Followers

Monday, July 22, 2013

வீட்டில் செய்யும் ஹோமம்


வணக்கம் நண்பர்களே!
                    கடந்த வாரம் ஒரு நண்பரின் வீட்டிற்க்கு சென்றுருந்தேன். அவர்கள் ஒரு கேள்வியை கேட்டார்கள். அதாவது நீங்கள் ஹோமம் செய்து தருகிறேன் என்று சொல்லியுள்ளீர்கள். அந்த ஹோமத்தை நாங்கள் எங்களின் வீட்டில் செய்கிறோம் பிறகு நாங்கள் வேறு ஒரு வீட்டிற்க்கு செல்லும்பொழுது அதே ஹோமத்தை செய்யவேண்டுமா என்று கேட்டார்கள் அவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக உங்களுக்கும் புரியவேண்டும் என்பதற்க்காக இதனை தருகிறேன்.

நமது அம்மனை வைத்து உங்களின் வீடுகளில் ஹோமம் செய்கிறேன். இப்படி செய்யும்பொழுது உங்களுக்கு ஏதாவது ஒரு வாய்ப்பை நமது அம்மன் ஏற்படுத்திக்கொடுக்கும். அதே நேரத்தில் உங்களின் குலதெய்வத்தின் அருளையும் பெற்று தரும். இதனை ஏன் ஹோமம் செய்து தருகிறேன் என்றால் எந்த சக்தியையும் நிலைநாட்டவேண்டும் என்றால் அதற்கு அக்னி தேவை என்பதால் ஹோமம் செய்து கொடுக்கிறேன்.

இந்த ஹோமம் செய்யும்பொழுது உங்களின் வீட்டில் ஏதாவது துர்சக்திகள் இருந்தால் அதனை வெளியேற்றிவிடும். ஒரு வீட்டில் ஹோமம் செய்யும்பொழுது அந்த வீட்டு நபர்களை வைத்து தான் செய்கிறேன். அவர்களை வைத்து செய்வதால் அவர்களுக்கும் ஒரு பாதுகாப்பை தருவதற்க்கு வழி செய்துவிடுவேன். உங்களின் வீட்டிற்க்கு பிறரின் தீயஎண்ணங்கள் உங்களின் வீட்டிற்க்குள் வராது. அதே நேரத்தில் உங்களின் வீடு ஒரு பாதுகாப்பு வளையம்போல் காக்கப்படும்.

நீங்கள் அந்த வீட்டை விட்டு வேறு வீட்டிற்க்கு சென்றால் உங்களுக்கு மட்டும் காப்பு இருக்கும். புதிய வீட்டிற்க்கு அந்த காப்பு இருக்காது.வீட்டில் ஏதும் துர்சக்திகள் இருந்தால் அது வெளியில் செல்லாது. புதிய வீட்டிற்க்கும் நீங்கள் ஹோமம் செய்யப்படவேண்டும். அப்பொழுது மட்டுமே அந்த வீட்டிற்க்கு காப்பு ஏற்படுத்தமுடியும்.

புதிதாக நீங்கள் வீடு குடிபோகும்பொழுது நீங்கள் கணபதி ஹோமம் செய்வார்கள் அப்படி செய்தாலும் நாங்கள் தரும் முறையிலும் செய்யப்பட வேண்டும்.அப்பொழுது மட்டும் குலதெய்வத்தை நிலைநாட்டமுடியும். உங்களின் வீட்டில் நல்ல சக்தியை நிறுத்தமுடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: