நான் காயத்ரி மந்திரங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லியுள்ளேன். காயத்ரி மந்திரம் சாதாரண மனிதர்களுக்கும் பயிற்சி எடுத்து உயர்ந்த நிலைக்கு செல்லவைக்கும்.

பீஜம் என்பது விதை என்று அர்த்தம். விதை நாம் இட்டால் தான் அது முளைக்க முடியும். பீஜாட்சரங்கள் என்றால் மந்திரங்களின் வித்துக்கள் என்று பொருள்படும். பீஜாட்சரங்களை மந்திரத்தோடு இணைத்து நாம் சொல்லவேண்டும். அப்படி சொன்னால் மட்டுமே நமக்கு மந்திரசித்தி கிடைக்கும்.

பீஜாசாட்சரங்கள் இல்லை என்றால் ஒரு சாதாரண மனிதனால் ஆன்மீகத்தில் உயரமுடியாது. ஐம் என்று ஒரு வார்த்தை வரும் இந்த வார்த்தை எதனை குறிக்கிறது என்றால் நமது உடலை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது.

ஹ்ரீம் என்று ஒரு வார்த்தை வரும் இந்த வார்த்தை எதனை குறிக்கிறது என்றால் நமது மனதை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது.

ஓம் என்று ஒரு வார்த்தை வரும் இந்த வார்த்தை எதனை குறிக்கிறது என்றால் நமது மூலாதாரத்தை எழுப்பும் ஆற்றல் உள்ளது.

இந்த மந்திரங்களை நாம் சேர்த்து சொல்லும்பொழுது மட்டுமே  இந்த மந்திர எழுத்துக்குள் வரவேண்டும் அப்பொழுது மட்டுமே நமக்கு மந்திரசித்தி கிடைக்கும். இதனை தான் பீஜாசாரங்கள் என்று சொல்லுவார்கள். இது நமது உடலுக்குள் சென்று ஆத்மாவையும் உடலையும் சரியான விதத்தில் உயர்த்த செய்யும். உங்களுக்குள் ஆன்மீகம் பீஜாசாரங்கள் வழியாக தான் நடைபெறும். இதனை நமது முன்னோர்கள் அறிந்து தெளிவாக உருவாக்கி வைத்துள்ளார்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: