Followers

Wednesday, July 24, 2013

குரு பலன் பரிகாரம்


வணக்கம் நண்பர்களே!
                     நேற்றைய பதிவில் குரு பலன் என்பதைப்பற்றி ஒரு பதிவை எழுதியிருந்தேன். அதில் ஒரு கேள்வியை கேட்டுருந்தேன் அதற்கு ஒருவரும் பதில் தரவில்லை.

சோதிடம் பார்க்க நிறைய பேர் இப்பொழுது இருக்கிறார்கள். கணிணியே முக்கால்வாசி கணித்து கொடுத்துவிடுகிறது. நம்மிடம் வரும் வாடிக்கையாளர்களுக்கு நாம் சொல்லும் பரிகாரம் சரியாக போய்சேர்ந்து அவர்கள் அந்த பிரச்சினையில் இருந்து காப்பாற்றபடவேண்டும். மக்களை காப்பாற்ற தான் சோதிடம், சோதிட பாடங்களை அப்படியே மனப்பாடம் செய்து வரும் நபர்களுக்கு சொல்லுவதல் என்ன நடந்துவிடபோகிறது. உங்களால் உங்களை தேடி வரும் நபர்களை காப்பாற்றபடவேண்டும். அதற்கு மட்டுமே சோதிடத்தை படிக்க வேண்டும்.

குருவின் பலனோடு ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்றால் பெற்றோர்கள் அதிகமான பக்தியோடு இருக்கவேண்டும். குழந்தை வயிற்றில் இருக்கும்பொழுது மந்திர பயிற்சி செய்ய வேண்டும்.  மந்திரங்களை ஆடியோவில் கூட காலையும் மாலையும் கேட்கலாம்.

சாந்தமாக இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று வரலாம். மதங்களைப் பற்றி பேசும் பெரியவர்களுக்கு உதவி செய்யலாம். சொந்த மதத்தை வளர்க்கும் வேலையில் கூட ஈடுபடலாம். ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவியை செய்யலாம்.கல்வியை வளர்க்கும் பொழுது நமக்கு அதிகமான குரு பலன் கிடைக்கும்.

தியானம் செய்யலாம். தியானம் செய்யும் இடம் கூட கோவிலாக இருந்தால் மிக நல்லது. கல்லால் மரத்திற்க்கு கீழ் அமர்ந்து தியானம் செய்யும்பொழுது மிக அதிகமான குரு பலனை பெறமுடியும். இந்த மரம் அதிகமாக காடுகளில் இருப்பதால் அங்கு செல்வது கடினமான ஒன்று.

அல்லது அந்த மரத்தின் குச்சியை கொண்டு வந்துகூட வீட்டில் வைத்து தியானம் செய்யலாம் அல்லது பூஜை செய்யலாம்.சோதிடத்தைப்பற்றி உங்களின் அருகில் இருப்பவர்களுக்கு சொல்லிக்கொடுக்கலாம். ஷீரடி சாய்பாபாவின் பக்தர்களாக மாறலாம். ஹோமங்கள் நடைபெறும் இடத்திற்க்கு சென்று வரலாம்.இதனை எல்லாம் செய்தால் உஙகளின் குழந்தை குரு பலத்தோடு பிறக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: