Followers

Sunday, July 14, 2013

அதிர்ஷ்டம் : தசா அனுபவம்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு ஜாதகத்தை பார்க்கலாம். இந்த ஜாதகம் என்னுடைய அனுபவத்தில் பார்த்த ஜாதகம் அதனை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன்.

இவரின் லக்கினம் மிதுனம். மிதுனராசியை ராசியை லக்கினமாக கொண்டுள்ளார். லக்கினத்தில் சூரியன் அமர்ந்துள்ளார். சூரியன் லக்கினத்தில் அமர்ந்துள்ளதால் இவரின் தலை ஏறு நெற்றியாக இருக்கிறது. குடும்பஸ்தானம் என்னும் இரண்டாம் வீட்டில் செவ்வாய் கிரகம் அமர்ந்துள்ளது. லக்கினாதிபதியோடு செவ்வாய் அமர்ந்திருக்கிறார். தனவரவுகள் நன்றாக உள்ளது. குடும்பத்தில் எந்த பிரச்சினையும் இல்லை.

இரண்டாவது வீட்டு அதிபதியும் மூன்றாவது வீட்டு அதிபதியும் கேந்திரம் ஏறி இருக்கிறது. இவருக்கு என்ன மாதிரி எண்ணம் வரும் என்றால் திடீர் பணவரவு மீது அதிகமான ஆசை ஏற்பட்டது. லாட்டரி சீட்டு, ஷேர் மார்க்கெட் போன்றவற்றில் அதிகமாக மனம் ஈடுபட்டது.

சனியும் செவ்வாயும் நீசம் பெற்று அமர்ந்து இருக்கிறார்கள். இவருக்கு திடீர் பணவரவு மீது எப்பொழுது அதிகம் நாட்டம் இருந்தது என்றால் சரியாக குரு தசா ஆரம்பித்தவுடன் வந்தது. குரு தசா 18/08/1999 அன்று ஆரம்பம் ஆனது. குரு இவரின் ஜாதகத்தில் ஐந்தாவது வீட்டில் அமர்ந்துள்ளார். குரு திரிகோணம் ஏறி இருக்கிறது, திரிகோணத்தில் நல்ல கிரகங்கள் ஏறி இருப்பது நல்லது செய்யும். அது எப்பொழுது செய்யும் என்று கணக்கு இருக்கிறது அல்லவா. 



குரு தசாவில் குரு புத்தி 18.08.1999 to 06.10.2001 வரை

ஐந்தாவது வீடு தான் விளையாட்டு துறையை குறிக்கும் இடம். விளையாட்டு போட்டியில் வெற்றி பெறுவார்களா அல்லது தோல்வி பெறுவார்களா என்று காட்டக்கூடிய இடம். சுக்கிரனின் வீட்டில் குரு அமர்ந்ததால் அதிகமான செல்வாக்கு படைத்த விளையாட்டை விளையாட ஆரம்பித்தார். 

குதிரை பந்தயத்தில் பங்குக்கொண்டு அதில் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து குதிரை ரேஸ்ஸில் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கினார்..  இவர் ஒரு அரசு அதிகாரி இவர் அலுவலகத்தில் இருந்ததை விட குதிரை ரேஸ் நடைபெறும் இடத்தில் இருந்தது தான் அதிகம்.

குரு தசாவில் சனியின் புத்தி 06.10.2001 to 18.04.2004 வரை

குதிரை ரேஸ்ஸில் பணத்தை விட்டார். சனிகிரகம் நீசம் பெற்று உள்ளது. செவ்வாயும் நீசம் பெற்று உள்ளார். வீட்டில் இருந்த மனைவியி்ன் நகை சேமித்து வைத்திருந்த பணம் அனைத்தையும் இழந்தார். 

குரு தசாவை பொறுத்தவரை ஒருவரை உட்கார்ந்து வைத்து சம்பாதிக்க வைக்கும் ஆனால் குரு தசா குரு புத்தி மற்றும் சனி புத்தி முடியவேண்டும் அப்பொழுது மட்டுமே குரு தசா நன்றாக வேலை செய்ய ஆரம்பிக்கும்.

குரு இவரின் ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டில் அமர்ந்துள்ளார். அவர் ஏழாம் வீட்டிற்க்கு மற்றும் பத்தாவது வீட்டிற்க்கு அதிபதியாகவும் வருகிறார். இவருக்கு புதன் புத்தியில் மறுபடியும் இவர் நல்ல நிலைமைக்கு வந்தார். இவர் நல்ல சம்பாதித்தார் ஷேர் மார்க்கெட்டில் இறங்கி சம்பாதித்தார்.

பல நண்பர்கள் குரு தசாவின் சுயபுத்தியில் மற்றும் சனியின் புத்தியில் இப்படி ஈடுபட்டு பணத்தை இழந்து இருப்பீர்கள். கண்டிப்பாக குரு தசா முடிவதற்க்குள் அந்த தசா உங்களை தூக்கிவிடும். பெரும்பாலும் இவ்வாறு அனுபத்தில் நடந்துள்ளதால் இதனை சொல்லுகிறேன்.

சொல்லவந்த சேதியை மட்டும் சொல்லிவிட்டேன் அது இல்லை இது இல்லை என்று என்னிடம் கேட்காதீர்கள்.


போனஸ் தகவல்

லாட்டரி நம்பர் எந்த நம்பர் விழும் மற்றும் இதுமாதிரியான வேலைகளுக்கு நம்பர் தானே முக்கியம். இந்த நம்பரை தெரிந்துவிட்டால் போதுமே என்று பல சாமியார்களை நாடி செல்வது பல பேர்களின் வேலையாக இருக்கின்றது. ஒரு சில சாமியார்கள் சரியாக சொல்லுவார்கள். ஹரித்தூவரில் இப்படிபட்ட நிகழ்வை பார்த்த அனுபவம் இருக்கிறது. அதற்ககாக என்னிடம் வந்து கேட்காதீர்கள். தெரிந்துக்கொள்ளுங்கள் என்பதற்க்காக இதனை சொன்னேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

3 comments:

rs said...

1. 7th and 10th place belongs to Guru but u have written as 7th and 9th place. And written as 10th lord neecham but the lord guru sitting in 5th place. This may pl be corrected.

rajeshsubbu said...

வணக்கம் rs திருத்திவிட்டேன்.
நன்றி.

rs said...

Thanks for the correction