Followers

Sunday, July 21, 2013

அம்மனின் பூஜை


வணக்கம் நண்பர்களே!
                     நமது அம்மனுக்கு இந்த மாத பூஜையை செய்யும்பொழுது ஒரு நாளுக்கு முன்பு மட்டுமே பதிவில் தெரிவித்து இருந்தேன். அதற்க்கு பல நண்பர்கள் வருத்தப்பட்டார்கள் ஏன் முன்பே பதிவில் வெளியிடவில்லை என்றும் கேட்டுருந்தார்கள். ஏன் தெரிவிக்கபடவில்லை என்பதையும் பதிவில் சொல்லிருந்தேன்.

நமது அம்மனுக்கு பூஜை செய்யப்படவேண்டும் என்று சொன்னவுடன்  எனது பிரான்ஸ் நண்பர் சுகி அவர்கள் பணம் அனுப்பிருந்தார். முதலில் எனக்கு மெயிலில் தொடர்புக்கொண்ட நண்பர் கிருஷ்ணகண்ணப்பன் தான். இவர் என்னை தொடர்புக்கொண்டு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டுருந்தார். நீங்களாவே பார்த்து அனுப்புங்கள் என்று சொல்லிருந்தேன். அவர் அனுப்பிய பணம் போதுமான ஒன்று. அதனை வைத்தே பூஜை செய்துவிடலாம். தொடர்ந்து இவர் பணம் அனுப்பிக்கொண்டு இருக்கிறார். 

கடைசி முறை கூட இவருக்காக தான் செய்தேன். இவர் வெளிநாட்டில் இருப்பதால் அடிக்கடி பயணமும் செல்வதால் இவர் வெளிநாட்டில் இருக்கும்பொழுது என்னை தொடர்புக்கொள்ளவில்லை.  இரண்டு நாளைக்கு முன்பு என்னை வந்து சந்தித்தார். இளம்வயதில் ஆன்மீகத்தின் மீது நல்ல பற்றுடன் இருக்கிறார் என்று பார்க்கும்பொழுது உண்மையில் மகிழ்ச்சியாகவே இருந்தது.

பல நண்பர்கள் எனக்கு பணம் அனுப்பியவர்களில் இருக்கிறார்கள்.தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அனைவரும் நமது அம்மனின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை இது காட்டுக்கிறது. தமிழ்மாதத்தில் ஆடி மாதம் என்பதால் அம்மனுக்கு விசேஷமான மாதமாகவும் இருப்பதால் இந்த ஆடி மாதத்திலேயே பூஜை வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். வரும் ஆகஸ்டு மாதத்தில் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் பூஜை செய்யப்படும். வரும் பதிவுகளில் உங்களுக்கு தேதியை தெரியப்படுத்துக்கிறேன்.

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். அம்மனின் பூஜையில் உங்களின் பங்களிப்பு தேவை என்பதால் முன்கூட்டியே தெரியப்படுத்திவிட்டேன். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: